Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனின் முத்தரப்பு மாநாட்டில் அரசு கலந்துகொள்ளமாட்டாது!

Featured Replies

பிரிட்டனின் முத்தரப்பு மாநாட்டில் அரசு கலந்துகொள்ளமாட்டாது!

அமைச்சர் ரம்புக்வெல நேற்று அறிவிப்பு

கொழும்பு, மே 08

இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளிடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது.

இலங்கை விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட விவாதம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அரசு அலட்டிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருக்கும் அரச பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

இலங்கை அரசு நோர்வே புலிகள் தரப்புகளை இணைத்து நடத்தப்படவிருக்கும் மாநாட்டில் இலங்கை அரசு கலந்துகொள்ளாது என்றும் அறிவித்திருக்கிறார்.

தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல இது தொடர்பாக விளக்கமளித்தார்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பிரிட்டனின் சர்வகட்சி நாடாளுமன்றக்குழு மாநாடொன்றை நடத்தத் தீர்மானித்திருக்கிறது. இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு, விடு தலைப் புலிகள் மற்றும் அனுசரணையா ளர்களான நோர்வேத் தரப்பினர் ஆகியோ ருக்கு அழைப்பு விடுத்து மாநாட்டை பிரிட்டனில் நடத்தவும் தீர்மானிக்கப்பட் டது. இந்த மாநாட்டிலேயே இலங்கை அரசு கலந்து கொள்ளாது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

""பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சில

எம்.பிக்கள் அதாவது மிகக் குறைந்த சுமார் பத்து சதவீத எம். பிக்கள் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வந்து விவாதித்துள்ளனர். இது தொடர் பாக நாம் கவலைப்படவில்லை. இலங்கை அரசு நேரடியாக இது குறித்து பிரிட்டிஷ் அரசுடனே பேச்சு நடத்தும்.

""பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

இவ்வாறு ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

உதயன்

றம்புட்ட மாத்தையாவின் பேச்சை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான முடிவாக ஏற்க முடியாது. ஏனென்றால் இவர் அரச பேச்சாளர் என்ற பதவியில் இருந்துகொண்டு ஜோக்கராகவே இவ்வளவு நாளும் செயற்படுகிறார்.

அரசு சில கருத்துக்களை இந்த ஜோக்கர் மூலமாகத் தெரிவிக்கும். பின்னர் சர்வதேச அளவில் எதிர்ப்புக்கள் ஏற்பட்டால், இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான அறிக்கை இல்லை என்று பல்டி அடிக்கும்.

இது எதிர்பார்த்த ஒன்றுதான் .பிரித்தானியாவின் இந்த செய்ற்பாட்டை சிரிலங்கா ஏற்காது என்பது எல்லாருக்கும் தெரியும்.

எனவே இதை தமிழர்கள் தங்கள் சார்புக்கேற்ற மாதிரி பிரித்தானியாவோடு ஒத்து ஊதி எங்கள் போராட்ட வலுவை நியாயப்படுத்த வேண்டும்.

கனடிய வானொலியில் பிரித்தானியாவின் இன்றைய நிலை ப்பாடு பற்றி ஒரு அரசியல் அரங்கம் நடத்தி இருந்தார்கள். கேட்டால் நாங்கள் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ் நாதத்தில் பதியப்பட்டுள்ளது

http://www.tamilnaatham.com/arasiyal_kalam.html

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.