Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தை அச்சுறுத்தும் குப்பை? ஆபத்தில் பொதுமக்கள்?

Featured Replies

இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகள் குப்பைகளால் நிறைந்து கிடக்கிறது.

அது போதாதென்று வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட வைத்தியசாலை கழிவுகள் வேறு சுங்க திணைக்களத்தில் நிறைந்து கிடக்கிறது.

இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை கழிவுகளை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மாந்தீவு பகுதிகளில் கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகளை திடீரென செங்கலடி வேப்பவெட்டுவான் பகுதியில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கழிவுகளை புதைக்கச் சென்ற இடத்தில் பெரும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதுடன் பொதுமக்கள் செங்கலடி பிரதேச செயலாளர் மற்றும் வைத்திய சாலை அதிகாரிகளுடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கழிவுகளை கொட்ட முடியாது அதிகாரிகள் திரும்பிச் சென்றதுடன் கரடியணறு பொலீசில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி பொலீசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதன்படி நேற்றும் இன்றும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று இன்றை தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . இதன்படி மக்கள் எதிர்ப்பையும் மீறி குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமங்களுக்கு ஏற்ப குறித்த கழிவுகள் புதைக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேநேரம் குறித்த விடயம் தொடர்பாக நேற்று(15) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாகவும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் வைத்தியசாலையில் தேங்கி கிடக்கும் கழிவுகள் அகற்றுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

மட்டக்களப்பு வைத்தியசாலையில் தேங்கி கிடக்கும் கழிவுகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த ஆறு மாதங்களாக கழிவுகள் தேங்கி கிடப்பதாகவும் அதனை அகற்றாவிட்டால் வைத்தியசாலை சுற்றுச்சூழலில் தோற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் இருந்து சேகரிக்கப்படும் மேலதிக கழிவுகளை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து நாள் ஒன்றிற்கு 500 கிலோ கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும் அதன்படி கடந்த ஆறுமாத காலமாக சேகரிக்கப்பட்ட சுமார்

70, 000 கிலோ இடையுடைய குப்பைகள் தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த கழிவுகளை அகற்றும் வரை வைத்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே கழிவுகளை அகற்றும் வரைக்கும் அவசரசிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத என தெரிவித்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் பல சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஆரம்பத்தில் வைத்தியசாலை கழிவுகளை வைத்தியசாலை வளாகத்திற்குள்ளேயே எரிக்கப்பட்டது. அப்போது போது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பின்னர் திராய்மடுவில் கழிவுகளை களஞ்சியப்படுத்தியதாகவும் அதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பின்னர் மாந்தீவில் உள்ள தொழுநோய் வைத்தியசாலை உள்ள பகுதியில் களஞ்சியப் படுத்தியபோது அதுவும் வாவியில் கலப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் நவின முறை ஊடாக தற்போது செங்கலடி வேப்பவெட்டுவான் பகுதியில் குப்பைகளை புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்த போது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.

மாந்தீவில் வைத்தியசாலை கழிவுகளை கொட்டிய போது அது மட்டக்களப்பு வாவியில் கலந்து மீன் உள்ளிட்ட இயற்கை சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதி அது நிறுத்தப்பட்ட போது குறித்த குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் ஒன்றை தெரிவு செய்வதாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முடிவு செய்து ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் மக்கள் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தை தெரிவு செய்ய முடியாமல் போயுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேசத்தில் மக்கள் இல்லாத பல இடங்கள் உண்டு ஆனால் அதனை தெரிவு செய்யாது மக்கள் குடியிருப்பு மற்றும் குளம், பூவல், வயல்கள் உள்ள இடத்தை தெரிவு செய்தது ஏன்? ஏறாவூர் பற்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படவில்லை வேப்பவெட்டுவானில் வைத்தியசாலை கழிவுகளை புதைக்க இடம் கொடுத்தது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது பிரதேச அபிவிருத்தி குழு தலைவரான எனக்கு தெரியாது, பிரதேச சபை தவிசாளருக்கு தெரியாது அங்குள்ள பொதுமக்களுக்கு தெரியாது நீங்கள் அவசர அவசரமாக இப்படியான முடிவை எடுத்துள்ளார்கள். இதனால் தான் பிரச்சினை வரக் காரணம் என்று கூறினார்.

எதனோல் தொழிற்சாலைக்கு பல கூட்டங்களை நடத்திய வைத்தியர்கள் இந்த கூட்டத்திற்கு எத்தனை கூட்டம் போட்டுள்ளார்கள் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினரான எனக்கும் தெரியாது வேப்பவெட்டுவானில் வருடாவருடம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் பகுதி அங்கு கழிவுகளை கொட்டுவது பொறுத்தமில்லை இதற்கு வேறு இடம் தெரிவு செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அதிகாரிகளின் அசமந்தப் போக்கு!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல செயற்றிட்டங்களுக்கு துறை சார் திணைக்கள அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அனுமதிகள் பல பிற்காலத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக சுற்றுசூழல் பாதுகாப்பு, பக்கவிளைவுகளை ஏற்படுத்தல் நிலத்தடிநீர் பிரச்சினைகள், குடிநீர், குப்பை முகாமைத்துவம் உட்பட மாவட்டத்தின் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை வழங்க முடியாமல் போயுள்ளது.

அதே போன்று கடந்த காலங்களில் வைத்தியசாலை கழிவுகளை அகற்றிய விதம் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டே தற்போது அந்தக் கழிவுகளை தங்கள் பகுதிகழில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எங்கு எங்கெல்லாம் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்பட்டதோ அங்கெல்லாம் சரியான முறையில் அதனை மேற்கொல்லவில்லை அது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டதுதான் உண்மை அதனாலே மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பல வருடங்களாக பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில் அதன் பாதிப்புக்களை பொதுமக்கள் மீது சுமத்துவது எந்தவகையில் நியாயம்.

வைத்தியசாலை கழிவுகளை ஆறு மாதங்களுக்கு மேலாக தேக்கிவைத்தது மட்டும் இல்லாமல் குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருவருடத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட குழு ஒரு வருடகாலம் என்ன செய்தது?

கல்குடா பகுதியில் அமைக்கப்பட்ட எதனோல் தொழிற்சாலை தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அந்த எதனோல் தொழிற்சாலைக்கு ஆதரவாக வைத்தியர்கள் பலர் பல கூட்டங்களை நடத்தி மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் ஆனால் மாவட்டத்தின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ள வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவது தொடர்பாகவும் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் எத்தனை விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதனை ஒரு அவசரகால நடவடிக்கையாக ஒருவருடத்திற்கு முன்னரே செயற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாத வைத்தியசாலை நிர்வாகம் இப்போது ஒட்டு மொத்த பாதிப்பையும் பொதுமக்கள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் சுமத்திவிட்டு இருக்க முடியாது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகளை மட்டுமல்ல மாவட்டத்தில் உருவாக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளையும் முகாமைத்துவம் செய்ய ஒரு பொறிமுறை வேண்டும் அதனை உருவாக்க வேண்டியது இங்குள்ள அரசியல் வாதிகளினதும் அதிகாரிகளினதும் பொறுப்பு.

அது குறித்து சிந்திக்காது அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் தங்களுக்குள்ளே மோதிக்கொண்டிருந்தால் வைத்தியசாலை கழிவுகள் வளர்ந்து நிற்பது போல் இன்னும் பல பிரச்சினைகள் இந்த மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் என்பதே நிதர்சனம்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/126187

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.