Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் தோண்டப்படவுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bati-9.jpg

இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் தோண்டப்படவுள்ளது!

சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீமதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய புதைக்கப்பட்ட உடற்பாகங்களை இன்று 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த தற்கொலைதாரியின் உடலை பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்றும் இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை  என்றும் தெரிவித்த நீதிபதி, அரசாங்க அதிபர் செய்த தவறே இந்த பிரச்சினைக்கு காரணம் என இதன்போது தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் சீயோன் தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக புதைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த செயற்பாடுக்கு எதிராக கடந்த 27ஆம் திகதி இரவு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இந்து-மயானத்தில்-புதைக்க/

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுதாரியின் உடற்பாகங்களை தோண்டியெடுக்க உத்தரவு பிறக்கப்பட்டதையடுத்து ஹர்த்தால் கைவிடப்பட்டது

(எம்.மனோசித்ரா)

மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் உணர்வாளர் அமைப்பினால் மட்டக்களப்பில் நாளை மறுதினம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த ஹர்த்தால் கைவிடப்பட்டுள்ளது.

ஹர்த்தால் கைவிடப்பட்டுள்ளமை குறித்து தமிழ் உணர்வாளர் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

மட்டக்களப்பு அரச அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க சட்ட மா அதிபரினால் தொடுக்கப்பட்ட வழக்கில் , குறித்த பயங்கரவாதியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் இருந்து அகற்றுவதற்கு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபர் திணைக்களத்தின்  ஆலோசனையை கோரியிருந்த அரச அதிபர் மா.உதயகுமாரின் கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தெரிவாகிய அரச சட்டதரணி யாதவன் அவர்கள் நடைபெற்ற போராட்டங்களையும் 2ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தையும் காரணம் காட்டி உடற்ப்பாகங்களை அகற்ற கோரி வாதிட்டார்.

இவ் வழக்கை விசாரித்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி குறித்த உடற்ப்பாகங்களை அரச சட்ட வைத்தியரின் உதவியுடன் அகற்றி பொருத்தமான இடத்தை கண்டறியும் வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

 

https://www.virakesari.lk/article/63752

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.