Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலையூரில் கண்டெடுக்கப்பட்ட 10-ம் நூற்றாண்டு கற்சிற்பங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசோகமரத்தின் கிளைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்தநிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தங்கரர் சிற்பம்

தீர்த்தங்கரர் சிற்பம் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், மன்னர் கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

தீர்த்தங்கரர் சிற்பம்
 
தீர்த்தங்கரர் சிற்பம்

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு திருப்புல்லாணியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது பள்ளியில் பயிலும் மாணவர்களைக் கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

திருப்புல்லாணி, திருவாடானை, ராஜ சிங்க மங்களம், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டு பழங்கால தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ராஜகுரு, திருவாடானை துணை வட்டாட்சியர் சி.ஆண்டி ஆகியோர் பரமக்குடி அருகே உள்ள கலையூரில் கள மேற்பரப்பாய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அங்கு வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் உடைந்த நிலையில் இருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டறிந்தனர்.

ஆய்வில் கண்டறியப்பட்ட சிற்பங்கள் குறித்து தொல்லியல் ஆர்வலரான ராஜகுரு கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஐயனார் சிற்பம்
 
ஐயனார் சிற்பம்

தற்போது கலையூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ளது. முழுவதும் கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோகமரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. அசோகமரத்தின் கிளைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்தநிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.

 

தீர்த்தங்கரரின் இரு பக்கமும் சாமரம் வீசும் இரு இயக்கர்களின் சிற்பங்கள் இருக்கும். இதில் பிரபாவளியின் வலப்பக்கத்தில் இயக்கனின் தலை மட்டும் உள்ளது. இடதுபக்கம் இருந்த இயக்கன் சிற்பமும் தீர்த்தங்கரரின் கீழ்ப்பகுதியும் உடைத்து தனியாக்கப்பட்டுள்ளது. பிரபாவளியின் மேல்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம். சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை என்ற அமைப்பு உள்ளது. முக்குடை என்பது சமண சமயச் சின்னம் ஆகும். இச்சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு இது சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கும் என ஊகிக்கலாம். மேலும், இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

ராஜகுரு
 

இக்கோயில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான ஐயனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சிக் காலத்தில், சமண மதம் வலுவிழந்து, அதைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் தீர்த்தங்கரரின் சிற்பம் உடைக்கப்பட்டிருக்கலாம். திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல் ஆகிய பகுதிகளிலும் இது போன்ற சமணத் தீர்த்தங்கரர்களின் உடைந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் தலை இல்லாதவை. இதில் பொக்கனாரேந்தலில் உள்ள சிற்பம் மலைமேல் சாத்துடையார் என்ற ஐயனார் கோயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்'' என்றார்.

 

https://www.vikatan.com/news/tamilnadu/10th-century-stone-inscriptions-found-in-kalaiyur

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.