Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி புலிகள் கேட்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது: மைத்திரிபால.

Featured Replies

விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி புலிகள் கேட்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது: மைத்திரிபால.

விடுதலைப்புலிகள் விமான குண்டு தாக்குதலை நடத்துவதனால் அவர்கள் கேட்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்காது, அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கும் , மரணத்திற்கும் இந்நாட்டு மக்கள் பயப்படப்போவதில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்வு திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;பௌத்த நாடு என்பதனால் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை ஏப்ரல் 30ஆம் திகதி கொண்டாடுகின்றோம்.

ஸ்ரீ.ல.சு.கடசியைச்சேர்ந்த தலைவர்கள் இந்நாட்டு தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுதுள்ளனர் அதேபோல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தது மட்டுமல்லாது அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்.

1983ஆம் முதல் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்த பயங்கரவாதிகள் இன்றுவரையிலும் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து விலகி பயங்கரவாத செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர். மஹிந்த சிந்தனையின் மூலமாக கௌரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்மொழிந்தார். எனினும் பயங்கரவாதிகள் சமாதனத்தில் அக்கறை காட்டாமல் தங்களது பயங்கரவாத செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் மேலிருந்து தாக்குவதற்காக புலிகள் கேட்பதை மஹிந்த அரசாங்கம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்காது, அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கும் , மரணத்திற்கும் இந்நாட்டு மக்கள்அச்சமடைவதில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது யோசனையை முன்வைத்துள்ளது. அந்த யோசனையில் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. சுதந்திர கட்சியின் யோசனைகள் எதிராக வெள்ளிக்கிழமை சர்வகட்சி ஆலோசனை குழுவிடம் ஜனாதிபதியூடாக முன்வைக்கப்படும். ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் மஹிந்த சிந்தனையை அடிப்படையாக கொண்டே சுதந்திரக்கட்சி தனது யோசனையை தயாரித்து முன்வைத்துள்ளது என்றார்.

ஆளுநர் அலவி மௌலானா பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்தி உரையாற்றி மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தொடர்ந்து உரையாற்றுகையில்;நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்நாட்டு மக்களை ஒன்றிணைந்துக்கொண்டு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோது உழைக்கும் வர்க்கம் ஒற்றுமையுடன் செயற்படல் வேண்டும்.

வாசுதேவ நாணயக்காரஇக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார உரையாற்றுகையில், வடக்கிலிருந்து தெற்கு வரையிலான உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும், உழைக்கும் மக்களுக்காக நாம் இன்று மேதினக்கூட்டத்தை நடத்துகின்றபோது, விடுதலைப்புலிகளும் மேதினத்தை கொண்டாட கூடும் அந்த மேதினக்கூட்டம் யுத்தம், தனி இராச்சியத்திற்கான மேதினகூட்டமாகவே இருக்கும்.ஆனால் நாம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான மேதின கூட்டத்தையே நடத்துகின்றோம். வடக்கில் யுத்தத்திற்கும் தெற்கில் விலைவாசி யுத்தத்திற்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்வதற்கு உழைக்கும் வர்க்கத்தினர் ஒன்றிணைய வேண்டும்அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த மேதின கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன உரையாற்றுகையில்;

நாட்டைகட்டியெழுப்புவதற்காக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காணமுடியாது. பயங்கரவாதம் ஒரு காயமாகும். உடலில் சீனி நோய் ஏற்பட்டால் அந்த புண்ணை ஒருபோதும் குணப்படுத்த முடியாது.இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 1956 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் அணைத்தையும் எதிர்த்தனர்.இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சகல கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியினரும் இருக்கின்றனர். ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் அடுத்த தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்து ஏனையோரையும் ஒன்றிணைப்பேன். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது அந்த ஒப்பந்தத்தை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவே உடைத்தெறிந்து விட்டார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் பல தலைவர்களை இழந்து விட்டார். இந்த யுகத்தில் மஹிந்தவை இழக்க முடியாது என்பதனால் சகலரையும் இணைத்துக்கொண்டு பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்வதற்கு வழிசமைப்போம். பிரதியமைச்சர் வடிவேல் சுரேஸ்இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் உரையாற்றுகையில்;மலையகம் என்றால் தோட்டத்தொழிலாளர்கள் என்று சிலருக்கு ஞாபகம் வரும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்துள்ளார். மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்துவதற்கு என்னை மட்டுமல்லாது மலையகத்தை சேர்ந்த பலரை அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் சேர்த்துக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நாளில் தொழிலாளர்கள் ஒன்றினைவதன் மூலமாகவே முதலாளிமார்களின் விலங்குகளை உடைத்தெறிய முடியும். இந்த அரசாங்கத்தின் மூலமாகவே மலையத்தை சேர்ந்த 3179 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி மலையகத்தின் கல்வி கண்ணை திறந்துள்ளார். அத்துடன் மலையக அபிவிருத்திக்கென வீடமைப்பு, மின்சாரம், வீதி அபிவிருத்தி என பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அடுத்த மேதின கூட்டத்திற்கு மலையகத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேரை நான் கொண்டுத்து வருவேன் என்றார். அமைச்சர் திஸ்ஸ வித்தாரண இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண உரையாற்றுகையில் ;நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டுமாயின் மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஓர் இலங்கையாக கட்டியெழுப்ப வேண்டும். பிரபாகரனின் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். பிரிவினவாத பயங்கரவாதத்தை தோற்கடிப்பதன் மூலமாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் . இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சர்வ கட்சி ஆலோசனை குழு செயல்பட்டு வருகின்றது. கட்சிகள் இணைந்து தீர்வு திட்டத்தை முன்வைத்தால் தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடமிருந்து விலகி ஒரு இலங்கைக்குள் செயல்படுவார்கள் தமிழ் மக்களிடமிருந்து விடுதலைப்புலிகளை பிரித்தால் மட்டுமே விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியும் .இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மட்டுமே மனித வளங்களை தவிர்களாம்.

அமைச்சர் தி.மு ஜயரத்ன பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான தி.மு. ஜயரத்ன உரையாற்றுகையில் இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் முகம் கொடுத்துக்கொண்டிருப்பதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கவும் ழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதுள்ளது. இனப்பிரச்சினைக்கு அமைச்சரவை, ஜனாதிபதி, பாராளுமன்றத்திற்கு மட்டுமே முடியாதுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மட்டுமே வாழ்க்கை பிரச்சினைக்கும் தீர்டு காணலாம் சில கட்சிகள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர்.நாட்டை பாதுகாத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாவிட்டால் நாட்டில் தோன்றியுள்ள எந்த வொரு பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது என்று தெரிவித்தார்.

-Virakesari-

Edited by யாழ்வினோ

, மரணத்திற்கும் இந்நாட்டு மக்கள் பயப்படப்போவதில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

மரணத்துக்கு பயப்பிடாத சிங்களவனா மகே அம்மே கொட்டி கானவா என அலறி அடிச்சு ஓடத்தெரியும்

மகிந்த சமரசிங்க வேட்டி கழருவதை பார்க்காமல் இப்படி ஓடுவது மரணபாத்திலா அல்லது வேறு ஏதிலுமா என எல்லோரும் இந்த வீடியோ இணைப்பை பார்த்து சொல்லிங்கோ

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால சிறிசேன யார்? மதவாச்சி எம்பி மைத்திரிபால சேனநாயக்காவுடைய வாரிசா? அப்பிடியெண்டால் அவரில தமிழ் இரத்தமும் ஓடுமெண்டு நினைக்கிறன். அதாலதான் மரணத்துக்கெல்லாம் பயப்படமாட்டம் எண்டு கொஞ்சம் துணிவா சொல்லுறாரோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.