Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அத்தியாயம் ஆரம்பம்; வடக்கில் பொருளாதார புரட்சி

Featured Replies

இன நல்லிணக்கத்தின் சின்னம்
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மத்திய கிழக்கு
நாடுகளுக்கும் பலாலியிலிருந்து சேவை -  பிரதமர் பெருமிதம்

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் காலை (17) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

எனினும் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விமான நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 

இன நல்லிணக்கத்தின் சின்னமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முழுமையான பலன்களை வடக்கு மக்கள் இன்னும் 3 வருடங்களில் அனுபவிக்க முடியும்.

"இன்று யாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த தீர்மானித்தோம். அதற்கான பணிகள் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு இடையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போதும் நாம் அதனைக் கைவிடவில்லை.

இத்தகைய சூழ்நிலையிலும், விமான நிலைய பணிகள் இடம்பெறுமா? எனச் சிலர் பிரசாரம் செய்தனர். எனினும், 6 மாத காலத்திற்குள் வெற்றிகரமாக இச் செயற்திட்டத்தை நிறைவு செய்துள்ளோம். இது முதற்கட்டமே. இதனூடாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், விமான சேவையை மேற்கொள்வதே எமது நோக்கம். இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விமான சேவையை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும்.

இது வடக்கு மக்களின் பொருளாதாரப் புரட்சியாக கருதமுடியும். அத்துடன், வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது வாய்ப்பாக அமைவதுடன், அதனூடான பொருளாதாரமும், மேம்படுத்தப்படும். அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையங்களை நிறுவுவதே எமது எதிர்பார்ப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இதன் மூலம் வழிவகுக்கப்படும்.

யாழில் ஹோட்டல் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கும், சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சி நிலையம் நிறுவுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் துறைசார்ந்தவர்களுடன் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், சிறந்த திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

காங்கேசன்துறை துறைமுகமும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் நாம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பித்தோம். முதற்கட்டமாக படையினர் வசமிருந்த காணிகளை மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்னும் 5 வருடங்களில் பாரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பது உறுதி. அரசாங்கத்தின் கடந்த 5 வருட காலமே, மிக கஸ்டமான காலமாக இருந்தது. எனினும், நாம் இது போன்ற செயற்திட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்.

இந்திய அரசாங்கம், எமக்குத் தொடர்ச்சியான உதவிகளைச் செய்து வருகின்றது. நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும், இந்தியா தொடர்ச்சியான உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது. இரு நாட்டினரும் பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவோம்" என்றார்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு 72 ஆசனங்களுக்குக் குறைந்த பொம்பார்டியர் - 100 (Bombardier - 100) வகை விமானங்களை ஏற்றி இறக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

1940 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரிட்டிஸ் ஆட்சியில் உலக யுத்தத்தின் போது, பலாலி விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, எயார் சிலோன் என்ற பெயரில் விமான சேவைகள் நடைபெற்றுள்ளன. அதன்பின்னர் 1980 ஆம் ஆண்டின் பின்பு முற்றாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு விமானப் படை அதனைப் பொறுப்பேற்று சிவில் விமான சேவைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சுமித்தி தங்கராசா

https://www.thinakaran.lk/2019/10/18/உள்நாடு/42252/புதிய-அத்தியாயம்-ஆரம்பம்-வடக்கில்-பொருளாதார-புரட்சி

 

 

  • தொடங்கியவர்
யாழ்ப்பாண மண்ணில் சர்வதேச விமான நிலையம்
2019-10-18 12:14:20
 
பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த் தப்பட்டு நேற்று 2019ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்துள்ளனர். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதில் இந்தி யாவின் வகிபங்கு காத்திரமானது. தவிர, பலாலி விமானத்தளம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படுவதில் இந்தியாவின் கடும் பிரயத்தனம் இருந்ததை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது தெற் காசிய நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பதிவாகிக் கொள்வது நம் யாழ்ப்பாண மண்ணுக்குப் பெருமை தருவ தாகும்.
 
இதைவிட, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஒன்றாகச் சேர்ந்து திறந்து வைத்துள்ளமை, இலங்கை யின் அரசியல் வரலாற்றில் நினைவுக்குரிய விடயமாகும். 
அதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற வேளையில், ஒக்ரோபர் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத் தமை ஜனாதிபதி மைத்திரியின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாகும்.

இதை இன்னொரு வடிவத்தில் கூறுவதாயின் யாழ்ப்பாணம் சர்வதேச விமான  நிலை யத்தை ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி திறந்து வைத்து நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியில் இருந்து விடைபெறுகின்ற நிகழ்வு நடந்தாகப் போகிறது.
 
எதுஎவ்வாறாயினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்பது யாழ்ப்பாண மண்ணுக்குப் பெருமை தருவதாக இருந்தால், அந்த விமான நிலையத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
 
பொதுவில் தமிழர்கள் சிறுபான்மை இனத்தினர் என்ற ஒரே காரணத்தால் இந்த நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.
இவ்வாறாக தமிழர்களை வேலைக்கு நியமிக்காத நிறுவனங்களில் இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் அடங்கும்.
 
எனவே மேற்கூறப்பட்ட குறைபாட்டை நிவர்த்திப்பதற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்ற தமிழர்களுக்கு அதீத இடம் கொடுக்கப்பட வேண்டும். இதனை தமிழ் அரசியல் தரப்பு வலியுறுத்துவது அவசியம்.  
 
  • தொடங்கியவர்

 

Jaffna_Internetional_Airport-01.jpg

 

 

  • தொடங்கியவர்

இது நகைச்சுவையாக இருந்தாலும் சில உண்மைகளை அழகாக கூறுகின்றது. 🙂 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:
பொதுவில் தமிழர்கள் சிறுபான்மை இனத்தினர் என்ற ஒரே காரணத்தால் இந்த நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.
இவ்வாறாக தமிழர்களை வேலைக்கு நியமிக்காத நிறுவனங்களில் இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் அடங்கும்.
 

நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் நாட்டு மக்களுடன் அவர்கள் மொழியில் தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு சிங்களம் மட்டுமே தெரியும். தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள அறிவு இல்லாததால் வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.