Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்கிஸ்தான் செல்வதற்கு இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் மறுப்பு

Featured Replies

இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண ரி20 அணியின் தலைவர் லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

திமுத் கருணாரட்ன தினேஸ் சந்திமல் அஞ்சலோ மத்தியுஸ் சுரங்க லக்மால் நிரோசன் டிக்வெல குஜால் ஜனித் பெரோ தனஞ்செய சில்வா திசார பெரேரா லசித்மலிங்க அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் தொடரிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களிற்கு தெளிவுபடுத்துவதற்காகவும் பாக்கிஸ்தான் செல்வதற்கு அவர்கள் தயராகயிருக்கின்றார்களா என்பதை அறிவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கையின் முன்னாள் விமானப்படை தளபதியும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பாதுகாப்பு ஆலோசகருமான ரொசான் குணதிலக பாக்கிஸ்தானில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபை மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை அணியினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது மேற்குறிப்பிடப்பட்ட பத்து வீரர்களும் பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் பாக்கிஸ்தானில் ரி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான அணியை தெரிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/64461

  • தொடங்கியவர்

மெத்தியூஸ், சந்திமல், திசர ஆகியோராலேயே அணிக்குள் பிரச்சினை: தற்போது அந்த நிலையில்லையென்கிறார் அசந்த டிமெல்

தலைமைப்பயிற்றுவிப்பாளர் என ஒருவர் இல்லாதபோது இலங்கை வீரர்கள் பதற்றமின்றி அச்சமின்றி விளையாடுகின்றனர் என இலங்கையின் தெரிவுக்குழு தலைவர் அசந்தடி மெல் தெரிவித்துள்ளார்.

தலைமைப்பயிற்றுவிப்பாளர் இருக்கின்றாரா இல்லையா என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் சபை அரசியல் காரணமாக புதிதாக நியமிக்கப்படும் தலைமை பயிற்றுவிப்பாளர் அழுத்தங்களிற்கு உள்ளாகின்றார், உடனடியாக வெற்றிகளை காண்பிக்குமாறு அவர் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார் என தெரிவித்துள்ள அசந்த டிமெல் இதன் காரணமாக தலைமைப் பயிற்றுவிப்பாளர் அந்த அழுத்தங்களை வீரர்கள் மீது திணிக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தலைமைப் பயிற்றுவிப்பாளர் என ஒருவர் இல்லாததன் காரணமாக வீரர்கள் அழுத்தங்களற்ற நிலையில் உள்ளனர் தலைமை பயிற்றுவிப்பாளர் ஒருவர் இருந்த நேரத்தை விட இலகுவாக விளையாடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு நீண்ட கால நோக்கில் தலைமைப்பயிற்றுவிப்பாளர் அவசியமா இல்லையா என்பது தெரியாது ஆனால் அவர்கள் தலைமைப்பயிற்றுவிப்பாளர் இன்றி நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்கள் என குறிப்பிட்டுள்ள அசந்தடிமெல், இலங்கை அணிக்கு துடுப்பாட்ட, பந்து வீச்சு, களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்களே அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் லசித் மலிங்க அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார் எனவும் அசந்த டிமெல் குறிப்பிட்டுள்ளார்.

மலிங்க இளம் வீரர்களுடன் நன்கு இணைந்து செயற்படுகின்றார், இளம் வீரர்களும் அவ்வாறு அவருடன் இணைந்து செயற்படுகின்றனர், சிரேஸ்ட வீரர்கள் சிலருடன் மலிங்கவிற்கு காணப்பட்ட பிரச்சினைகள் இளம் வீரர்களுடன் இல்லை எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒன்றாக மதிய உணவிற்கு செல்கின்றனர் இளம் வீரர்கள் அவரின் பின்னால் உள்ளனர் அவருக்கு ஆதரவு வழங்குகின்றனர் இது நல்ல அறிகுறி எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சிரேஸ்ட வீரர்கள் காரணமாகவே பிரச்சினைகள் காணப்பட்டன அவர்கள் அணிக்குள் தங்களுக்கென குழுக்களை உருவாக்கி வைத்திருந்தனர் எனவும் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

திசர பெரோ, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமல் போன்ற வீரர்களிற்கு பிரச்சினைகள் காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ள அசந்த டி மெல் இந்த வீரர்களை அணியில் மீண்டும் சேர்த்தால் அதனால் அணிக்கு சாதகமான நிலை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/64398

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.