Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Featured Replies

IMAGE-MIX.png
இலங்கை படையினரை ஐநாவின் அமைதிகாக்கும் படையணியின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் ஐநா யுத்தகுற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகளை  அலட்சியம் செய்யப்போவதில்லை என்ற செய்தியை தெரிவித்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஐநாவிற்கான இயக்குநர் லூயில் சர்பொனேயு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும குறிப்பிட்டுள்ளதாவது:

louis_charbonneau.jpg

 

இலங்கை படையினரை ஐநாவின் அமைதிகாக்கும் படையணியின் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியதன் மூலம் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு எதிராக ஐநா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதே இதற்கு காரணம்.

இலங்கையின் 26 வருட ஈவிரக்கமற்ற யுத்தத்தின் இறுதியில் சவேந்திர சில்வா தலைமை வகித்த படையணியொன்று கைதுசெய்யப்பட்டவர்களை சுட்டுக்கொன்றதுடன் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது என ஐநாவின் விசாரணைக்குகுழுவொன்று 2015 இல் கண்டுபிடித்திருந்தது.

யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்து நீதிவிசாரணைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அது இன்னமும் இடம்பெறவில்லை.

2012 இ;ல் ஐக்கியநாடுகளிற்கான பிரதிதூதுவராக பணியாற்றிய வேளை சவேந்திர சில்வா அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாக அமைதிப்படை நடவடிக்கைகள் குறித்த ஐநாவின் விசேட குழுவிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

1980களில் இலங்கையின் தென்பகுதியில் ஜேவிபியினருக்கு எதிரான நடவடிக்கைகளின் போதும் சவேந்திரசில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

Shavendra_Silva1.jpg

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான யுத்தத்தின் இறுதி தருணங்களில் 40000ற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடுரம் காரணமாக ஐநாவின் நடவடிக்கைகளில் மனித உரிமைக்கு முக்கியம் என்ற கொள்கையை ஐநா பி;ன்பற்ற தொடங்கியது.

இந்த நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களில் அலட்சியப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இது அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் படையினருக்கும் நாடுகளிற்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது.இலங்கை தொடர்பான ஐநாவின் கொள்கையை அடிப்படையாக கொண்ட நிலைப்பாடு ஐநாவின் புதிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என எதிர்பார்ப்போம்.

அமைதிப்படை நடவடிக்கைகளில் தங்கள் படையினரை ஈடுபடுத்தும் நாடுகளிற்கு தங்கள் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என விசாரணை செய்து ஆராயும் கடப்பாடு உள்ளது.

இவ்வருட ஆரம்பத்தில் லெபனானில் பணிபுரிய அனுப்பபட்ட இலங்கை படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து ஆராயப்படவில்லை என்பது தெரியவந்தது.

2017 இல் ஹெய்ட்டியில் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை படையினர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக திருப்பி அனுப்ப பட்டனர், விசாரணைகளை மேற்கொள்வதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் இன்னமும் அது இடம்பெறவில்லை.

சவேந்திரசில்வாவின் நியமனம் இலங்கை இராணுவம் பாரிய துஸ்பிரயோகங்களை இழைத்தவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படவேண்டும்  என்ற கொள்கையை ஸ்தாபனமயப்படுத்தியுள்ள ஒன்று என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரசினதும் ஐக்கியநாடுகளின் அமைதிகாக்கும்; நடவடிக்கைகளிற்கான ஸ்தாபனத்தினதும் நடவடிக்கை யுத்தகுற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகளை ஐநா அலட்சியம் செய்யாது என்ற செய்தியை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/65734

  • கருத்துக்கள உறவுகள்

இதை... நம்பலாமா? அப்படி நடந்தால்...  
சம்பந்தன், சுமந்திரன்...  கோஸ்டிகள்,  இலங்கை அரசாங்கத்துக்கு... 
முட்டுக் கொடுக்காமல், ஒதுங்கி நிற்கும் படி... பணிவன்புடன்  வேண்டுகின்றேன். 

  • தொடங்கியவர்

இலங்கை படையினரிற்கு ஐநா தடைவிதித்தமைக்கு சிறிசேனவின் நடவடிக்கையே காரணம்- ஐநா சில விடயங்களை தெளிவுபடுத்தவேண்டும்- சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம்

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள  சவேந்திர சில்வாவை  இராணுவ தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை படையினர் ஐநா அமைதிகாக்கும் படையிலிருந்து தடை செய்யப்படும் நிலைஉருவாவதற்கு  காரணம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கையில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை படையினர் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஐநா தடை செய்துள்ள அறிவிப்பு இலங்கைக்கு துயரமானதாக அமைந்துள்ளது.

ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள  சவேந்திர சில்வாவை  இராணுவ தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை இந்த நிலையை எதிர்கொள்வதற்கு காரணம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் 2008- 2009 களில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கினார்.

shavendra.jpg

அவரது படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான திட்டமிடப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டனர் என தெரிவிப்பதற்கனா போதிய ஆதாரங்கள் உள்ளன.

பொதுமக்களிற்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் பேரழிவு வர்ணிக்க கூடியவையாக உள்ளன.

எனினும்யுத்தம் முடிவடைந்து  பத்து வருடங்கள்  முடிவடைந்துள்ள போதிலும் நிலைமாற்றுக்கால நீதி நடவடிக்கைகளிற்கு தன்னை அர்ப்பணித்துள்ள போதிலும் இலங்கை வெட்கமின்றி சவேந்திரசில்வாவை இன்னமும் யுத்தவீரர் என அழைக்கின்றது.

இதன் காரணமாக யுத்தத்தின் பின்னர் படையணிகளில் இணைந்த இளம் வீரர்கள் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

சவேந்திர சில்வாவின் நியமனம் இலங்கையின் சொந்தமான துயரமான நடவடிக்கை என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இலங்கை கடந்த கால குற்றங்களிற்கு நேர்மையான குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு  சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுவதையே விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்,இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள் குறித்து துல்லியமாக விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளது, இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும் செயற்பட்ட இடம் குறித்து துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது.

மோதலின் போது உயிர்தப்பிய, நேரில் கண்ட சாட்சியங்களான நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து பெறப்பட்ட விரிவான தகவல்களை அடிப்படையாக கொண்டதாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.

யுத்தம் இடம்பெற்றவேளை இலங்கை இராணுவம் வெளியிட்ட நாளாந்த களநிலைமை குறித்த இணையப்பதிவுகளையும் நாங்கள் ஆராய்ந்துள்ளோம். எனினும் இலங்கை இராணுவம் தற்போது அதனை இணையத்திலிருந்து அகற்றியுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டஙகள் மீறப்பட்டதாக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் எந்த பகுதியிலிருந்து எழுந்தனவோ அந்த பகுதியில் நிலைகொண்டிருந்த படையணியை அடையாளம் காண்பதற்கு விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், குறிப்பிட்ட படையணியுடன் தொடர்புபட்ட நபர்களை ஐக்கியநாடுகள் படையணியில் ஈடுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.

yasmin_sooka_se18.jpg

இலங்கை இராணுவத்தை பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என கருதும் பல சிங்களவர்களும் தமிழர்களும் நேரடியாக இந்த ஆராய்ச்சிக்கு உதவியுள்ளனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா அவர்களிற்கு நாங்கள் நன்றிக்கடன் உடையவர்களாகவுள்ளோம் ஆனால் பாதுகாப்பு காரணங்களிற்காக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுவரை நீதியை அனுபவித்திராத பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு ஐநா நடவடிக்கை எடுக்கின்றது என்ற செய்தி நம்பிக்கையை அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் தமது காலம் முடியும் வரை பணியை தொடர்வார்கள் பின்னர் வேறு ஒரு நாட்டின் படையினர் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்பதே தற்போது வெளியாகியுள்ள தகவல்.

எனினும் ஐநா அமைதிப்படை கடுமையான ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய சந்தர்ப்பம் உருவானால் இந்த தடை கைவிடப்படலாம் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐநா மேலதிகமான தெளிவுபடுத்தல்களை வழங்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்போம் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இந்த முக்கியமான மனித உரிமை விவகாரத்திலிருந்து தப்ப நினைத்தால் ஐநாவின் அமைதிகாக்கும் படையணியின் கௌரவம் பாதிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

சிறிதளவும் சகிப்புதன்மை இல்லை என்ற கொள்கையை பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள் என்றால் அது அவ்வாறானதாகவே காணப்படவேண்டும்  உறுதிப்பாட்டுடன் அதனை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


https://www.virakesari.lk/article/65751

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.