Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாது ;வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் அமைப்புக்கள்

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படகூடாது. என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த அமைப்புக்கள் கூட்டாக கூறியுள்ளதுடன், திறக்கப்பட்டால் போராட்டம் நடாத்துவோம் எனவும் கூறியுள்ளனா். 

 

000.jpeg

 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். 

இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்களை திறப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் பிராந்திய அலுவலகங்களை திறக்கமாட்டோம் என கூறியிருந்தார். 

இந்த அலுவலகத்தினால் எந்த பலனும் கிடையாது என்பதாலேயே எதிர்த்து வருகிறோம். இந்த நிலையில் வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். 

அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசியல்வாதிகளும் எமது போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான தினத்தில் வடக்கு, கிழக்கில் போராட்டங்களை செய்ய தீர்மானித்துள்ளோம். 

முள்ளிவாய்க்காலில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்திலும், கல்முனையிலும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள், மக்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

https://www.virakesari.lk/article/63050

  • தொடங்கியவர்

காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழந்த சோகம்

வவுனியாவில் தனது 26வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். 

IMG20190820125211.jpg

 

வவுனியாவில் தமது மகனைத் தேடி சுழற்சி முறையிலான தொடர்போராட்டம் இன்றுடன் 913 ஆவது நாளை எட்டியுள்ளது இந்நிலையில் தனது மகன் அச்சுதன் வயது 26 கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் கையை உயர்த்தி ஒப்படைக்கப்பட்ட தனது மகனை மீட்கும் போராட்டத்தில் இணைந்திருந்த வேலாயுதம் செல்வராசா 56வயது மகிழங்குளம் ஓமந்தை இடத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு நேற்று இரவு 10மணியளவில் வைத்தியசாலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக‌ அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். இவருடைய மனைவி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை வவுனியா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இவருடன் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு மாவட்டத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் இன்றுவரையிலும் 39பேர் தமது பிள்ளைகளைத் தேடிய போராட்டத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/63002

  • தொடங்கியவர்

டக்ளஸ், வரதர் தரப்­புகள் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க  கங்­கணம் கட்­டு­கின்­றன  ; முல்­லைத்­தீவு காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி 

Published by R. Kalaichelvan on 2019-08-21 12:34:35

IMAGE-MIX.png
 

கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ் மற்றும் வர­த­ராஜப் பெருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க கங்­கணம் கட்டிக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்று முல்­லைத்­தீவு மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி மரி­ய­சுரேஷ் ஈஸ்­வரி தெரி­வித்தார்.

jaffna_press_club.jpg

யாழ்ப்­பாணம் ஊடக மையத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லா ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

உள்­நாட்டு போரில் போர்க்­குற்­றத்தில் ஈடு­பட்­ட­வர்­களில் முக்­கி­ய­மா­னவர் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர்  கோத்தாபய ராஜ­பக்ஷவே என்று எமது மக்­க­ளுக்கும் உல­குக்கும் தெரியும். எங்­களின் உற­வு­களை மறைத்து வைத்­தி­ருக்க பிர­தான சூத்­தி­ர­தாரி இவர்தான். 

தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் கோத்­த­பாய போர்க்­குற்­ற­வாளி தான். அந்த மன­நி­லையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தாவை இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வர தமிழ் மக்­க­ளா­கிய நாம் இட­ம­ளிக்க மாட்டோம். அவர் எம்மை மீறி ஜனா­தி­ப­தி­யாக வந்­தாலும் மிகு­தி­யாக இருக்­கின்ற எங்­களை கொன்­ற­ழிக்­கவே துடிப்பார். 

காணா­மல்­போன உற­வு­க­ளுடன் முக்­கி­ய­மாக அர­சியல் கைதி­களை தங்­களின் கட்­டுப்­பாட்­டி­லேயே இவர்கள் வைத்­தி­ருந்­தனர். ஆனால் அவர்­களில் பலர் எங்கே? சிறை­களில் தடுத்து வைத்­த­வர்­களை விடு­விக்­க­வில்லை. சிறையில் உள்­ளவர்க­ளை­யா­வது நாம் மீட்க வேண்டும் என பல போராட்­டங்களை நடத்­தினோம்.

ஆனால் இவர்­களும் தென்­னி­லங்கை அர­சி­யல்வா­தி­களும் கொஞ்சம் கூட இரங்­க­வில்லை.

கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ், வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­த­பா­ய­வுடன் இணைந்து தமிழர்களை மேலும் நசுக்ககங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

அவர்களின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் தேர்தலில் எமது தமிழ் தலைமை தவறுவிட்டால் நாம் தட் டிக் கேட்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/63084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.