Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து சிறிசேனா விலகல்

Featured Replies

இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ள அதிபர் சிறீசேனா, முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்.

இலங்கை அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று மதியம் 12 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சிறிசேனா தரப்பில் வேட்புமனு செய்யவில்லை என்பதால், அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக, ராஜபட்சேவை சிறீசேனா சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபட்சேசவை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த 1982ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேரும் போட்டியிடவில்லை. அதேபோல் தற்போதைய அதிபர் தேர்தலிலும் அதிபர் சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்கட்சித் தலைவர் ராஜபட்ச ஆகியோர் போட்டியிடவில்லை.

இத்தேர்தலில் மொத்தம் 41 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதேசா (Sajith Premadasa), கோத்தபய ராஜபட்ச, முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே (Mahesh Senanayake), தமிழ் அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் (MK Shivajilingam) ஆகியோர் முக்கியமானவர்கள்.

https://www.polimernews.com/dnews/83626/இலங்கை-அதிபர்-தேர்தலில்இருந்து-சிறிசேனா-விலகல்

  • தொடங்கியவர்

ஏனைய ஜனாதிபதிகள் போன்று எனக்கு குற்றச்சாட்டு இல்லை

 

எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற நபராக நவம்பர் மாதத்தில் அரசாங்கத்தின் பதவி காலத்தை நிறைவு செய்து வெளியேறவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்காது எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த மாநாடு நேற்று முன்தினம் (05) மாலை எல்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற நபராக அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நிறைவு செய்து வெளியேறுவதாக கூறினார்.

ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்க தான் தீர்மானித்திருந்த போதிலும் அதற்காக பல போராட்டங்களை நடத்த வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜே.ஆர்.ஜெயவர்தன முதல் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் போராட்டங்களை முடக்க துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டு உள்ளது.அரசியல் பலிவாங்கல்களுக்காக படுகொலை செய்வதாகவும் பெண்களுக்கு எதிராக அநீதி இழைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் எனக்கு அவ்வாறான குற்றச்சாட்டுகள் கிடையாது என்றார்.

https://www.thinakaran.lk/2019/10/07/உள்நாடு/41569/ஏனைய-ஜனாதிபதிகள்-போன்று-எனக்கு-குற்றச்சாட்டு-இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.