Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனின் முடிவு: இலங்கை கவலை

Featured Replies

பிரிட்டனின் முடிவு: இலங்கை கவலை

அதன் பின்னணி குறித்து அரசு ஆராயுமாம்

கொழும்பு, மே 5

இலங்கைக்கான நிதி உதவியை பிரிட்டன் முடக்கி யமை தொடர்பாக இலங்கை அரசு ஆராயவுள்ளதாக அர சின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கை யில்

அரசு மனித உரிமை மீறல் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. நாட்டில் பயங்கரவாதம் நிலவுகின்றபோது, அப்பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.

அதற்கான பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். அதைத்தான் அரசு தற்போது செய்துகொண்டிருக்கின்றது.

நாம் முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்குப் போதுமான காரணங்கள் எம் மிடம் உள்ளன. மனித உரிமை மீறல்களை முற்றாக இல்லா தொழிப்பதில் அரசு கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.

புலிகள் மேற்கொண்டுவரும் பயங்கரவாத நடவடிக் கையை முறியடிப்பதற்காக அரசு மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையை மனித உரிமை மீறல் என்று சொல்ல முடியாது.

இந்த வகையான இராணுவ நடவடிக்கையை மனித உரிமை மீறல் எனக்கருதி பிரிட்டன் நிதியுதவியை நிறுத் தியதை இட்டு நாம் கவலையடைகின்றோம். இருப்பினும், இதன் உண்மையான பின்னணி என்னவென்று நாம் ஆராயவுள்ளோம் என்றார். (

உதயன்

ஸ்ரீ லங்கா பற்றிக் கவலைப்படுவதற்கு இனி நாடுகளேது. மற்றைய நாடுகள் மீதுதான் இவர்களின் கவலை. சொல்லும்போது ஒன்றையும் கேட்பதில்லை. அதற்குக் கிடைத்த வெகுமதிதான் இது. இன்னமும் கவலை கொள்ள வேண்டிய நிலைமைகள் நிறைய வரும்.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட பிரித்தானியாவுக்கு அனுமதி வழங்கமாட்டோம்

இலங்கையின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. பிரித்தானியா இதுவரை அவ்வாறான ஒருவிடயம் தொடர்பாக எம்முடன் உத்தியோகபூர்வமான முறையில் கலந்துரையாடவில்லை. இருப்பினும் எமது நாட்டின் பிரச்சினையை எம்மால் தீர்த்துக்கொள்ளமுடியும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான பாலிய கோஹன தெரிவித்தார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக அண்மையில் விவாதிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக அண்மையில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய பிரித்தானியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதுவரை எந்தவொரு விடயம் தொடர்பாகவும் பிரித்தானியா இராஜதந்திர ரீதியில்எம்முடன் கலந்துரையாடவில்லை.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ஆசிய மனித உரிமைகள் மையம் பிரித்தனியாவைப் போல் மற்ற நாடுகளும் உதவியை நிறுத்த வேண்டும் என்று சொல்லி விட்டது, முன்னரே ஜேர்மனி நிறுத்தி விட்டது, என்னும் சில நாள்களிள் பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் உயருவது நிச்சையம்

அதி உச்ச மனிதவுரிமை மீறல்களைச் செய்துகொண்டு உலக நாடுகளுக்கு நல்ல பிள்ளை வேசம் போட்டுக்கொண்டு, பணத்தை கொள்ளை,கொள்ளையாக அள்ளி அதனை ஆயுதங்களுக்கும், வெளினாடுகளில் புலனாய்வுகளுக்கும், ஒட்டுக்களுக்கும், ஆடம்பரங்களுக்கும் செலவழித்துக்கொண்டு எத்தனை நாட்களுக்கு நாட்களை ஓட்டமுடியும்?

உலகம் விழித்து விட்டது... புலத்தமிழர்கள் மிக வேகமாக செய்யவேண்டிய வேலைகளை செய்து கொண்டு

இருக்கிறார்கள்...

உலக மனிதவுரிமை அமைப்புக்களும் சிவப்பு கொடி காட்டிவிட்டன.....

நீ கண்ணை மூடினால் உலகம் இருட்டாகிவிடுமா?

அசிங்கங்களை நிறுத்து அல்லது உலகினால் அசிங்கமாவாய்?...

இனிய தமிழ்மக்களே தொடருங்கள் உங்கள் வேலைகளை...

உங்கள் வேலைகளின் பலன் தான் தற்போது இலங்கை மிரள்கிறகிறது...

மற்றைய நாடுகளும் தொடர அயராது பாடுபடுங்கள்... பாதிக்கப்பட்டவர்கள் மௌனமாக இருப்பது தவறு..

எம்மிடம் நீதி நியாயங்கள் உள்ளது.. அ நியாயங்களுக்கு எதிராக திரளுங்கள்..தொடரருங்கள்.....பல வெற்றிகள் கிடைக்கும்....

தமிழர்கள் என்ன ....

ஆமாம் புலத்தமிழ்ர்களின் பங்கு பாராட்டப்ட வேண்டிய விசயம்.

இன்னும் சில நாட்களே எம்மவர் கனவு பலிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.