Jump to content

"தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி

இந்த நாட்டில் அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமையே அளவுக்கதிகமாக ரத்தக்கறை படிய காரணமாக மாறியது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தலையிட நாம் தயார். வடக்கு கிழக்குக்கு அப்பால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தமிழர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்றால் சந்தேகத்திற்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரியுங்கள்.

"வடக்கு – கிழக்கு மக்களினால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தெரிவுசெய்ய வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணியையே தெரிவுசெய்ய வேண்டும். தெற்கின் கட்சியொன்றை தமிழ் மக்கள் நம்புவதென்றால் மக்கள் விடுதலை முன்னணியே ஒரே தெரிவு."

தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜே.வி.பி. முழுமையான முயற்சிகளை முன்னெடுக்கும் என `தேசிய மக்கள் சக்தி` கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜேவிபி  தலைவருமான அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

"பாராளுமன்றத்தில் சகலரதும் முழுமையாக இணக்கம் எட்டப்படும் நிலையில்  நிறைவேற்று அதிகாரத்தை நீக்க நாம் முன்வருவோம். நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். "

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர்  இதனைக் குறிப்பிட்டார்.  அவருடனான செவ்வியின் முழுவிபரம் வருமாறு :

virakesari.jpg

கேள்வி:ஆகஸ்ட் 18ஆம் திகதி காலிமுகத்திடலில் மக்கள் பெருந்திரளானோர் முன்னி லையில் உங்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த அந்த தருணத்தில்  உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? 

பதில்:- இந்த நாட்டின் ஆட்சி முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்ற மக்களின் அக்கறை, மற்றும் மாற்றமொன்று உருவாக வேண்டும் என்பதற்காக என்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை என்பவற்றை நான் அவதானித்தேன். அதுமட்டு மல்லாது மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீணடிக்காது மக்களின் எதிர்பார்ப்பு, வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையே எனக்கு மக்களை பார்க்கையில் தோன்றியது. 

கேள்வி: 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி.ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்கி யுள்ளது. இதில் நீங்கள் எவ்வாறான போராட்டம் ஒன்றை  எடுத்துள்ளீர்கள்?

பதில்:-கடந்த 2005, 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் எமது நாட்டின் அப்போதைய தன்மைகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்றன. அப்போது அரசியல் ரீதியில் எம்மால் எவ்வாறான தீர்மானம் எடுக்க வேண்டுமோ       அவற்றை நாம் முன்னெடுத்தோம். எமது நாட்டுக்கு  இனியும் தேவைப்படுவது சிறியசிறிய தற்காலிக மாற்றங்கள் அல்ல. இன்று சமூகத் தில் முழுமையான மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது. இந்த மாற் றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் தூய்மையான அரசியல் தலை 

மைத்துவம் ஒன்று தேவைப்படு கின்றது. அதற்காக முன்வரும் மக்களை கொண்ட சக்திகளை ஒன்றிணைத்து மாற்றத்தை உரு வாக்க நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். 

கேள்வி: 2005 ஆம் ஆண்டில் இருந்து பார்த்தால் தொடர்ச் சியாக மக்கள் விடுதலை முன்னணியின் பலம் குறை வடைந்ததை பார்க்க முடிந் தது. உங்கள் மீதான மக்களின்  எதிர்பார்ப்பும் குறைந்தது. இப்போது நீங்கள் எடுத்துள்ள போராட்டம் தேர்தலை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கமா அல்லது உங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள நீங்கள் கையில் எடுத்துள்ள திட்டமா? 

பதில்:-கடந்த காலங்களில் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மா னங்கள் அப்போது நாட்டு  மக் கள் சந்தித்த சவால்களை வெற்றிகொள்ள எடுக்கப்பட்ட தீர்மானமாக அமைந்தது. எனினும் இந்த செயற்பாடு காரணமாக கட்சி மீதான தெளிவின்மை மக்கள் மத்தியில் உருவாகியது உண்மை. 

எனினும் அந்தக் காலங்களில் நாம் ஏன் அவ்வாறான தீர்மானங்களை எடுத்தோம், நாம் அவ்வாறு தீர்மா னங்களை எடுக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கலந்துரையாடல் ஒன்றை சமூகத்தில் கொண்டுசென்றோம். இப்போது நாம் எடுத்துள்ள முயற்சி கடந்த கால பின்னடைவை மறைக்க எடுக்கும் முயற்சி அல்ல.

எமது நாட்டில் மாற்று அரசியல் புரட்சி ஒன்று வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதனை வெற்றிகொள்ள உறுதியாக எடுக்கும் முயற்சி. ஆகவே நல்ல முடிவுகளை எதிர்பார்த்தே நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளோம். இந்த நாட்டில் இன, மத பேதமின்றி கஷ்டப்படும் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த நம்பிக்கையின் மூலமாக வெற்றி பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாம் களமிறங்கியுள்ளோம். 

கேள்வி: சாதாரணமாக மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை ஏற்பாடு செய்வதில் ஏனைய அரசியல் கட்சிகளை விடவும் செயற்திறன்மிக்கவர்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் உங்களுக்கு அவ்வளவு வாக்குகள் கிடைப்பதில்லையே? 

பதில்:-நீங்கள் கூறுவது உண்மை தான். அரசியல் ரீதியில் நாம் செய்யும் வேலைத்திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். மே தினக் கூட்டமாக இருந்தாலும், மக்களை ஒன்றிணைத்து நடத்தும் கூட்டங்களாக இருந்தாலும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டாலும் பாராளுமன்றத்தில் உரையாற் றும் போதும் மக்களின் பிரச்சினை களில் தலையிடும் போதும் நாம் சரியாக எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். எதிர்க்கட்சியாக நாம் சரியாக எமது கடமையை செய்து வருகின்றோம். நாம் மக்களுக்கு கூறுவது என்னவென்றால் இப்போது நாம் முன்னெடுத்த சகல வேலைத்திட்டங்களை போலவே எம்மை நம்பி எமக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் எமது அரசாங்கத்தையும்  அவ்வாறே நடத்திக்காட்டுவோம்.

என்றாலும் நீங்கள் கூறுவதைப்போல நாம் என்னதான் நேர்மையாக அரசியல் செய்தாலும் எம்மை நம்பி வாக்களிக்க இன்றும் மக்கள் மத்தியில் சில பின்னடைவு உள்ளது. அது உண்மையே. ஆனால் நாம் ஒரு தலைவருக்காக இன்னொரு  தலைவரை உருவாக்கவோ ஒரு அரசாங்கத்திற்காக இன்னொரு அரசாங்கத்தை மாற்றவோ முன்வரவில்லை. கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டில் உள்ள மோசமான கொள்கையை மாற்றியமைக்கவே நாம் முயற்சிக் கின்றோம். எமது நாட்டின் பொரு ளாதாரக் கொள்கையில் இருந்து விடுபட்டு மாறுபட்ட கொள்கை ஒன்று வேண்டும். மிகவும் கீழ்த்தரமான, மோசமான அரசியல் கொள்கைக்கு அப்பால் தூய்மையான அரசியல் கொள்கை ஒன்று வேண்டும்.

தனிப்பட்ட நலன்களை கருத்தில் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளுக்கு அப்பால் பொதுவாக மக்கள் குறித்து சிந்திக்கும் கொள்கை ஒன்று வேண்டும். சமூக, அரசியல், பொருளாதார, மறுமலர்ச்சி ஒன்று வேண்டும். அந்த மறுமலர்ச்சிக்காகவே நாம் பாடுபடுகின்றோம். இவ்வாறான மறுமலர்ச்சி உலக வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் இடம்பெற்றவை அல்ல. நீண்ட ஆண்டுகளுக்கு பின்னரே அவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இந்த மாற்றத்தை எம்மால் செய்யமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இந்நிலையில் மக்கள் மாறத் தயாரில்லை என்றால், மக்கள் தொடர்ந்தும் தமது பழைய நிலைப்பாட்டில் இருந்தால்  இந்த மாற்றத்தை உருவாக்க  முடியாது. ஆனாலும் மக்கள் எம்மை நம்பி ஆதரிப்பார்கள் என்ற உறுதியான  நம்பிக்கையில் நாம் செயற்படுகின்றோம். 

கேள்வி: இடதுசாரிகள் என்ற காலாவதியான ஒரு கொள்கையில் நீங்கள் முன்னோக்கி செல்லும்போது மக்கள் உங்கள் மீது நம்பிக்கை  வைப்பார்கள் என நினைக்க முடியுமா? 

பதில்:இடதுசாரிகள் என்று கூறியவுடன் உலகத்திலும் சரி இலங்கையிலும் சரி தவறானதும் அச்சமானதுமான படம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இன்று கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கையை மாற்றி வேறு பொருளாதார கொள்கையொன்று வேண்டாமா? தமிழ், சிங்கள, முஸ்லிம் என எந்த இனத்தவராவது இன்றுள்ள பொருளாதார கொள்கையை ஏற்றுக்கொள்கின் றார்களா? கீழ்மட்டத்தில் வாழும் எவருக்கு இந்த பொருளாதார கொள்கை நலன்களை கொடுத்துள்ளது? யாருக்கும் இதில் நன்மை இருக்காது. 

ஆகவே நாம் இந்த பொருளாதார கொள்கையில் மாற்றத்தை முன்வைக்கின்றோம். இதுதான் இடதுசாரி. இந்த நாட்டின் அரசியலை யார் ஏற்றுக்கொள்கின்றனர்.

வியாபாரமாக மாறியுள்ள, ஊழல், மக்கள் சொத்துக்களை சூறையாடும் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதற்குப்பதிலாக ஒழுக்கமான அரசியலை மக்கள் கேட்கின்றனர். இதுதான் இடதுசாரிக்கொள்கை. சமூகத்தில் மாற்றம் ஒன்றினை மக்கள் விரும்புகின்றனர் இதுதான் இடதுசாரிக்கொள்கை. ஆகவே இடதுசாரிகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. 

இன்று கடைப்பிடிக்கும் கொள்கைக்கு எதிராக மக்கள் நிலைப்பாடு ஒன்று உள்ளது. அதனை கையாளவே நாம் முயற்சிக்கின்றோம். மாற்றம் ஒன்று வேண்டும் என்று மக்கள் நினைத்தால் மட்டும் போதாது. அனைவருமே மாற்றம் வேண்டும் என  நினைக்கின்றனர். ஆனால் என்ன மாற்றம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். மாற்றத்தின் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த மாற்றத் தையே நாம் முன்கொண்டு செல்கின்றோம். 

கேள்வி: நீங்கள் மாற்றம் குறித்துப் பேசினாலும்  வேலைத்திட்டம்  எதனையும் முன்வைக்கவில்லையே? 

பதில்:அரசியல் ரீதியில் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் மிகவும் பலமாக வேலைத்திட்டங்களை நாம் உருவாக்கியுள்ளோம். கடந்த 2000 ஆம் ஆண்டில் நாட்டை கட்டியெழுப்பும் ஐந்தாண்டுகால வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தோம். அதுதான் இன்றுவரை வெற்றிகரமான திட்டமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டும் தேசிய மனசாட்சி என்ற திட்டத்தை முன்வைத்தோம். 

அதில் பல ஆரோக்கியமான வேலைத்திட்டங்கள் உள்ளன எனினும் ஜே.வி.பி. பேச்சு  மட்டுமே, ஒன்றும் செய்வதில்லை என்ற நிலைப்பாடும் மக்கள் மத்தியில் உள்ளது. 

மக்கள் எப்போதும் மக்கள் விடுதலை முன்னணியை விமர்சிக்கும் கட்சியாகப் பார்த்தனரே தவிர நிவர்த்திசெய்ய நாம் எவ்வளவு தான் கூறினாலும் அது குறித்து கவனித்ததில்லை.   கடந்த காலங்களில் கூட நாம் பல வேலைத்திட்டங்களை முன்வைத்தோம். எம்மிடம் ஆரோக்கியமான வேலைத்திட்டம் உள்ளது. வேலைத்திட்டத்துடன்தான் நாம் களமிறங்கியுள்ளோம். எமது பொருளாதாரம் இன்று ஐம்பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது.

கடன், ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள நெருக்கடி, உற்பத்தி வீழ்ச்சி, அரச வருமானம் இல்லாமால்போயுள்ளமை, வருமானம் நியாயமாக பகிரப்படாமை என்ற இந்த ஐந்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்தால் மட்டுமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். 

அதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் சேவைகள் உறுதியானதாக இருக்க வேண்டும். எனினும் வீட்டுக்கு கிடைக்கும் வருமானத்தில் அதிக தொகையை கல்விக்கும், சுகாதாரத்திற்கும், போக்குவரத்திற்கும் செலவழிக்க வேண்டியுள்ளது. சேவைகளை இலகுபடுத்த வேண்டும். மக்களின் பொருளாதார நெருக்கடி மிகவும் முக்கியமான பிரச்சினை. வடக்கில் அநேக மக்கள் கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

விவசாயிகள் கடன் நெருக்கடியில் உள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணாது அவர்களை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது, தோட்டத்தொழிலாளர் சேவைகளைப் பலப்படுத்தாது மலையக மக்களின் வாழ்க்கையை முன்னோக்கிக்கொண்டுசெல்ல முடியாது. இவ்வாறு மக்களின் பொருளாதார தன்மையை உயர்த்துவதன் மூலம் மட்டுமே அவர்களை பாதுகாக்க முடியும். 

இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டம் எம்மிடம் உள்ளது. வேலைத்திட்டங்களை யாராலும் முன்வைக்க முடியும். ஆனால் அதுமட்டும் போதாது. அதனை செய்துமுடிக்கும் அணியொன்று வேண்டும். நாம் அரசியலில் சம்பாதிக்க அரசியல் செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலில் மட்டும் அல்ல நாட்டுக்கான சரியான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எம்முடன் வேலை செய்யும் மக்கள் ஏராளமாக உள்ளனர். மாயாஜாலக்காரர்களால்  நாட்டை கட்டியெழுப்ப முடியாது. 

கேள்வி:கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ அணியை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் பொது அணியில் நீங்களும் செயற்பட்டீர்கள், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளையே நீங்கள் பங்கிடப்போகின்றீர்கள் என்ற கணிப்புகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து உங்களின் கருத்து என்ன? 

பதில்: இந்த நாட்டில் எவரதும் வாக்குகள் எந்த கட்சிக்கும் என எழுதிவைக்கப்பட்ட வாக்குகள் அல்ல. எந்த கட்சியும் மக்களின் வாக்குகளை உரிமை கொண்டாட முடியாது. வாக்காளர்களாக பொதுமக்கள் தேர்தல் காலங்களில் தமக்கான தீர்மானங்களை எடுப்பார்கள். அதேபோன்று ராஜபக்ஷவினரின் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பிளவுபட வேண்டாம், ராஜபக்ஷாக்களைத்  தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு முடியும் என்று கூறுவதெல்லாம்  வெறும் கற்பனை மட்டுமே. 

இந்த நான்கு ஆண்டுகளில் ராஜபக்ஷக்களை பாதுகாத்தது யார்? ராஜபக்ஷ ஒரு பூச்சாண்டி என்றால் அந்த பூச்சாண்டியை பாதுகாத்தது ரணில் விக்ரமசிங்கவே. இந்த இரண்டு அணியினரும்  ஒரு அணியினரே. ஆகவே இந்த இரண்டு ஆட்சியாளர்களுக்கும் எதிராக  மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் எம்மை நம்பி வாக்களிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. 

கேள்வி: உங்களுடன் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பும் பலமான தரப்பினர். ஒருபுறம் கோத்தபாய ராஜபக்ஷ மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியின் பலமான நபர் வருவார். உங்களால் போராட முடியுமா? 

பதில்:- இவர்கள் பிரபலங்கள் என ஊடகங்களே உருவாக்கி வைத்துள்ளன.  ஊடகவியலாளர்கள் எழுதும் விமர்சனங்களை சந்திக்க முடியாது ஊடகவியலாளர்களின் கொல்லும்  மனநிலை வருகின்றது என்றால் அது  மிகவும் பலவீனமான நபர்களுக்கே வரும். மக்களின் சொத்துக்களை தன்வசப்படுத்தும் மனநிலை இருந்தால் அவர் திருடர்.  இலங்கையில் அரசியலை நல்ல இடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்றால் இந்த வேட்பாளர்கள் அனைவரையும் ஒரு இடத்திற்கு கொண்டுவந்து நாட்டினை கட்டியெழுப்பும்  கொள்கையை கேட்டால் யார் உண்மையான வீரர் என்பது தெரியும். 

கேள்வி : இந்த நாட்டின் அரசியல் தீர்வு குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது ஆனால் தீர்வு ஒன்று கிடைத்ததாக தெரியவில்லை. இந்த பிரச்சினையை ஜே.வி.பி. எவ்வாறு பார்க்கின்றது? 

பதில் :- இலங்கை பல்லின மக்கள் கொண்ட பல மதம், இனங்கள் கொண்ட இராச்சியமாகும். யார் முதலில் வந்தது, யாருக்கு நாடு சொந்தம் என்பதெல்லாம்  இதிகாசம். அது இன்று அவசியமில்லாத ஒன்று. இந்த  நாட்டில் பிறந்து, வளர்ந்து இங்கேயே இறக்கும் மக்களே இன்று உள்ளனர்.

ஆகவே எம் அனைவருக்கும் நாடு சொந்தம். இந்த நாட்டில் அளவுக்கு அதிகமாக இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. வடக்கிலும் தெற்கிலும் அளவுக்கு அதிகமாக இரத்தக்கறை படிந்துவிட்டது. இனியும் இது வேண்டாம். மக்கள் மத்தியில் எந்த பிளவும் இல்லாது சகல மக்களின் உரிமைகளை பாதுகாத்து அரசியலில் அனைவரையும்  பங்குதாரராக மாற்றி இன, மதமாக பிளவுபடாது முன்செல்வதே இனி அவசியமாகும். ஆகவே தேசிய ஒற்றுமையை உருவாக்குவதே எமது நாட்டின் எதிர்காலத்தை உறுதிபடுத்தும். 

அதற்கான அரசியல் அமைப்பு மாற்றம் அதனூடான சகல மாற்றங்களையும் உருவாக்க வேண்டும். இன்று தமிழர்களின் திரைப்படமாக, நாடகமாக, பாடலாக இருப்பது  இலங்கையின் படைப்புகளா? இல்லை இந்திய கலாசாரமே இங்கு தமிழர்கள் மத்தியில் ஊடுருவியுள்ளது. 

இவ்வாறான எமது கலையை வளர்க்க முடியாத நிலைமைக்கு எமது ஆட்சியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர். எமது நாட்டுக்குள் எமது மக்களின் கலாசார தன்மைகளை உறுதிப்படுத்த  வேண்டும். அதுவே நல்லிணக்கத்தின் அத்திவாரமாகும். 

கேள்வி :- எனினும் ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து அதிகம் பேசினாலும் தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளை இலக்கு வைத்தே தமது தேர்தல் பிரசாரங்களை செய்கின்றனர். நீங்களும் சிங்கள பெளத்த வாக்குகளை இலக்கு வைத்த அரசியலையா கையாள்வீர்கள்? 

பதில்:- அவ்வாறான இனவாத அரசியல் செய்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. சிங்கள அரசியல் மத்தியில் பிரபல்யமான அரசியல் சிங்கள இனவாதம், தமிழ் அரசியல் வாதிகள் மத்தியில் பிரபல்யமான அரசியல் தமிழ் இனவாதம், முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் பிரபல்யமான அரசியல் முஸ்லிம் இனவாதம். 

ஆனால்  இதுதான் இந்த நாட்டின் மிகவும் மோசமான நாசகார அரசியலாகும்.  எமது நிகழ்ச்சி நிரலில் இனவாதம் என்றுமே இடம்பெறாது. தமிழ், சிங்கள, முஸ்லிம் இனவாதம் பேசவேண்டிய அவசியம் எமக்கில்லை.

வெளியில் இருந்து இனவாதம் பேசி மக்களை பிளவுபடுதுபவர்கள் தான் ஒன்றாக அமைச்சரவையில் இணைந்துள்ளனர். இவர்களால் மக்களே பிளவுபட்டுள்ளனர். எவ்வாறான கடினமான சூழலிலும் நாம் நல்லிணக்கத்தை பற்றியே சிந்திப்போம். 

கேள்வி : அரசியல் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று வழங்க  உங்களிடம் உள்ள வேலைத்திட்டம் என்ன? 

பதில்:- இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகள் உள்ளன. கல்வியை எடுத்துக்கொண்டால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிள்ளைகள் அனைவருமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதார பிரச்சினையை பார்த்தாலும் அடிமட்ட மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். 

வடக்கை எடுத்துக்கொண்டால் முப்பது ஆண்டுகள் யுத்தத்திற்கு முகங்கொடுத்த தமிழ் மக்கள் மாறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. காணி பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, காணமால்போனோர் விவகாரம் என பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. 

இதனை எம்மால் மறுக்க முடியாது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் கணவனை இழந்த பெண்கள், தாய் தந்தையை இழந்த சிறுவர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மாறுபட்ட பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆகவே அரசாங்கமாக இவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தோட்டத்தொழிலாளர்களை பார்த்தால் அவர்களுக்கு கொடுப்பனவு பிரச்சினையை விட சமூக பிரச்சினைகள் பல உள்ளன. கொழும்பில் வீடுகளுக்கு வேலைக்கு, கடைகளில் வேலைக்கு மலையகத்தில் இருந்து ஆண்கள் பெண்கள் கிடைக்க மாட்டார்களா என்றுதான் கேட்கின்றனர். அவர்களுக்கு சமூகத்தில் கீழ்மட்ட நிலைமை உள்ளதாக மாற்றப்பட்டுள்ளனர். முதலில் அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சமத்துவமான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும். 

கொடுப்பனவு பிரச்சினைகளை நோக்கினால் அரசாங்கத்தில் உள்ள பலர் இன்றும் கம்பனிக்காரர்கள். அவர்களை கொண்டு சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாது. தொழிலாளர்கள் பக்கம் இல்லாது இவர்கள் அனைவரும் முதலாளிகள் பக்கம் இருந்தே தீர்வுகளை சிந்திக்கின்றனர். ஆனால் நாம் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என சிந்திக்கின்றோம். நாம் தொழிலாளர் பக்கமே நிற்கின்றோம். 150 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் இல்லாமல் வாழும் சமூகத்தை இனியும் புறக்கணிப்பதா, இதுவே எமதும் கேள்வி. தொழிலாளர் பக்கமே நாம் நிற்போம். 

கேள்வி :- சமீபத்திய அரசியல் முடிவுகளை பார்த்தால் வடக்கு –கிழக்கில் தமிழ் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் நிரந்தர வாக்குகள் என்ற ஒரு நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தகர்த்து தமிழ் மக்களின் ஆதரவை உங்களின் பக்கம் கொண்டுவர உங்களால் என்ன செய்ய முடியும்? 

பதில்:- இனவாதத்தின் மூலமாகவே இந்த பிளவு உருவாக்கப்பட்டுள்ளது. எமக்கு தேவைப்படுவது வடக்கின் தலைமையோ, கிழக்கின் தலைமையோ, தெற்கின் தலைமையோ அல்ல. நாம் முயற்சிப்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தலைமைத்துவத்தை கொடுக்கவே நினைக்கின்றோம்.

இதற்காக சகல தரப்புடனும் மக்களின் தலைமைகளுடன் ஆரோக்கியமான கலந்துரையாடலை கையாளும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். மாகாண அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தாது, இனங்கள் என்ற ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தாது சகல மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் தேர்தல் நகர்வு ஒன்றினையே நாம் முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். 

பிளவுபட்ட  அரசியலே இன்றும் இந்த நாட்டில் நிலவுகின்றது. ஆகவே இதில் இருந்து விடுபட்ட அரசியலையே நாம் கையாள நினைக்கின்றோம். 

கேள்வி :- சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துக்கூறக்கூடிய வேறு எந்த கட்சிகளுக்கும் இல்லாத சிறப்பம்சம் உங்கள் கட்சிக்கு உள்ளது. இதனை நீங்கள் சரியாக கையாண்டால் தமிழ் மக்கள் மத்தியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும் என்பதை அறிந்து கையாள முடியுமே?

பதில்:- ஆம், தமிழ் மக்கள் மத்தியில் எமது அரசியலை பலப்படுத்த வேண்டும். அதேபோல் தமிழ் மக்களின் எண்ணம், கொள்கை, சிந்தனை என்ன என்பதை தெற்கு மக்கள் மத்தியில் சரியாக கொண்டு செல்லவும் வேண்டும். இது இரண்டையும் செய்யாது முன்நகர முடியாது. 

அதனை  நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை நாம் சரியாக கையாள வேண்டும். இதற்கான கடுமையான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் வடக்கில் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள இன்றுவரை எம்மால் முடியாது உள்ளது. இறுதிவரை முடியாதென்று  இதற்கு அர்த்தம் அல்ல. எமது முயற்சிகளை நாம் கைவிடப்போவதும் இல்லை. வடக்கு கிழக்குக்கு இடையில் ஒரு பாலமாக இருப்போம். 

கேள்வி : தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள அவர்களை உங்களின் அரசியல் பயணத்தில்  இணைத்துக்கொள்ள நீங்கள் கையாளும் முறைமை என்ன?

பதில்:- வடக்கு – கிழக்கு மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களின் பிரதேசங்களில் ஒரு கட்சியை தெரிவு செய்யவேண்டும் என்றால் நிறைய கட்சிகள் இருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கு மக்களினால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தெரிவுசெய்ய வேண்டும் என்றால் அவர்கள் தெரிவுசெய்ய வேண்டிய கட்சி மக்கள் விடுதலை முன்னணியே. வடக்கு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியையோ அல்லது மஹிந்த ராஜபக் ஷவின் கட்சியை ஏன் தெரிவு செய்கின்றனர்? அவர்கள் ஆட்சி செய்த காலங்களில் தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளனர். 

அவர்கள் வடக்கு மக்களுக்கு மட்டும் அல்ல தெற்கு மக்களுக்கும் எதனையும் செய்யவில்லை என்பதை அளவுக்கு அதிகமாகவே நிரூபித்துள்ளனர். ஆகவே விசேடமாக தமிழ் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் வடக்கின் தமிழ் கட்சிகளை நீங்கள் வேறு தேர்தல்களில் ஆதரிக்கலாம் ஆனால் இந்த தேர்தலில் தெற்கின் அரசியல் கட்சி மீதும் நம்பிக்கை வைத்து உங்களின் தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் மக்கள் விடுதலை முன்னணியை நாடுங்கள். 

தெற்கின் கட்சியொன்றை தமிழ் மக்கள் நம்புவதென்றால் மக்கள் விடுதலை முன்னணியே ஒரே தெரிவு. 

கேள்வி :  நிறைவேற்று ஜனாதிபதியின்  அதிகாரங்களை நீக்கும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த  நீங்கள் இன்று ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஒரு வேட்பாளராக உள்ளீர்கள், 20ஆம் திருத்தம் இப்போது வேண்டாம் என்றா நினைகிறீர்களா?

பதில்:- அவ்வாறு இல்லை, மனித சமூகம் உருவாக்கப்பட்ட காலத்தில் தனிநபர் அதிகாரமே இருந்தது. மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனி நபரே தீர்மானித்தார். பின்னர் சமூக போராட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த ஏகாதிபத்திய அடக்குமுறை தகர்த்தெறியப்பட்டன. மக்களை நிருவகிக்க பாராளுமன்றம் உருவாகியது, சட்டம் ஒழுங்குகளை உருவாக்க நிறைவேற்று அதிகாரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இவை அனைத்துமே மக்கள் போராட்டங்களின் விளைவுகளாகும். 

ஆனால் மீண்டும் அராஜக யுகத்தை போன்றே தனி நபரின் கைகளின் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. இந்த நிறைவேற்று  அதிகாரம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை அடக்குமுறைக்காரர்கள் முதல்கொண்டு ஜோக்கர் வரையில் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளனர். ஆகவே இந்த கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் நாம் இப்போதும் உறுதியாக உள்ளோம். 

கேள்வி : ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 20ஆம் திருத்தத்தை நிறைவேற்ற முடிந்தால் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் முன்வருவீர்களா? 

பதில்:- இந்த பாராளுமன்றத்தில் இன்றுள்ள ஆட்சியாளர்களின் மனோநிலையில் இதனை நிறைவேற்ற முடியாது. ஆனால் பாராளுமன்றம் முழுமையாக இணக்கம் தெரிவித்து நிறைவேற்று அதிகாரத்தை நீக்க தீர்மானம் எடுத்தால் நாம் முன்வருவோம். 

இதுவரை காலமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறியவர்கள் அதனை செய்ததில்லை. மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்தவர்கள் அதனை செய்யவில்லை. 

ஆனால் நாம் 20ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளோம் எம்மால் நிச்சயமாக நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முடியும். 

நேர்காணல்: ஆர்.யசி

https://www.virakesari.lk/article/63292

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.