Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் 16 ஆம் திகதி குடும்ப ஆட்சியின் அரசியில் தீர்வுக்கு முற்றுப்புள்ளி‍ வைக்கப்படும்

Featured Replies

IMAGE-MIX.png
(இராஜதுரை ஹஷான்)

இனவாதிகளினால் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை  ஒருபோதும் முன்னேற்ற முடியாது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் குடும்ப ஆட்சியின் அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ராஜபக்ஷர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. திறமைகளின் அடிப்படையில் பதவிகள் எவருக்கும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இன்று அவர்களே   ஜனநாயகத்தின் பிறப்பிடமாக கருத்துரைக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது . இதுவே என்றும் தொடரும் என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டம் இன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம் பெற்றது. இதன் போது கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/66341

  • தொடங்கியவர்

இவரும் ஒரு அரசியல் குடும்பவாதி தான் 🙂

குடும்ப அரசியல்  இந்த நாட்டின் சாபக்கேடு

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ampanai said:

இவரும் ஒரு அரசியல் குடும்பவாதி தான் 🙂

குடும்ப அரசியல்  இந்த நாட்டின் சாபக்கேடு

 

குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியல் செய்வது வேறு குடும்ப அரசியல் வேறு.

ஒரு குடும்பத்தை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அரசியலில் இருப்பதே குடும்ப அரசியல்.

93 இல்ர ணசிங்க பிரேமதாச இறந்த போது சஜித் யுஎன்பியில் ஒரு பொறுப்பிலும் இருக்கவில்லை.  2000ம் ஆண்டே எம்பியாகினார். 

  • தொடங்கியவர்

‘குடும்ப ஆட்சிக்கு இடமளியோம்’

 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள், குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லையென, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,  20 வருடங்களின் பின்னர் வெற்றிப்பெறும் தலைவர் எம்மிடம் இருப்பதாக பிரமதரிடம் நாம்  எடுத்துரைத்தோம். அவ்வாறு எடுத்துரைத்தப் பின்னரே, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக களமிறக்க இணக்கம் தெரிவித்தார்.

தற்போது ஒரே குடும்பத்தினரே அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றனர். இது வெட்கக்கேடானச் செயல். தவறுதலாக ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சிக்கு வந்தால் மஹிந்த பிரதமர், சமல் சபாநாயகர், பசில் நிதியமைச்சர் இவ்வாறே பதவிநிலைகளை அமைத்துக்கொள்வர் எனத் தெரிவித்த அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல,  தங்களது குடும்பத்தை பாதுகாக்க அவர்கள் முனைகின்றனர் எனவும், குடும்ப ஆதிக்கத்தை மீண்டும் அரசியலில் நிலைநிறுத்த போராடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/குடும்ப-ஆட்சிக்கு-இடமளியோம்/175-239623

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.