Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளையர்கள் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்

Featured Replies

மதகுருமார் அரசியல் மேடைகளில் ஏறாது முழுவதுமாக விலகினால் நாடு ஆசீர்வதிக்கப்படுமென பேராயர் மெல்கம்  ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 கொள்ளையர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.   

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,   கடந்த 30வருடங்களுக்கு முன்னர் தேவாலயம் ஒன்றில் நான் இருந்த தருணத்தில், பிரதி அமைச்சர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என கூறினார். நான் கேட்டேன் ஏன் என்று. அதற்கு பிரிதி அமைச்சர் கூறினார். அரசியலில் தேவையான அளவு பணத்தை சம்பாதித்து விட்டேன் என்று. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. 

கடந்த 30 வருடங்களுக்கு முன்னரும் இலங்கையில் இதுபோன்ற நிலைமைதான் காணப்பட்டது. தற்போது எனக்கு 70 வயதாகின்றது. எனது இளைஞர் பருவத்தில் இருந்து இவர் போன்றவர்களை பார்த்துக் கொண்டுதான் உள்ளேன். கொள்ளையர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை அரசியலமைப்பிலேயே மாற்ற வேண்டும். சரியாக நடக்க கூட முடியாதவர்கள் இளைஞர்களை மேலே வரவிடாமல், அவர்களது தாய் தந்தைக்கு சொந்தமானது போல பயன்படுத்துகிறார்கள். தனது எண்ணம் என்னவென்றால் பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் என்று பேராயர் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

https://www.thinakaran.lk/2019/10/12/உள்நாடு/41951/கொள்ளையர்கள்-போட்டியிடுவதை-தடை-செய்ய-வேண்டும்

  • தொடங்கியவர்
28 minutes ago, ampanai said:

கொள்ளையர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை அரசியலமைப்பிலேயே மாற்ற வேண்டும். சரியாக நடக்க கூட முடியாதவர்கள் இளைஞர்களை மேலே வரவிடாமல், அவர்களது தாய் தந்தைக்கு சொந்தமானது போல பயன்படுத்துகிறார்கள். தனது எண்ணம் என்னவென்றால் பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் என்று பேராயர் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.


முன்னேறிய சிங்கப்பூர் போன்று, அரசியல் வாழ்வில், அரசிலமைப்பில் மதங்கள் ஓரங்கட்டப்பட்டால் மட்டுமே கொள்ளையர்களும் மதவாதிகளும் அகற்றப்படுவர். 

பௌத்தம் முதன்மை மதமாக இருக்கும் வரை, எதுவும் மாறாதது. 

1 hour ago, ampanai said:

 கொள்ளையர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.   

பரவாயில்லை!

நேரடியாகவே கோட்டாபய போன்ற கொள்ளையர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்ய வேண்டுமென்று கேட்டிருக்கலாம்!

மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி கோட்டாபய சம்பளத்தில் வளர்ந்த சஹரான் சர்ச்சுகளில் வெடித்த குண்டுகளுக்கு பின்னர் ஆயருக்கு கொஞ்சம் நியாயம் உறைக்கத் தொடங்கியுள்ளது போலத் தெரிகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.