Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ப சிதம்பரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ED arrests DK Shivakumar over money laundering case

ப சிதம்பரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது.

கர்நாடகா காங்கிரஸில் வலிமையான தலைவர்களில் ஒருவராக திகழும் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 4 நாள்கள் விசாரணைக்கு பிறகு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்தவர் டிகே சிவக்குமார். இவர் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள வலிமையான தலைவராக திகழ்கிறார்.

அண்மையில் பணமோசடி தடுப்பு சட்டத்தில் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிகே சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு கோரிய மனுவையும் ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து டெல்லியில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு டிகே சிவக்குமார் ஆஜரானார். அவரிடம் கடந்த நான்கு நாள்களாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணைக்கு பின்னர் டிகே சிவக்குமாரை இன்று இரவு அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அவரை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.

ப சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டிகே சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டிகே சிவக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/ed-arrests-dk-shivakumar-over-money-laundering-case-361966.html

"இந்த விசாரணைக்கு பின்னர் டிகே சிவக்குமாரை இன்று இரவு அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அவரை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்."

 

இந்தவாரம் வெளிவரும் என அறிவிக்கப்பட்ட கறுப்பு பண பதுக்கல் பேர்வழிகளில் இருவரும் ஒருவரா? 

கதானாவுடன் மருத்துவ சேவைக்கு அழைத்து செல்வது ஒரு அரசியல் பண்பாடாகி விட்டது 🙂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®¯à®°à¯à®à®³à¯ à®à®°à®¿à®ªà¯à®ªà¯

டிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்பு

டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டத்தின் காரணமாக பெங்களூரு-மைசூரு நடுவேயான சாலைபோக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

பணமோசடி வழக்கு தொடர்பாக, ஐந்து நாட்கள் விசாரணை நடத்திய பிறகு, அமலாக்கத் துறையினர் திடீர் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டிகே சிவகுமாரை நேற்று இரவு கைது செய்தனர்.

இதை கண்டித்து, புதன்கிழமையான இன்று கர்நாடகம் தழுவிய அளவில் பந்த் நடத்த, காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதையடுத்து, மாநிலம் முழுக்க காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் டயர்களை போட்டு எரித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

பà¯à®à¯à®à®³à¯à®°à¯ நிலவரமà¯

தலைநகர் பெங்களூரை பொருத்த அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள் திறந்திருந்தன. அதேநேரம், பெங்களூர் முதல் மைசூர் வரையிலான ராம்நகரம், மண்டியா மற்றும் மைசூர் ஆகிய மாவட்டங்களில், போராட்டத்தின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது.

ஏனெனில் டி.கே.சிவகுமார், ராமநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இது ஒரு காரணம் என்றால், சிவகுமார் சார்ந்துள்ள ஒக்கலிகர் ஜாதியினர் பெருமளவில் இருப்பது பெங்களூர் முதல் மைசூர் வரையிலான இந்த பிராந்தியத்தில்தான். எனவே, அங்கு போராட்டங்களில் மிகத்தீவிரமாக நடைபெறுகின்றன.

à®à®¾à®²à¯ பà¯à®à¯à®à¯à®µà®°à®¤à¯à®¤à¯

பெங்களூர் அடுத்த பிடதி, அதை அடுத்து ராமநகரம், சென்னபட்டணா, மண்டியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூரு மற்றும் மைசூர் நடுவே சாலை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. எனவே இந்த சாலையை தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-bandh-bangalore-mysore-road-full-of-traffic-361978.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.