Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது எச்சரிப்பவர்களின் காலம். எங்களதே எதிர்காலம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இது எச்சரிப்பவர் காலம் எங்களதே எதிர்காலம். - வ.ஐ.ச.ஜெயபாலன்

.

வடக்கு தமிழ் மக்களுக்கு, மல்வத்து பீடாதிபதி கடும் எச்சரிக்கை என்கிற தலைப்பு செய்திகளை வாசிக்கிறபோது நினைவு 1987 அக்டோபர் மாததுக்கு திரும்பிச் செல்கிறது.

1987ல் பாலகுமாருடன் சேர்ந்து சமாதான திட்டம் ஒன்றை வடிமைத்த காலம் நினைவுக்கு வருகிறது. பிரேமதாச பெரும்போரை தூண்டிவிடுகிற எதிர் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அன்று பாலகுமார் ஊடாக வலியுறுத்தப் பட்ட திட்டத்தை தோற்கடிப்பதில் இரண்டாம் நிலை தலைவர்கள் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். யோ போன்றவர்கள் பலகுமாரனையே மேலிடத்தை அடைய விடாமல் தடை போட்டனர். ராஜ தந்திரத்தின் அரிச்சுவடி முதல் எதிரி வலுவானவனாக இருப்பின் எல்லா நிலைகளிலும் முதல் எதிரியை தனிமைப் படுத்துவதாகும். முதல் எதிரி இலகுவில் அழிக்கபடக்கூடியவனாகா வெளி ஆதரவில்லாதவனாக இருந்தால் மட்டும் ’பயன்படுத்திவிட்டு அழித்துவிட முடியும் என்கிற’  புறநடை சூழல்கள் உருவாகும். இத்தகைய புறநடைச் சூழல் சியாங்கைசேக் காலத்தில் சீனாவில் இருந்தது. அதனை மா சே துங் பயன்படுத்திக்கொண்டார், அது ஒருபோதும் பொதுவிதியல்ல. பிரேமதாசா அமரிக்கா, மேற்க்கு நாடுகள்  பாகிஸ்தானின்  நேரடி ஆதரவையும்   சீனாவின் மறை முக ஆதரவையும் பெற்றவராக இருந்தார்.  இதுவே எங்கள் அடிப்படைக் கவலையாகவும் அச்சமாகவும் இருந்தது. மறுபுறத்தில் சில டிக்சிற் அணி ம அதிகாரிகள் தடைகளை போட்டார்கள். அன்று பிரேமதாசாவின் எதிர் ராஜதந்திரம் தோல்வி அடைந்திருந்தால் இன்று பீடாதிபதிகள் ’பண’ மட்டுமே ஓதிக்கொண்டிருந்திருப்பார்கள். 

இது நடைபெற்றபோதே துரதிஸ்ட்டவசமாக  நிலமை கட்டு மீறியது.  சுற்றிவழைப்புக்குள் போராளிகள் கெரிலா தன்மையை இழந்து நேரடி இராணுவ தன்மைக்குள் தள்ளப்பட்டனர். சுற்றிவழைப்புக்குள்  நேரடி இராணுவத்துடன் நேரடி இராணுவம் போல போராடுவது போராடுவது தற்கொலை முயற்ச்சி என தோழர் திருவிடம் புலம்பினேன். திருவின் நண்பர்களிடம் பிரபலமில்லாத மூன்றில் ஒரு பங்கினரை வீட்டுக்கு அனுப்புங்கள். ஓரளவு மேலோட்ட  தொடர்புள்ளவர்களை  சரணடைய வையுங்கள்  தலைமைகள் உட்பட முக்கியமான மூன்றில் ஒருபங்கினர் யாழ் கடலேரி ஊடாகவும் கரையோரமாகவும்  கல்முனை பூனகரி வன்னியென பின்வாங்கிச் செல்லுங்கள். அதன்பின் பேச்சூவார்த்தையை ஆரம்பியுங்கள் என அறிக்கை கொடுத்தேன். பின்வாங்கும்படியான என் அறிக்கை அமைப்பில் சிலர் ஏற்றுக்கொண்டனர். சிலரை  கோபபடுத்தியது. எ 

கோபபட்டவர்களால் நான் தூக்கபட்டேன். தலைமைக்கு தெரியாமல் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என நான் கூறியதால் மாலை சுடுவதற்க முடிவானது.

எனினும் என் மூன்று அம்ச பின்வாங்கும் திட்டம் ஏற்கப்பட்டது. ஆகஸ்ட் 16 மாலை அதிருப்தி அணியினர் என்னை சுடமுன்னம்   விசேட அணி ஒன்றினால் நான் விடுவிக்கபட்டேன்.

.

துர் அதிஸ்ட்டவசமாக நானும் பாலகுமாரனும் வலியுறுத்திய பேச்சுவார்த்தை திட்டம் வெற்றி பெறவில்லை. அதற்க்கு இருதரப்பு காரனங்கள் உள்ளன. இந்திய தரப்பில் தவறான உளவுத் தகவல்களும் டிக்சிற்றின் தவறான  மதிப்பீடுகளும்  மமதையும் பிழையான  வழிகாட்டலும்கூட  முக்கிய காரணம். முதலில் இந்தியாவை தோல்விகரமாக வெளியேற்றுவது பின் போராளிகளை அழிப்பது என்பதே பிரேமதாசாவின் திட்டமாக இருந்தது. 

.

இது தனையனின் காலம். தனையனிடமும் இந்தியாவும் தமிழர்களும் ஏமாறப் போகிறார்களோ தெரியவில்லை. தேர்தலின்பின் கோத்தபாயா வந்தால் 1995ல் மகிந்த வந்ததுபோல அழிவு என்பது ஓரளவு துல்லியமாக உள்ளது. தனயன் சுயித் தந்தை பிரேமதாசா நிலைபாட்டை எடுக்க மாட்டார் என்பதற்க்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காலம்தாழ்த்தி இந்தியாவும் தமிழர்களும் ரணிலே பறுவாயில்லை என்று சொல்கிற நிலமை ஏற்படாமல் இருந்தால் சரி,
 

.

என்னையும் என்குடும்பத்தையும் சுற்றி வளைப்பில் இருந்து  பாதுகாப்பாக வன்னிக்கு அனுப்ப பாலகுமார் சுதாமாஸ்ட்டருக்கு உத்தரவிட்டார்.  பல முயற்ச்சிகள் தோற்றபின்னர் போராளிகளின் தலைமையை பால்குமாரன் சந்தித்து கரும்புலிகள் வசமிருந்த பகுதியூடாக கரும்புலிகளது அனுசரணையுடன் சாவகச்சேரிக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து ஈரோஸ் தோழர்கள் கபிலனும் அன்மரர் சில்வாவும் என்னையும் குடும்பத்தவர்களையும் வன்னிக்கு அழைத்துச் சென்றனர். என்னை விடுவித்த தலைமைக்கும் முற்றுகையால் காப்பாற்றி வன்னிக்கு அனுப்பிய  தோழர் பாலகுமாரனுக்கும் என்றும் அன்பும் அனுசரணையும்.

.

வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் பிக்குகளின் மிரட்டலை பார்த்து அழவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் நெடுநாளைக்கு இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரியும்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் வெற்றிபெறுவதற்க்கு அரசியல்ரீதியாக தயாராகுவோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.