Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல் சர்வதேச விமான நிலையமாகிறது பலாலி

Featured Replies

உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று; இந்திய விமானம் முதலாவதாக தரையிறக்கம்

ஒருபுறம் நாட்டின்  போக்குவரத்துத்துறை அபிவிருத்தி; மறுபுறம் காணிகளை இழந்தோரின் தீர்க்கப்படாத துயரம்

"பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்படும் நிலங்களுக்கான நட்டஈடு தருவதாக அரசாங்கம் எங்களுக்கு அறிவித்தல் தரவில்லை. உண்மையில் ஒரு ஜனநாயக நாடெனில், மக்களிடம் விருப்பங்களைக் கேட்க வேண்டும். ஆனால், மக்களின் அபிப்பிராயங்களை எங்களிடம் கேட்கவில்லை" என பலாலி விமான நிலையத்துக்கான நுழைவாயில் அமைக்கப்படும் நிலங்களின் உரிமையாளரான கதிர்காமநாதன் கூறுகின்றார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு, யாழ். விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று 17 ஆம் திகதி திறந்து வைக்கப்படுகிறது.இதற்காக வலி.வடக்குப் பகுதியில் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் சுவீகரிக்கப்பட்டு, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் நிறைவடைந்து விமான நிலையம் திறந்து வைக்கப்படுகிறது.

fea03.jpg?itok=3FLxXVgF

ஆனால், 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்ட இம்மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அரசாங்கத்தினால் கொஞ்ச நிலங்களே வலி_ வடக்கு, மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் விடுவிக்கப்பட்டன.அதே நேரம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென மறுபக்கத்தில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள பொதுமக்களின் காணி சுவீகரிப்பு மற்றும் விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தமது ஆதங்கத்தையும், வேதனைகளையும் பகிர்ந்து கொண்டனர். தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும்,பெரும்பான்மை மக்களுக்கு ஒரு நீதியும் இழைக்கப்படுவதாகவும்,தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத நிலை இதுவென்றும் அவர்கள் சலிப்படைகின்றார்கள்.

பலாலி விமான நிலையம் யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்நோக்கிய விமான நிலையமாக அமைந்திருந்தது.யுத்தம் முடிவடைந்த போதிலும் விமான நிலையத்தை சூழவுள்ள மக்கள் தங்களது சுவீகரிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதில் சங்கடங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் நிலங்களை சுவீகரித்தமை தொடர்பில் மக்களுக்கு எந்த அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என நிலங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பாகவும், மயிலிட்டி கட்டுவன் பகுதியில் மக்களின் காணிகள் சுவீகரிப்பு தொடர்பாகவும் எந்த அறிவித்தலும் கொடுக்கவில்லை. நட்டஈடு தருவதாகவும் எமக்கு அறிவிக்கவில்லை" என்றார் நிலத்தின் சொந்தக்காரர்களில் ஒருவரான கதிர்காமநாதன். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

"1987ஆம் ஆண்டு சொந்த இடங்களை விட்டு வெளியேறிய எங்களை இன்றுவரை எமது இடங்களுக்குச் செல்ல இராணுவம் அனுமதிக்கவில்லை. எமது காணிகளை விடுவிக்கவுமில்லை.பலாலி விமான நிலையத்தை அண்மித்த நிலங்கள் அனைத்தும் விவசாய நிலங்கள். பலாலி விமான நிலையத்திற்கு கிழக்குப் பக்கமாக அனைத்துக் காணிகளையும் சுவீகரித்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பாக ஆராய்ந்த போது, விஸ்தரிப்பிற்கு மேலதிக காணிகள் தேவை இல்லை. தற்போது பலாலி விமான நிலையம் அமைந்துள்ள காணிகள் போதும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.ஆனால், தற்போது, மேற்குப் பக்கமாக புதிய பாதை அமைத்து எமது காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. என்ன செய்கின்றார்கள் என்பது எமக்குப் புரியவில்லை" என்கிறார் அவர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் (பலாலி) நுழைவாயில் வளைவு அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன.விமான நிலையத்தின் நுழைவாயில் மேற்குப் புறமாக மாற்றப்பட்டதால் கட்டுவன்- மயிலிட்டி வீதியுடன் இணைக்கப்படுகின்றது.நுழைவாயில் அமையும் காணிப் பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது இப்பகுதி விமான நிலைய நுழைவாயில் அமைக்கப்படுவதால் திறந்து விடப்படுகின்றது.இது தனியார் நிலமாகும்.தெல்லிப்பழை- கட்டுவன்சந்தி_- கட்டுவன் மயிலிட்டி வீதியும் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு ஜுலை 05 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதனை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.19.5 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு யு 320 மற்றும் யு 321 போன்ற பாரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதற்கான கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு இருந்த நிலையில் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பத்தால் நிறுத்தப்பட்டது.

பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் மக்களின் 349 ஏக்கர் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுவிகரிக்கப்பட்டதாகவும்,716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி காணி உரிமையாளர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், அவர்களின் உரித்தானவர்கள் உரிய உறுதிப்படுத்தல்கள் இன்மையால் குறிப்பிட்ட இழப்பீடுகளைப் பெற இயலாத நிலையில் உள்ளனர்.

பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டதாகவும், இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் அறியக் கிடைத்துள்ளது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

 
 

இதற்குப் பதிலளித்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க "இப்போது எடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி 716 காணி உரிமையாளர்களில் 215 பேருக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கான உறுதிப் பத்திரங்கள் இருக்கின்றன. மீதமுள்ள 501 பேருக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு உறுதிப் பத்திரங்கள் இல்லை. பிரதேச செயலர் மூலம் இவர்கள் குறித்த இடங்களில் இங்கு வசித்துள்ளார்கள் என்பதற்கான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுமாயின், அதற்கான நஷ்டஈட்டினை வழங்க முடியும். காணிகளை வகைப்படுத்தும் பணிகள் இன்னும் முடியவில்லை. அந்த செயற்பாடுகள் முடிந்த பின் அவர்களுக்கான நஷ்டஈட்டினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

"விமான நிலையங்களை புதிதாக அமைக்கும் போது நாம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். சிவில் பகுதியை ஒருபக்கத்துக்கும் இராணுவத்தினரை ஒருபக்கத்திற்கும் வைத்துத்தான் நங்கள் இந்த விமான நிலையத்தை அமைக்கின்றோம். சர்வதேச விமான சேவையின் தேவை கருதியே இந்த விடயங்கள் இடம்பெறுகின்றன. இதனால் விமானப்படைக்கு ஒரு பகுதியாகவும் சிவில் பயணிகளுக்கு மறுபக்கமாகவும் நுழைவாயிலை அமைக்கின்றோம்.

நான் எமது குழுவுடன் சென்று அந்த இடங்களை பார்வையிட்டேன். அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருக்கின்றோம். அங்கு மிகவும் குறைந்த நிலங்களை எடுக்கவே முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஆனால் விமான நிலையம் என்று பார்த்தால் வடக்கு மக்களுக்கு சேவைகளை வழங்கவே இந்த வேலைத் திட்டங்கள் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டன. நவம்பர் மாதமளவில் முதல்கட்ட பணிகள் முடிவடையும்" என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பலாலி விமான நிலையத்தின் பாதுகாப்பு காரணங்களால் வல்லை அராலி_ தெல்லிப்பளை வீதிக்கு அண்மையில் உள்ள வசாவிளான், கட்டுவன் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் மறுக்கிறது. ஆனால் வீதியை விடுவிக்க தற்போது இணக்கம் தெரிவிக்கின்றனர்.இதில் வல்லை-_அராலி வீதியுடனான பஸ் போக்குவரத்தை அனுமதிப்பதற்கு படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.யாழ் மாவட்ட செயலகத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த சனிக்கிழமை ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.இதில் வல்லை_ -அராலி வீதியின் அச்சுவேலி,- வசாவிளான், -தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதால் வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு அனுமதிப்பதென படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.எனினும் எப்போது திறக்கப்படும் என கூறப்படவில்லை.

பலாலி விமான நிலையத்திற்கு மக்கள் சென்று வர இவ்வீதி அவசியமாகும். தற்போது அச்சுவேலியில் இருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு வர வேண்டுமாயின் பல கிலோமீற்றர் சுற்றியே வர வேண்டியுள்ளது. இந்த வீதியை திறந்து விடுமாறு பலதரப்பினரும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.எனினும் இவ்வீதியில் விமான ஓடுபாதைக்கு அண்மையாக வரும் வீதிக்கு அருகில் மாற்று வீதி அமைத்தே திறக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பது அரசின் கருத்தாக உள்ளது. ஆனால் அதற்கு அப்பால் தேசிய பாதுகாப்பு விடயம் குறித்து அரசு சிந்திக்கிறது.இவ்வாறான இரண்டு வாதங்கள் உள்ளன.யாழில் கடந்த காலத்தில் ஏராளமான காணிகள் பாதுகாப்புப் படைகள் வசம் ஆக்கிரமிப்பில் இருந்தன. ஆனால் இப்போது அவற்றில் பெரும்பாலானவை விடுவிக்கப்பட்டு 3500 ஏக்கர் காணிகளே பாதுகாப்பு தரப்பிடம் உள்ளன. அதில் ஆயிரம் ஏக்கர் காணி பலாலி விமான நிலையத்திற்கு சொந்தமாகப் போகின்றது. எனவே மிகுதி காணிகள் தொடர்பிலேயே நாம் அவதானம் செலுத்த வேண்டியிருக்கின்றது. குறிப்பாக வலி.வடக்கு பகுதிகளில் தெல்லிப்பழை, மயிலிட்டி ஆகிய பிரதேச காணிகளை பற்றியே நாம் கூடிய கவனம் செலுத்தி ஆராய்ந்தோம். அதில் தெல்லிப்பழையில் 727 ஏக்கர் காணியும் மயிலிட்டியில் 200 ஏக்கர் காணியும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவ்வாறு ஆக்கிரமிப்பில் உள்ள 927 ஏக்கர் காணிகளினால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது. அவர்களின் பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டும். மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளையே மீளத் தருமாறு கேட்கின்றனர். அதேநேரம் இராணுவமும் தமக்கு தேசிய பாதுகாப்பு கருதி சில இடங்களைக் கேட்கின்றது.

எனவே இந்த இரு தரப்புகளின் கோரிக்கைக்கு அமைய மூன்றாம் கருத்து கேட்கப்பட வேண்டும். அதன் ஊடாக இந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்றே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினர் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் தமக்கான இடங்களைக் கோருகின்றனர். அதனை நாம் பரிசீலிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இராணுவம் தங்களுக்கு எந்த காணிகள் தேவை என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். ஏனெனில் பாதுகாப்பு கேந்திரமான அமைவிடங்கள் அவர்களுக்குத் தேவையாக உள்ளன " என்று இக்கூட்டத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படப் போவதாக பிரதேச சபை அல்லது கிராம அலுவலர்கள் எந்த அறிவித்தலையும் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால் அண்மையில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், காணிகள் தொடர்பான விண்ணப்பங்களைக் கோரியுள்ளார். அதுவும் எந்தளவிற்கு சாத்தியமானதென்று எமக்குத் தெரியாது.

மயிலிட்டி 247 பிரிவில் ஒரு சிறு துண்டுக் காணிகள் கூட மக்களிடம் கையளிக்கப்படவில்லை. கொழும்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது மக்களுக்கு நட்டஈடுகளை வழங்கிய பின்னர் அந்தக் காணிகளை சுவீகரித்து, விமான நிலையத்தை அமைத்தார்கள். ஆனால் எமது காணிகளை 30 வருடமாக யுத்தத்தை காரணம் காட்டி பிடித்து வைத்துக் கொண்டு, இப்போது அதனை விமான நிலையத்திற்கென சுவீகரித்து வைத்துள்ளார்கள், இதனை யாரோடு கதைப்பது?" என்கிறார்கள் மக்கள்.

"உண்மையில் மக்களிடம் விருப்பங்களைக் கேட்க வேண்டும். ஆனால், மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்கவில்லை. 1985 ஆம் ஆண்டு காலப்பகுதிகில் 764 பலாலி வீதியின் ஊடாகவே, பலாலி விமான நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கு பல கட்டடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏன், பலாலி விமான நிலையத்திற்கு அந்தப் பாதையை பயன்படுத்தாது, மக்களின் காணிகளை சுவீகரித்து, மயிலிட்டி கட்டுவன் வீதியை பலாலி விமான நிலையத்திற்கான நுழைவாயில் அமைத்து பாதையை மாற்றினார்கள் என்பது எமக்குப் புரியவில்லை" என்றார் அந்தக் காணி உரிமையாளர்.

இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று 17 ஆம் திகதி மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. இந்திய விமானம் ஒன்று பலாலி விமான நிலையத்தில் இன்று தரையிறக்கப்படவுள்ளது.

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி அடைகின்றது என்பது உண்மைதான். நாட்டைப் பொறுத்த வரை அது நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் அதனால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

"அரசாங்கம் எமது காணிகளை சுவீகரித்து விட்டது. எங்களுக்கு நீதி கிடைப்பது எப்போது? என்பதே பலாலி விமான நிலைய சுற்றுவட்ட காணி உரிமையாளர்களின் ஆதங்கமாக உள்ளது.

https://www.thinakaran.lk/2019/10/17/கட்டுரைகள்/42185/இன்று-முதல்-சர்வதேச-விமான-நிலையமாகிறது-பலாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.