Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோத்தாபய தெரிவிக்கின்றாரா? மகிந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி- அச்சம்

Featured Replies

நவம்பர் 17 ம் திகதி சிறையிலுள்ள படைவீரர்கள் அனைவரையும் உடனடியா விடுதலை செய்வேன் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அனுராதபுர பிரச்சாரக்கூட்டத்தில் தெரிவித்துள்ளமை குறித்து  மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.

கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தனது கணவர் குறித்த விசாரணைகள் முற்றாக கைவிடப்படலாம் என காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சண்டே ஒப்சேவரிற்கு தெரிவித்துள்ளார்.

நான் நேரடியாக ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகவே போராடுகின்றேன் என்பதால் எனக்கும் எனது குழந்தைகளிற்கும் ஆபத்து என தெரிவித்துள்ள அவர் படையினர் எந்த குற்றத்தையும் செய்யலாம் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டியதில்லை என்ற அபிப்பிராயத்தை கோத்தபாய ராஜபக்ச உருவாக்குகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட டிலான் ஜலாம்டீனின் தாய் ஜெனீபர் வீரசிங்கவும் கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார அறிவிப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச விடுதலை செய்ய முயல்பவர்களே எனது மகனை கடத்தினார்கள் என  அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் அறிவிப்பு இலங்கையின் உண்மையான படைவீரர்களை அவமதிக்கும் ஒரு நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ள ஜெனீபர் வீரசிங்க கோத்தபாய ராஜபக்ச தனது தேர்தல் அறிவிப்பின் மூலம் படையினர் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறவருகின்றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதி அவர் நீதித்துறையை மதிக்கவில்லை அதற்கு அஞ்சவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் ஜெனிவர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்ககூடிய பாதுகாவலர் ஒருவர் இருப்பதால் படையினர் ஆள்கடத்தலில் கொலைகளில் ஈடுபடலாம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவிக்க முயல்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது மகனை கடத்தியவர்கள் குறித்து சிஐடியினரிடம் தான் வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டுள்ளதால் எதிர்காலத்தில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னால் இந்த நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியுமா என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தான் சட்டத்தையும் நீதித்துறையின் நடவடிக்கைகளையும் தனது கரங்களில் எடுத்துக்கொள்வேன் என்பதையே கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியொருவர் நீதித்துறையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது,இது மிகவும் ஆபத்தான அறிக்கை,இதன் மூலம் ஜனாதிபதியானால் தான் எப்படி நாட்டை ஆளுவேன் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/66750

  • தொடங்கியவர்

அவர்கள் இங்கு இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்-கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்

சண்டே ஒப்சோவர்

தமிழில் ரஜீபன்

 

2009 மே 21 ம் திகதி ராஜீவ்நாகநந்தன் தனது தாய் சரோஜினியை இறுதி தடவையாக தொடர்புகொண்டார்.

நாகநாதன் 2008 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்டார்.

இலங்கை கடற்படையினர் கப்பம் பெறுவதற்காக கடத்திய 11 இளைஞர்களில் இவரும் ஒருவர். இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்தனர்.

பிரிட்டன் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக ராஜீவ் செல்லவுள்ளதை கொண்டாடுவதற்காக சென்றுகொண்டிருந்த ராஜீவும் அவரது நான்கு நண்பர்களும் கடத்தப்பட்டனர்.

மே 21 ம் திகதி அவர் தாயுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பே இறுதி தொலைபேசி அழைப்பாக அமைந்தது.அவரது தாய் அன்றே தனது மகனின் குரலை இறுதி தடவையாக கேட்டார்.

இந்த தொலைபேசி அழைப்பு குறித்து கடந்த மாதம் சிஐடியினர் சரோஜினி நாகநாதனிடமிருந்து மீண்டும் ஒரு வாக்குமூலத்தை பெற்றிருந்தனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் தனது நண்பர்களுடன் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை ராஜீவ் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசியை பெற்று தனது தாயுடன் உரையாடியுள்ளார்.

தனது மகன் கடத்தப்பட்ட பின்னர் அவர் தன்னுடன் மேற்கொண்ட உரையாடல்களை சரோஜினி முழுமையாக நாட்குறிப்பொன்றில் பதிவு செய்துள்ளார்.

11_abductions.jpg

தடுப்பு முகாமில் மிகவும் பயங்கரமான சம்பவங்கள் இடம்பெறுவதாக தனது மகன் தெரிவித்ததாக சரோஜினி சிஐடியினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனது மகன் மிகுந்த அச்சத்திலிருந்தான் என சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

அம்மா அவர்கள் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களையும் யுவதிகளையும் இங்கு கொண்டுவந்து சுட்டுக்கொலை செய்கின்றனர்,என எனது மகன் தொலைபேசியில் தெரிவித்தார் என சரோஜினி சிஐடியினருக்கு தெரிவித்துள்ளார்.

எனது மகன் கழிவறைக்கு அழைத்துசெல்லப்பட்டவேளை இரத்தக்கறைகளையும் பெருமளவு இரத்தங்களையும் கண்டுள்ளான் தனக்கும் அந்தகதி ஏற்படுமோ என அவன் அச்சம் கொண்டிருந்தான் என அவர் சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

நான் அவனிற்கு எந்த தீமையும் ஏற்படாது ஜயப்பனை வணங்குமாறு கேட்டுக்கொண்டேன்,கடவுள் இருக்கின்றார் உன்னை காப்பாற்றுவார் என நான் அவனிடம் தெரிவித்தேன் என சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்தேன்.

இந்த வழக்கில் சாட்சியமாகவுள்ள கொத்தலாவல பண்டுகுமார தனக்கு சாப்பாடு சுற்றிவந்த பேப்பரில் ஐயப்பனின் படம் காணப்பட்டதாகவும் அதனை தன்னுடன் வைத்திருப்பதாகவும் ரஜீவ் தெரிவித்துள்ளான்.

கடந்த வாரம் கொழும்பு நீதவானிற்கு சமர்ப்பித்த பி அறிக்கையில் சிஐடியினர் 2009 மே 21 ம் திகதிக்கு பின்னர் ராஜீவ் நாகநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான சுமித் ரணசிங்கவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட திருகோணமலை கண்சைட் முகாமில் 18 முதல் 20 வயதிற்குபட்ட  இளைஞர் யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஒரு தசாப்தத்திற்கு மேல் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்ககூடும் என்ற நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருந்த பெற்றோர்களிற்கு சிஐடியினரின் இந்த தகவல் பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

11_abduc_case.jpg

கொழும்பில் 11 இளைஞர்களும் கடத்தப்பட்;ட எட்டுமாதங்களின் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற முடிவிற்கு தனது விசாரணையாளர்கள் வருவதாக இந்த விசாரணைகளிற்கு பொறுப்பாகவுள்ள சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ரஜீவிற்கும் அவரது தாய்க்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் ஏனைய சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.விசாரணையாளர்களிற்கு சமீபத்தில் வழங்கிய மேலதிக வாக்குமூலத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய சாட்சியங்களும் சிஐடியினர் இந்த முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கொலைகாரர்கள் மேற்கொள்ளும் கொலைகளிற்கு தானும் பலியாகக்கூடும் என ரஜீவ் அச்சம் கொண்டிருந்தார்.மே 21 2009 ற்கு பின்னர் ரஜீவ் கொலை செய்யப்பட்டார் என நாங்கள் கருதுவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளன நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தமது சாட்சியங்கள் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சிஐடியினர் குறிப்பிட்ட கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கிரிசான் வெலகெதரவும் கடற்படை உத்தியோகத்தர் செனிவரட்ண என்பவரும் கடத்தப்பட்ட 11 பேரும் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளனர் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர் எனவும் அவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் சீட்டினால் போர்த்தப்பட்டு டிரக்கில் ஏற்றப்பட்டதை தான் பார்த்தேன் எனவும் வெலகெதர ஏற்றுக்கொண்டுள்ளார்.

rajeev_naga.jpg

இந்த அறிக்கை மிகவும வலுவான ஆதாரம் என தெரிவித்துள்ள நிசாந்த சில்வா இதுவே கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டனர் என்ற முடிவிற்கு வருவதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜீவ் தனது தாய்க்கு தெரிவித்த விடயங்கள் உண்மையானவை என்பதை நாங்கள் உறுதிசெய்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.விசாரணையின் போது கடற்படையினர் தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர்களை சட்டவிரோத கடத்தி உடல் உள சித்திரவதைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை படுகொலை செய்தனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் சிஐடியினரின் இந்த தகவல்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு சிறிதும் நிம்மதி அளிப்பதாகயில்லை.

காணாமல்போன டிலான் ஜமால்தீனின் தாய் ஜெனீபர் வீரசிங்க சிஐடியினர் தெரிவிப்பதை ஏற்பதற்கு நான் தயாரில்லை என குறிப்பிட்;டார்.

எனது மகன் இறந்துவிட்டான் என்பதை நம்புவதற்கு நான் தயாரில்லை,உறுதியாக ஆதாரத்தை சமர்ப்பித்தால் மாத்திரமே நான் அதனை நம்புவேன் எஞ்சிய உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபனுபரிசோதனையை  நம்புவதற்கு நான் தயார் என அவர் தெரிவித்தார்.

நான் ஜோதிடத்தை நம்புகின்றேன் அவை எனது மகன் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கின்றன,அவர்கள் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கவேண்டும் அல்லது உறுதியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66796

  • தொடங்கியவர்
16 hours ago, ampanai said:

எனது மகன் இறந்துவிட்டான் என்பதை நம்புவதற்கு நான் தயாரில்லை,உறுதியாக ஆதாரத்தை சமர்ப்பித்தால் மாத்திரமே நான் அதனை நம்புவேன் எஞ்சிய உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபனுபரிசோதனையை  நம்புவதற்கு நான் தயார் என அவர் தெரிவித்தார்.

நான் ஜோதிடத்தை நம்புகின்றேன் அவை எனது மகன் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கின்றன,அவர்கள் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கவேண்டும் அல்லது உறுதியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

மிகவும் கொடுமையானது. ஒரு பிள்ளை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என யாராலும் உறுதிப்படுத்த முடியாத நாட்டில் வாழ்வது. 

  • தொடங்கியவர்

காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?

வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­க ­ளு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­ களின்   உற­வு­க­ளான பாதிக்­ கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­ றார்கள் என்­பது  ஒரு கேள் ­வி­யாக  எழுந்து நிற்­கின்­றது.  அதா­வது மிக முக்­கி­ய­மாக  மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும்  மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர்.  இவர்கள்  மூவரும்  இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக் ­கப்­போ­கின்­றனர் என்­பதே  இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. 

 வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு  என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­க­ளு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் காணாமல் போன­வர்­களின்   உற­வு­க­ளான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­றார்கள் என்­பது  ஒரு கேள்­வி­யாக  எழுந்து நிற்­கின்­றது.  அதா­வது மிக முக்­கி­ய­மாக  மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும்  மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். இவர்கள்  மூவரும்  இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை   முன்­வைக்­கப்­போ­கின்­றனர் என்­பதே  இங்கு  மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. 

யுத்த காலத்­தின்­போது  காணா­மல்­போ­ன­தாக  கூறப்­ப­டு­கின்­ற­வர்­களின்  உற­வி­னர்கள் இன்னும் ஒரு­வி­த­மான  எதிர்­பார்ப்­பு­ட­னேயே வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். தமது உற­வு­க­ளுக்கு நடந்­தது என்ன என்­பது தொடர்பில்  இந்த மக்கள்  அதி­காரத் தரப்­பிடம் கேள்வி எழுப்பி நிற்­கின்­றனர்.  உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மாறும்  பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரு­கின்­றனர். ஆனால்  யுத்தம் நிறை­வ­டைந்து ஒரு தசாப்தம் நிறை­வ­டைந்து விட்ட நிலை­யிலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கேள்­வி­க­ளுக்கு  அதி­கா­ரத்­த­ரப்­பி­னரால் பதி­ல­ளிக்க முடி­யாத நிலை­மையே  நீடிக்­கி­றது. 

அதா­வது   தாம் ஜனா­தி­ப­தி­யா­கி­ய­வுடன்  காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு எவ்­வா­றான  தீர்வை முன்­வைப்போம்  என்­பது தொடர்பில் தெளி­வான விட­யத்தை மக்­களின் முன் கூற­வேண்டும். வேட்­பா­ளர்கள் இந்த விட­யத்தில் முன்­வைக்­கப்­போகும் யோசனை அல்­லது  தீர்­வுத்­திட்டம்  என்ன என்­பது தொடர்பில்  பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆர்­வத்­துடன் இருக்­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்து  ஒரு தசாப்தம் கடந்தும் இந்தப் பிரச்­சினை   தீர்க்­கப்­ப­டாது உள்­ளமை தொடர்­பிலும்    அவற்றை கையாள்­வ­தற்கு அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் தயங்­கு­கின்ற சூழ­லிலும் மக்கள் விரக்தி நிலையை அடைந்­தி­ருக்­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள்  அல்­லது காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள்  திருப்­தி­ய­டையும் வகை­யி­லான வேலைத்­திட்­டங்கள் அல்­லது அணு­கு­மு­றைகள் பிர­தான வேட்­பா­ளர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

ரொபட் அன்­டனி

https://www.virakesari.lk/article/66741

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

மிகவும் கொடுமையானது. ஒரு பிள்ளை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என யாராலும் உறுதிப்படுத்த முடியாத நாட்டில் வாழ்வது. 

இந்த நிலை மீண்டும் வந்தால் நல்லம் என்று போன கிழமை எழுதினீர்களே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.