Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மத்திய வங்கி 101

Featured Replies

இலங்கை மத்திய வங்கி என்றால் என்ன?

இலங்கை மத்திய வங்கி என்பது இலங்கையின் நிதித் துறையில் உச்ச நிறுவனமொன்றாகும். இது 1949இன் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் ஓரளவு சுய நிர்ணய நிறுவனமொன்றாக 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாணயச் சபையொன்றினால் ஆளப்படுகின்றது.

நாணயச் சபை என்றால் என்ன?

மத்திய வங்கியானது தனித்துவமான சட்ட கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இங்கு மத்திய வங்கி கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமொன்றல்ல. நாணய விதிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய அனைத்து அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளுடன் உரித்தளிக்கப்பட்ட நாணயச் சபையின் மீது நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆளுகின்ற அமைப்பாக நாணயச் சபையானது மத்திய வங்கியின் முகாமைத்துவம், தொழிற்பாடு மற்றும் நிருவாகம் என்பவற்றுடன் தொடர்புடைய அனைத்து கொள்கைத் தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கு பொறுப்புடையதாகும். 

 

தற்போது சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தாள்களின் எண்ணிக்கை யாது?

2017 ஒத்தோபர் 30 அன்றுள்ளவாறு ரூ.562.54 பில்லியன் பெறுமதி கொண்ட ஏறக்குறைய 1,052 மில்லியன் எண்ணிக்கையான நாணயத் தாள்கள் சுற்றோட்டத்தில் இருந்ததுடன் ரூ.11.91 பில்லியன் பெறுமதி கொண்ட 5,258 மில்லியன் எண்ணிக்கையான குற்றிகளும் சுற்றோட்டத்தில் இருந்தன. 

 

நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் விசேட கடதாசி எது?

நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் விசேட கடதாசி 100 சதவீதம் பருத்திக் கூழிருந்து தயாரிக்கப்படுகின்றது. இது கடினமான உறுதியான இளையமைப்புமிக்கதாகும். எனினும், ரூ. 200 ஞாபகார்த்தத் தாள் பொலிமரினால் ஆக்கப்பட்டது. 

 

போலி நாணயத் தாளினையும் உண்மையான நாணயத்தாளினையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்?

போலி நாணயத் தாள்களை ஒழிக்கும் விதத்தில் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அனைத்து நாணயத் தாள்களும் உயர்ந்த பாதுகாப்புப் பண்புகளுடனேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. நாணயத் தாளில் அவதானிக்கக்கூடிய முக்கிய பாதுகாப்புப் பண்புகளாகப் பின்வருவன காணப்படுகின்றன:

  • பாதுகாப்பு நூலிழை
  • நீர்வரி அடையாளம்
  • வெளிச்சத்தினூடாகப் பார்த்தல்
  • செதுக்கு வேலைப்பாட்டு (புடைத்து மேலெழுந்த) அச்சிடல்
  • தாளின் அமைப்பு நயம்
  • நுண்ணிய எழுத்து அமைப்பு
  • மூலைக்கல் - நீர்வரி அடையாளம்

வெற்றுக்கண்ணால் பார்க்கக்கூடிய அம்சங்களையும் குறித்த உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நுண்ணிய அம்சங்களையும் வேறு விசேட அம்சங்களையும் அவதானியுங்கள். எப்போதும் பல பாதுகாப்பு அம்சங்களை பரிசோதியுங்கள். ஒரு அம்சத்தின் மீது மாத்திரம் நம்பியிருக்க வேண்டாம். உங்களுக்கு சந்தேகம் எழுமாயின் நிச்சயமாக உண்மையானதாக நீங்கள் அறிந்த தாளுடன் சந்தேகத்திற்கு இடமான தாளினை ஒப்பிடுங்கள்.

 

பயன்படுத்த முடியாத நாணயத் தாள்களை வர்த்தக வங்கிகளிடம் மாற்றிக் கொள்ள முடியுமா?

ஆம்.

சேதமடைந்த/ உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் ஊடாக மாற்றிக் கொள்ள முடியுமா?

இல்லை. எவ்வாறெனினும், வர்த்தக வங்கிகள் சேதமாக்கப்பட்ட/ உருச்சிதைக்கப்பட்ட வங்கித் தாள்களை மாற்றுவதற்காக அல்லது வைப்புச் செய்வதற்காக ஏற்றுக்கொள்ளும் அதன் பின்னர் அவ்வங்கிகள் அத்தாள்களின் மீளளிப்புப் பெறுமதியினைப் பரீட்சிப்பதற்காக/ தீர்மானிப்பதற்காக மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கும்.

 

https://www.cbsl.gov.lk/ta/அடிக்கடி-கேட்கப்படும்-கேள்விகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.