Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவருக்கு சமூக சேவை செய்வது அல்வா சாப்பிடுவது போன்று

Featured Replies

அனாதையாக இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகர்: இதுவரை 957 பேருக்கு இறுதிச்சடங்கு

Dkn_Tamil_News_2019_Aug27__426708400249482.jpg

 

வேலூர்: இன்றைய காலமாற்றத்தால் பெற்றோர்களை பிள்ளைகளே கவனிப்பதில்லை. வயது முதிர்ந்து விட்டால் அவர்களை வீட்டை விட்டு விரட்டி அடிப்பதும், முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும், நோய்வாய் பட்டிருந்தால் அரசு மருத்துவமனைகளில் போலி முகவரி கொடுத்து சேர்த்து விட்டு ஓடிவிடுவதும், அவர்களை இறந்தால் போலீசாரே ஏதோ ஒரு மயானத்தில் அடக்கம் செய்வதும்,  சிலர் தற்கொலை செய்வதும், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் இங்கே ஒருவர் அனாதை உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்வதோடு அவர்களுக்கு என்னென்ன இறுதிச்சடங்குகள் செய்வார்களே அதை முறைப்படி செய்கிறார்.

இந்த மனிநேய மிக்கவர் எந்த நாட்டையும் சேர்ந்தவர் அல்ல. நம் தமிழ்நாட்டில்தான் உள்ளார்.

அவரைப்பற்றிய விவரம்: திருவண்ணாமலையைச்சேர்ந்தவர் மணிமாறன்(40). சமூக சேவகரான இவர் விபத்து, நோய் பாதிப்பால் மருத்துவமனைகளில் இறந்து போகும் அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் இதுபோன்று அடுத்தடுத்து அனாதையாக இறந்தவர்கள் உடல்களை வாங்கி வந்து அதுவும் போலீஸ் அனுமதியுடன் அவர்கள் முன்னிலையில் பாலாற்றங்கரையில் தனித்தனியாக அடக்கம் செய்துள்ளார். இவர் வேலூர் திருவண்ணாமலை மட்டுமின்றி, நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும்,

ஏன் இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் அனாதையாக இறந்தவர்கள் உடல்களை இவர் தனது சொந்த செலவில் அடக்கம் செய்திருக்கிறார். இதுவரை அவர் 957 சடலங்கள்  அடக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறும்போது, சிறு வயது முதலே எனக்கு சமூக சேவை செய்வதில் ஆர்வம் உண்டு. யாராவது இறந்தவர்கள் ஆனாதை என தெரிந்தால் என்னால் தாங்கி கொள்ளமுடியாது. பிள்ளைகள் எப்படி இறுதிச்சடங்குகள் செய்வார்களோ அதே போன்று நானும் செய்து வருகிறேன். கடைசி காலத்தில் அனாதையாக இறந்தவர்களுக்கு அவர்கள் ஆத்மா சாந்தியடைய நாம் செய்யும் சிறு உதவியாக கருதுகிறேன்.

வெளி மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுபோன்று யாராவது அனாதையாக இறந்திருந்தால் அதையறிந்து நான் அங்கு சென்று விடுவேன். அந்த ஊரிலே இறுதிச்சடங்கை செய்வேன்..என்றார்.சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச்சேர்ந்த முதியவர் ஒருவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு அனாதையாக சுற்றித்திரிந்தபின் ஒருநாள் அங்குள்ள பூங்காவில் உயிரை விட்டார். அந்த முதியவர் மனைவி, மற்றும் பிள்ளைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் வந்து உடலை பெற்றுக்கொள்ளவில்லை. ஏன் கணவர் உடலை வாங்க மறுக்கிறீர்கள்? என போலீசார் கேட்டபோது, அவரை அடக்கம் செய்ய பணம் இல்லை.

நீங்களே எங்கேயாவது புதைத்து விடுங்கள் என தட்டிக்கழித்தார். அப்போது அங்கிருந்த பெண் எஸ்ஐ சரண்யா தனது சொந்த பணத்தில் ரூ.3 ஆயிரம் கொடுத்து அடக்கம் செய்ய உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல இடங்களில் நடந்து கொண்டுதான் உள்ளது. நமது தமிழகத்தில் இன்னும் மனித நேயம் மரித்து விடவில்லை. எங்களை போன்றவர்கள் இருக்கிறோம் என்பதற்கு மணிமாறன் ஒரு எடுத்துக்காட்டு. இவர்கள் போன்ற சமூக சேவகர்களை அரசு கவுரவிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521865

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் எங்கே என்றால் அது இங்கேதான், இவர்தான்.....நீடூழி வாழவேண்டும்.....!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.