Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்தியர் சிவரூபன் கைது தமிழர்களை இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதனை சிங்கள அரசு மீண்டும் தனது கொள்கையை வலியுறுத்துகின்றது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் சிவரூபன் கைது தமிழர்களை இந்த நாட்டிலே நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதனை சிங்கள அரசு மீண்டும் தனது கொள்கையை வலியுறுத்துகின்றது!

என்பதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

 

சவேந்திர சில்வா பற்றியும் அவர் செய்த கொலைகளை பட்டியல் இட்டதும்  ஹான்சட்டில் இதை பதிந்தன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு தார்மீக கடமையை செய்துள்ளார். 

படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. 

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லை­க­ளுக்கு கண்கண்ட சாட்­சி­யாக  இருந்த கார­ணத்­தி­னா­லேயே பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்ட முறையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு எம்.பி. எஸ். ஸ்ரீதரன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புலமைச் சொத்­துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்­நுட்பம் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 

கிளி­நொச்சி மாவட்­டத்தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் கடந்த 18 ஆம் திகதி இரவு ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத குற்­றப்­பி­ரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். 19 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தான் இவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் இவரின் மனை­விக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காலை 11 மணிக்கே மனை­வியும் அவரின் இரு பிள்­ளை­களும் அவரை பார்­வை­யிட்­டுள்­ளனர். 

அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்சட்டம் மற்றும் அவ­ச­ர­கால சட்­டத்தின் பயங்­கர விளைவு இது. வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் நீண்­ட­கா­ல­மாக யாழ். மாவட்­டத்தின் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யா­கப்­பணி புரிந்­தவர். தற்­போது கிளி­நொச்சி மாவட்ட பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­ச­ராக இருக்­கின்றார். இவர் துணிச்சல்மிக்­கவர். மக்­க­ளுக்­கா­கப் ­ப­ணி­யாற்­று­பவர். இதனால் இரா­ணுவ, பொலிஸ் புல­னாய்­வா­ளர்கள் இவரை பின் தொடர்ந்தும் இவர் மீதான காழ்ப்­பு­ணர்ச்­சி­களும் இவரின் கைதுக்கு கார­ண­மாக இருக்­க­லா­மென நாம் கரு­து­கின்றோம். 

குறிப்­பாக 2009, 2010 யுத்தம் முடிந்த காலப்­ப­கு­தியில் யாழ். மாவட்­டத்தில் சுமார் 300க்கு மேற்­பட்டோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஆனால் இரா­ணுவ,பொலிஸ் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் இவர்கள் தற்­கொலை செய்து கொண்­ட­தாக, விபத்தில் இறந்­த­தாக தெரி­வித்து அந்த விதத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அப்­போது சட்ட வைத்­திய அதி­கா­ரி­யாக இருந்த சிவ­ரூபன், பல மர­ணங்கள் அடித்­துக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன, சைலன்சர் துப்­பாக்­கியால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளன, நவீன முறை­க­ளைப் ­ப­யன்­ப­டுத்­திக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன என்ற விட­யங்­களை வெளிக்­கொண்டு வந்­த­துடன் சர்­வ­தே­சத்­துக்கும் தெரி­யப்­ப­டுத்­தினார். அத்­துடன் இரு தட­வைகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­பா­கவும் இவர் சாட்­சியம் வழங்­கினார். 

2006ஆம் ஆண்டு அல்­லைப்­பிட்­டியில் ஒரு வீட்­டுக்குள் இருந்த மக்கள் இரா­ணு­வத்­தி­னரால் சுட்­டுக்­கொல்­ல­பட்­டனர். இதில் பலர் காய­ம­டைந்­தனர். அப்­போது அவர்­களை அங்­கி­ருந்து கொண்­டு­வ­ர­மு­டி­யாத சூழல் இருந்­தது. 

இத­னை­ய­டுத்து யாழ். மாவட்­டத்தின் நீதி­ய­ர­ச­ரா­க­வி­ருந்த ஸ்ரீநிதி நந்­த­சே­க­ர­னுடன் இணைந்து அப்­போது யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­து­வ­பீட மாண­வ­னாக இருந்த சிவ­ரூபன் அங்கு சென்று காயப்­ப­ட­ட­வர்­களை  மீட்டு வந்து சிகிச்­சை­ய­ளித்த வர­லாறு  அவ­ருக்­குண்டு. இதற்­காக அவரை அமெ­ரிக்கா அழைத்து விசேட விருது வழங்­கி­யது. 

இவ்­வா­றான துணிச்சல் மிக்க வைத்­தி­யரின் பணியை முடக்­கு­வ­தற்­கா­கவும் தமி­ழர்­களின் பல படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­ய­மாக இருப்­ப­த­னாலும் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்டு சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் வீட்டில் வைத்து கைது செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக  ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்­துத்தான் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இதன் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் உங்­களைக் கொல்­வோம், அழிப்போம், நீங்கள் எங்கள்  அடி­மைகள்  என்ற பயங்கர செய்தியையே இந்த அரசு தமிழ் மக்களுக்கு கூறுகின்றது.  இவரின் கைதால் பளை வைத்திய சாலையில் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிகிச்சை மேற்கொள்ள போதுமான வைத்தியர்கள் இல்லை. 

நாட்டில் வைத்தியர்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் மூடப் படும் நிலையில் வைத்தியர்களை நடுவீதியிலிந்து கைது செய்யப் படுவார்களானால் இந்நாட்டின் ஜனநாயகத்தை என்னவென்று தெரிவிப்பதென்று புரியவில்லை  என்றார்.

https://www.virakesari.lk/article/63085

ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஓ.எம்.பி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று பிற்பகல் 12 மணிமுதல் 1மணிவரையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

DSC_1556.JPG

வவுனியாவில் தொடர்ந்து 917ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

ஓ.எம்.பி ஒரு போலி அமைப்பு.

இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னோடி நிமல்கா பெர்னாண்டோவும் சுமந்திரனும்  ஆவார். சுமந்திரன் முன்னணி புலம்பெயர்ந்தோர் குழுக்களான , எல்லியஸ் ஜெய்ராஜாவின் யு.எஸ்.ரி பக் (USTPAC) ,  பாதர் இம்மானுவேலின் ஜி.ரி .எஃப் (GTF ) டாண்டன் துரைராஜா வின்   தமிழ் கனேடிய காங்கிரஸ் ஆகியவை நிமல்கா மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் சேர்ந்து  ஆட்சி மாற்றத்தை ஆதரித்தனர்.  

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிமல்கா காணாமல் போனார். ஆனால் அவர் சிங்களவர்களின் நிகழ்ச்சி நிரலை, அதாவது உள்ளூர் விசாரணைக்கு  ஊக்குவிக்க பணிபுரிந்தார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்க நடிகை ஜோலி ஏஞ்சலினா பார்க்க விரும்பி நிமல்காவை  கேட்டுக் கொண்டார். நிமல்கா போர்க் குற்றவாளிகளின்  ஆமி கொமாண்டரின் மனைவிகளை ஜோலி ஏஞ்சலினாவுக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்சி மாற்றம்  விதிமுறை முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு முன், கடைசியாக OMP ஐ சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறார்கள் .

OMP என்பது நிமல்கா மற்றும் சுமந்திரனின்  சாதனம் ஆகும், இது UNHRC ஐ உள்ளூர் விசாரணையை நம்ப வைக்கும் சாதனம் .

நிமல்கா OMP யை  எப்படியாவது தமிழர்களுக்கு தேவை என்று காட்ட வேலை செய்ய தனது கடைசி தரம்  முயற்சிக்கிறார்.

தெற்கில் இன்னும் சில நிலங்களை சீனாவுக்கு அடமானம் வைப்பதன் மூலமும், காணாமல் போன ஒவ்வொருவரின் பெற்றோருக்கும் 5000 ரூபாயைக் கொடுத்து வழக்கை மூடுவதே  நிலம்ல்கா யோசனை. காணாமல் போனவர்கள்,  நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கண்டறிய எங்கள் சாதனம்.  நமது அரசியல் எதிர்காலம் மற்றும் எங்கள் வாழ்வாதாரம்  காணாமல் போனவர்ககளில் தங்கியுள்ளது.

காணாமல் போனவர்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பேசவில்லை. இது பற்றி கதைத்தால் கொழும்பில் அது அவர்களை காயப்படுத்துகிறது. அவர்களின் லஞ்சம் ரணிலால் நிறுத்தப்படும்.

OMP ஒரு நெருக்கடி. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு இலங்கை உள்ளூர் விசாரணையைப் பெற நம்பகமான OMB ஐ உருவாக்குவதாக நிமல்க்காவும் சுமந்திரனும்  உறுதியளித்துள்ளனர்.

OMP குழப்பம் என்பதால், நிமல்கா, சுமந்திரான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நம்பகத்தன்மை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் OMP என்ன செய்வது என்பது UNHRC இல் சில நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதாகும்.

எனவே, நாம் அனைவரும், இந்த போலி OMP உருவாக்கத்தை எதிர்ப்போம். எங்கள் எதிர்கால  சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழரும் OMP ஐ நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

போராட்டத்தின் இறுதியில் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயலாளர் கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/63317

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.