Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் அதில் இந்தியா தலையிட முடியாது முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி

Featured Replies

போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் அதில் இந்தியா தலையிட முடியாது முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி

.

இலங்கையில் நடக்கும் போர் மேலும் 20ஆண்டுகள் நீடிக்லாம். ஆனால் அதில் இந்தியா தலையிட முடியாது என்று இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி கூறினார்.

கடலோர காவல்படை மற்றும் சென்னை பல்கலைககழகம் இணைந்து சென்னை துறைமுகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. இலங்கை இந்தியா உறவு மற்றும் தற்போது நிலவிவரும் சூழ்நிலை என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.ஆர்.ராகவன் பேசினார். கடலோர காவல்படைக்கு சொந்தமான சாரங்கப்பலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகவன் மேலும் கூறியதாவது:

இலங்கை மற்றும் இந்தியாவில் 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழ்நிலைகள் தற்போதுகாணப்படவில்லை. அனைத்து முற்றிலுமாக மாறி இருக்கின்றன. உலக அளவில் இந்தியா தற்போது பலம் வாய்ந்த நாடாக திகழ்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளுடன் உலகளாவிய பாதுகாபுக்காக இந்தியா கைகோர்த்து கொண்டு நிற்கிறது.

இலங்கையின் உலகளாவிய பொருள் இறக்குமதியில் 18 சதவீதம் இந்தியாவில் இருந்து செல்கிறது. அதில் தமிழகம் 4 சதவீதமாகும். இலங்கை அரசு நடத்தும் போர் சரியானதா? இல்லையா? என்பது பற்றி இப்போது கேள்வி எழவில்லை. ஆனால் அதன் பின்விளைவுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கையில் நடக்கும் மனிதஉரிமைகள் மீறல்களுக்காக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இலங்கையில் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்கு வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் அதை அங்குள்ள கட்சிகளும், மக்களும் எதிர்க்கின்றனர். தமிழ ஈழ பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகலாம். போர்தான் இதற்கு நல்ல தீர்வாக அமையும் என்று அங்குள்ள மக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்து கூறிஇருக்கின்றனர்.

http://www.tamilwin.com/

Edited by Iraivan

" போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் "

ம்... :lol::(

மக்களின் உளவியலை தடுமாறச்செய்ய இராணுவ அதிகாரிகளை கொண்டு அறிக்கை விடுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு தனி அரசு அமைப்பதனை இந்தியா விரும்பவில்லை: ஓய்வுபெற்ற இந்திய லெப். ஜெனரல் ராகவன் இலங்கையில் தமிழர்களுக்கு தனி அரசு அமைப்பதனை இந்தியா விரும்பவில்லை என்று ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரியான லெப். ஜெனரல் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படைக் கப்பலான சாரங்கில் கடற்படையினரிடையே ராகவன் பேசியதாவது:

இலங்கை இனப்பிரச்சனையானது தொடரக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. ஆனால் அதனை வலுவில் முடிவுக்கு நம்மால் கொண்டுவர முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு விருப்பம் இல்லை. இலங்கையை இரு பகுதிகளால இந்தியா பார்க்க விரும்பவில்லை.

இலங்கையின் பிரதேச ஒற்றுமை என்பது நமக்குத் தேவையானது. இலங்கை ஒரே நாடாக இருக்க இந்தியா எந்த உதவியையும் செய்ய வேண்டும்.

இந்தப் பிராந்தியத்தில் எந்த ஒரு நாட்டினது அரசியல் நிலையற்ற தன்மையும் இந்தியாவைப் பாதிக்கும்.

இலங்கையிலிருந்து பாரிய அகதிகளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கடத்தப்படுவதும் நடைபெறுகிறது.

மீனவர்கள் எல்லை கடந்து செல்கின்ற போது பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெரும்பான்மைச் சிங்களவர்கள், இராணுவ வழித் தீர்வை நம்புவது வருத்தத்துக்குரியது. சர்வதேசளாவிய அளவில் இனப்பிரச்சனைகளில் இராணுவ வழித் தீர்வு காண முடியாது என்றார் இராகவன்.

http://www.eelampage.com/?cn=31701

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.