Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திர இரவால் நெருங்கும் ஆபத்து.. மவுனம் சாதிக்கும் விக்ரம் லேண்டர்! : செப். 20க்குள் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

Featured Replies

நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. செப்டம்பர் 21 முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை.எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம்.

*நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கிவிட்டுள்ளது இஸ்ரோ.

*லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

*பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்திற்கு தேவையான தினமும் ஏராளமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

*அதே போன்று பெங்களூரு அருகே உள்ள பய்யாலாலு என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள 32 மீட்டர் ஆன்டெனா மூலமும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

*இந்த ஆன்டெனா சந்திராயன் 1 திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் மூலம் லேண்டருடன் பேச இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

*விக்ரம் லேண்டர் 3 ட்ரான்ஸ்பாண்டர்கள் மற்றும் ஒரு ஆன்டெனாவை கொண்டது. அதன் மேற்பரப்பில் டூ வடிவில் இவை அமைந்துள்ளது. அதன் மூலம் தான் சிக்னலை பெற்று லேண்டர் பதிலளிக்க முடியும். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டு 100 மணி நேரம் மேலாகியும் லேண்டரில் இருந்து இதுவரை சிக்னல் வரவில்லை.

* அது நல்ல நிலையில் உள்ளதா உடைந்து விட்டதா என்பது குறித்து இதுவரை இஸ்ரோ அறிவிக்காதது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லேண்டரும் அதன் உள்ளே இருக்கும் ரோவரும் சந்திரனில் ஒரு பகல் பொழுதுக்கு மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*சந்திரனில் ஒரு பகல் என்பது பூமியின் 14 பகலுக்கு சமம். பகல் பொழுதில் தமக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் லேண்டருக்கு வெளியே தகடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

*அதன் படி சூரிய சக்தியை பெற்று லேண்டர் இயங்குவதற்கான 14 நாள் கெடுவில் இதுவரை 5 தினங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 9 தினங்கள் மட்டுமே உள்ளன.

*அதற்கு லேண்டர் தனக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்று இயங்குமா என்பதில் மர்மம் நீடிக்கிறது. அதன் பின் சந்திரனில் இரவு தொடங்கிவிடும். அது கடும் குளிர் இரவாக இருக்கக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*குளிர் இரவில் லேண்டர் சிக்கினால் அது மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. எனவே அதுவரை விஞ்ஞானிகளின் முயற்சி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525229

  • தொடங்கியவர்

சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா? - மயில்சாமி அண்ணாதுரை விவரிக்கிறார்

இந்தியாவின் சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேற்பகுதியில் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கருவியை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமா?

 

விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேல் பகுதியில் கிடப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாகத் தொழில்நுட்ப ரீதியாகப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

விக்ரம் லேண்டர் கருவி நிலவில் முழுதாக இருப்பது ஆர்பிட்டர் எடுத்த தெர்மல் இமேஜ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் உண்மையில் அந்தப் படங்கள் எப்படி எடுக்கப்பட்டன?

 

"அந்தப் படங்கள் தெர்மல் இமேஜிங் முறையில் எடுக்கப்பட்டவை என எழுதப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை ஆப்டிகல் முறையில்தான் எடுக்கப்பட்டவை. நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டரில் இரண்டு கேமராக்கள் இருக்கின்றன. ஒன்று ஆர்பிட்டர் ஹை ரெசல்யூஷன் (OHRC) கேமரா. மற்றொன்று டெரைன் மேப்பிங் கேமரா. 30 சென்டிமீட்டர் ரெசல்யூஷன் கொண்ட உயர்தர படங்களை இந்த ஓஎச்ஆர்சி எடுக்கும். இது ஒரு வழக்கமான ஆனால், உயர்ந்தபட்ச ரெசல்யூஷனைக் கொண்ட கேமரா, அவ்வளவுதான். இந்த ஓஎச்ஆர்சி நிலவின் தரைப்பகுதியைப் படம் பிடிக்கும். அப்படித்தான் இந்த லேண்டர் கீழே இருப்பது தெரியவந்தது" என்கிறார் சந்திரயான் - 1 திட்டத்தின் முன்னாள் இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை.

விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை ஆர்பிட்டரில் உள்ள கேமரா படம் எடுத்துவிட்டதாகக் கூறி சில படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவருகின்றன. உண்மையில் விக்ரம் லேண்டரின் மிகத் தெளிவான புகைப்படத்தைப் பெற வாய்ப்புள்ளதா?

"இல்லை. அந்தப் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக விழாது. சாய்வாகத்தான் விழும். நீங்கள் கூகுள் மேப்களில் பார்க்கும்போது அவை தெளிவாகத் தெரியக் காரணம், அவை சூரிய ஒளி நேரடியாக விழும்போது எடுக்கப்பட்டவை என்பதுதான். ஆனால், இங்கே சூரிய ஒளி சாய்வாகத்தான் விழும். அதனால், தெளிவில்லாத படம்தான் கிடைக்கும். அதாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்தப் பகுதியின் படத்தில் எந்தப் பொருளும் இருக்காது. இப்போது அங்கே ஒரு பொருள் இருக்கிறது. அப்படித்தான் இது கண்டறியப்படுகிறது. இந்த ஆர்பிட்டர் நிலவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் சந்திரனைச் சுற்றிவருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார் மயில்சாமி.

நிலவின் தரையில் கிடக்கும் லாண்டரைத் தொடர்பு கொண்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2.1 கி.மீ. உயரத்திலிருந்து லாண்டர் கீழே விழுந்துவிட்ட நிலையில் இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

"இந்த லாண்டர் கீழே விழவில்லையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இறங்க வேண்டிய இடத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் இறங்கிவிட்டால்கூட அதனைத் தொடர்புகொள்வது இயலாமல் போகலாம். லாண்டரை நேரடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொள்ள முடியாது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆர்பிட்டரைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆர்பிட்டர் சிக்னல்களை லாண்டருக்கு அனுப்பும். பிறகு லாண்டர் சிக்னல்களை ஆர்பிட்டருக்கு அனுப்பும். ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்பும். இதுதான் முறை.

இப்போது வேறு ஒரு இடத்தில் லாண்டர் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனுடன் தொடர்புகொள்ள முடியுமா என்பதை இரண்டு, மூன்று காரணிகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். அதாவது, அந்த லாண்டர் பவர் - ஆன் நிலையில் இருக்க வேண்டும். லாண்டர் ஆண்டனா தொடர்பு கொள்ளும் திசையை நோக்கி இருக்க வேண்டும். ஆண்டனாவோ, லாண்டரோ சேதமடைந்திருக்கக்கூடாது.

நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர், லாண்டர் கிடக்கும் இடத்திற்கு மேல் 5-10 நிமிடங்கள்தான் வரும். அதற்குள் தகவல் தொடர்பு கிடைத்தால் உண்டு" என விளக்குகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் விழுந்துவிட்டாலும்கூட, எப்படியாவது அதனுடன் தொடர்பு கிடைத்துவிட வேண்டும் என்பதுதான் பலரது வேண்டுதலாக இருக்கிறது.

"இப்படிப் பல முறை நடந்திருக்கிறது. ஏதாவது ஒரு கிரகத்திற்கு ஒரு கருவியை அனுப்பினால், அந்தக் கருவி பத்திரமாக தரையிறங்கியிருக்கும். ஆனால், தொடர்பு இல்லாமல் போயிருக்கும். பிறகு சில நாட்கள் கழித்து தொடர்பு கிடைக்கும். இது செயற்கைக்கோள்களில் அடிக்கடி நடக்கும். பல முறை இந்தியா உட்பட பல நாடுகள் அனுப்பிய செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப் பாதையில் நின்றவுடன் சமிக்ஞை எதையும் அனுப்பாது. ஆனால், சில நாட்கள் கழித்து சமிக்ஞை கிடைக்க ஆரம்பிக்கும். நாம் தொடர்ந்து அந்த செயற்கைக்கோளுக்கு சமிக்ஞையை அனுப்ப வேண்டும். அதைச் செயல்படவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். சில சமயங்களில் அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. ஆனால், இதைப் பல காரணிகள் தீர்மானிக்கும்" என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

நிலவில் விழுந்துவிட்ட லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்த பதினான்கு நாட்கள் முயற்சிக்கப் போவதாக இஸ்ரோ தலைவர் சிவன் சொல்லியிருக்கிறார். "லாண்டரைப் பொறுத்தவரை சூரியன் தென்துருவப் பகுதிக்கு வரும் முதல் நாளில் தரையிறங்கும். நிலவில் ஒரு சூரிய நாள் என்பது பூமியில் 14 நாட்கள். இந்த பதினான்கு நாட்களுக்குப் பிறகு அங்கு சூரிய ஒளி இருக்காது. ஆகவே அந்த லாண்டர் செயல்படாது. அதனால்தான் பதினான்கு நாட்களுக்குள் அதைச் செயல்படவைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்தப் பகுதி இருளாகிவிட்டால் அந்தக் கருவியின் சர்க்யூட்கள் அணைந்துவிடும். பிறகு எப்படி தொடர்புகொள்ள முடியும்? அந்தப் பகுதிக்கு மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும்போது சர்க்யூட் மறுபடியும் இயக்கத்தைத் தொடருமா என்பதையெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது" என விளக்கமளிக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

லாண்டர் நிலவில் தரையிறங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளை இஸ்ரோ தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.

இஸ்ரோவின் முதல் தலைவர் டாக்டர் விக்ரம் ஏ சாராபாயின் பெயர்சூட்டப்பட்ட இந்த லாண்டர், 1471 கிலோகிராம் எடையைக் கொண்டது. 14 நாட்கள் இயங்கக்கூடியது. இதிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் பெங்களூருக்கு அருகில் உள்ள பயலாலுவில் உள்ள இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மையத்தில் பெறப்பட்டு ஆராயப்படும். இந்த லாண்டர் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டருடனும் தொடர்புகொள்ளும்.

இந்த லாண்டரில் பிரக்யான் என்ற உலவி வாகனமும் வைக்கப்பட்டிருந்தது. நிலவை நெருங்கியவுடன் மேன்ஸினஸ் சி மற்றும் சிம்பெலியஸ் என் என்ற இரு பள்ளத்தாக்குகளுக்கு நடுவில் உள்ள இடத்தில் வினாடிக்கு 2 மீட்டர் வேகத்தில் தரையிறங்கும்படி இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/science-49663994

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர்; ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22 ஆம் திகதி ெராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது. கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூரிலுள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் கவனமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் விழுந்துள்ள தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் தொன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் ரோபோடிக்கை அனுப்புவதற்கான பணிகளில் தயாராவதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது கனடா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

https://www.thinakaran.lk/2019/09/11/இந்தியா/40120/ஆபத்தான-இடத்தில்-விக்ரம்-லேண்டர்-ஐரோப்பிய-விண்வெளி-மையம்-எச்சரிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.