Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!!

Featured Replies

 

''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!!

எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை எச்சரிக்கை செய்யும் விதமாக இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

இந்தியாவில் கடந்த 1974-ல் இந்திரா காந்தி  பிரதமராக இருந்தபோது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அது மீண்டும் கடந்த 1998-ல் வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவருக்கு பாஜக மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், வாஜ்பாய் நினைவு நாளில் பொக்ரானில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியின்போது மரியாதை செலுத்தினார்.  

6psgjsg4

 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்தியாவை அணு ஆயுத பலம் கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்பதில் அடல் பிகாரி வாஜ்பாய் உறுதியாக இருந்தார். அதற்கான களமாக பொக்ரான் அமைந்தது. இந்தியா ஒரு அணுஆயுத சக்தி கொண்ட நாடு. இருப்பினும் எதிரிநாடு அணு ஆயுதத்தை எடுக்காத வரையில் இந்தியா அதனை கையில் எடுக்காது என்ற கொள்கையை வைத்துள்ளது. இதனை உறுதியாக பின்பற்றியும் வருகிறது. இருப்பினும். எதிர்காலத்தில் சூழலை கருத்தில் கொண்டு மாற்றம் ஏற்படலாம்' என்று தெரிவித்தார். 

ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சதித் திட்டங்களை நிறைவேற்ற பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது. 

கடந்த பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதலில் இந்தியா 40 துணை ராணுவத்தினரை பறிகொடுத்தது. இதன்பின்னர் இந்தியா நடத்திய பாலகோட் அதிரடி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் பாதுகாத்து வைத்திருப்பது உள்ளிட்டவைகளால் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

https://www.ndtv.com/tamil/rajnath-singh-says-india-has-been-firm-on-nuclear-no-first-use-policy-what-happens-in-future-depends-2086000?pfrom=home-tamil_bigstory

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

அதை மட்டும் கொடுத்துடாதீங்க... மோடி எங்களை சல்லி சல்லியா தொலைச்சுக் கட்டிடுவாரு... கதிகலங்கும் பாகிஸ்தான்..!

pjimage--15--jpg-710x400xt-jpg_1200x630x

நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் கட்டுபாட்டில் அணு ஆயுதம் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அச்சம் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வாஜ்பாயின் நினைவு நாளில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொக்ரானில் அவரது உருவபடத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அணு ஆயுத சோதனை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘’அணு ஆயுதங்களை இந்தியா முதலில் பயன்படுத்தாது. ஆனால், எதிர்கால சூழலுக்கு ஏற்ப, இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்’ என்று தெரிவித்து இருந்தார். 

ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது. ஏற்கனவே, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததால், பாகிஸ்தான் கடுப்பில் உள்ளது. பயங்கரவாதிகளை ஆதரித்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது அணு ஆயுத கொள்கையில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ராஜ்நாத் பேசியது, பாகிஸ்தானை எச்சரிப்பதாக உள்ளது.

இந்நிலையில், மோடி அரசின் கீழ் அணு ஆயுதம் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’பாசிச, இந்து மேலாதிக்கம் உள்ள மோடி அரசின் கீழ் அணு ஆயுதம் இருந்தால் அது பாதுகாப்பாக இருக்காது. உலக நாடுகள் இதில் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும். இது வெறும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள பிரச்னை அல்ல. இந்த பிரச்னை உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏற்கனவே 40 இஸ்லாமிய மக்கள், கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் வெறிபிடித்தாற் போல் உள்ளனர். உலக நாடுகள் இப்போதே இந்த பிரச்னையில் தலையிட வேண்டும். இல்லையென்றால் இது மேலும் பரவும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

https://tamil.asianetnews.com/world/imran-khan-tweet-about-indias-nuclear-weapon-pwh9rg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.