Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹபரணையில் 7 யானைகள் உயிரிழப்பு – காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஹபரணையில் 7 யானைகள் உயிரிழப்பு – காரணம் என்ன?

ஹபரண, திகம்பதஹ, ஹிரிவடுன்ன வனப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹிரிவடுன்ன, தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில் யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை 7 யானைகளின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உடலில் விஷம் கலந்தமை காரணமாக யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்த யானைகளின் உடற்பாகங்கள் சோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் ஹிரிவடுன்ன வனப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Elephant-Death-2.jpg

http://athavannews.com/ஹபரணையில்-7-யானைகள்-உயிரி/

  • கருத்துக்கள உறவுகள்

மர்மமான முறையில் இறந்த 7 யானைகள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை

 

7b3475a4bcfa983cb1b9b6e6f566e8d1_XL

ஹபரண, ஹிரிவடுன்ன, தும்பிகுளம காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் தொடர்பான விசாரணையின் போது இவற்றின் வயிற்றில் வெள்ளரி விதைகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் (27)ஆம் திகதி இறந்த நான்கு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு, செப்டெம்பர் (28)ஆம் திகதி மேலும் 3 யானைகளின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த இரு நாட்களில் குறித்த பகுதியில் ஏழு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இறந்த யானைகளில் ஆறு பெண் யானைகளும் 1 ஆண் யானையும் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இறந்த பெண் யானைகளில் மூன்று கர்ப்பிணி யானைகளும் காணப்படுவதாக வன விலங்கு கால்நடை வைத்தியர் சந்தன ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த யானைகளின் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இறந்த யானைகளின் விசாரணையில் ஒரு யானையின் வயிற்றில் இருந்து வெள்ளரி விதைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானைகளின் உடலில் புல் மாத்திரம் காணப்பட்டதாகவும் வேறு எந்த உணவும் உட்கொண்டமைக்கான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிகிரியா வன விலங்குகள் அலுவலக அதிகாரிகள், இராணுவம், ஹபரண பொலிஸார் ஆகியோர் பிரதேசவாசிகளுடன் இணைந்து, மேலும் யானைகளின் சடலங்கள் உள்ளதா என தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உணவு விசமாகி இறந்திருந்தால் யானைகளின் உடலில் இரத்தத்தில் இது தொடர்பாக கண்டறிய முடியும் எனவும் கடந்த 28 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்ட உடற் பாகங்களில் ஒன்று ஆண் யானையின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

3 யானைகள் தொடர்பான உடற்பரிசோதனையை கடந்த 29 ஆம் திகதி இவர் தலமையிலான குழு நடத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு காட்டுபகுதியில் 2 கிலோமீற்றர் தூரத்தை கால்நடையாகவும் படகு மூலமாகவும் சென்று இறந்த யானைகள் தொடர்பான உடற்பரிசோதனையை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

யானைகளின் உடற்பாகங்கள் அழுகிய நிலையில் இருப்பதால் இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியாமல் இருப்பதாகவும் விஞ்ஞான ரீதியான பரிசோதனையின் மூலமாகவே இதற்கான உண்மை நிலையை கண்டறிய முடியும். இதனால் இந்த உடற்பாகங்களை அரச இரசாயன பரிசோதனை அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வன விலங்கு கால்நடை வைத்தியர் சந்தன ஜெயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.(அ)

-தகவல் திணைக்களம்-

http://www.dailyceylon.com/190098/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.