Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிவெட்டி சாத்தான் தேவாரம் பாடிய வரலாறு - இது கதை அல்ல நிஜம்

Featured Replies

கிளிவெட்டி சாத்தான் தேவாரம் பாடிய வரலாறு - நெருப்பின் தொடர் ஆய்வு

அப்பழுக்கற்ற, சுத்தமான, ஜனநாயக-வழிவந்த மனிதர் ஒருவர் டென்மார்க்கில் இருக்கிறார். கிழக்கின் தந்தை என்ற மகத்தான தலைமைக்கு தன்னைத் தயார்படுத்தி வந்த அந்த நபர் இப்போது சுருதி இறங்கி இணையத்தளங்களில் மறுப்புகள் வெளியிடுவதும், முகவரிகள் அறிந்து அதனை வெளியிட்டு மகாதிருப்தியடைந்து வருகிறார். அவர் வேறு யாருமல்ல கிளிவெட்டியிலிருந்த அரசமரத்தை வெட்டி சிறைக்குச் சென்று வந்த செம்மல் அருளம்பலம் குமாரதுரை என்ற காட்டுக் குமாரதுரைதான் அவர்.

எங்களின் இந்த இணையதளத்துக்கு ஒரு கொள்கை உண்டு. அது என்னவென்றால், தனிமனிதரை தனிப்பட்ட அவர்களது வாழ்க்கையை விமர்சிப்பதில்லை என்பதுதான் அந்தக் கொள்கை. அதே வேளை எங்கள் இனத்துக்கு இந்தத் தனிநபர்களால் கேடு விளைவிக்கப்படுமானால் அவர்களை விமர்சிப்பது நெருப்பின் கடமையாகிறது.

பல வழிகளிலும் எங்கள் இனம் ஏமாற்றப்பட்டுவிட்டது. இனியும் ஏமாறக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த அருவருப்பான செயலைச் செய்யவேண்டியுள்ளது. இதற்காக வருந்துகிறோம்.

இப்போது அ.குமாரதுரைக்கு வருவோம்:

திருகோணமலை கிளிவெட்டியை அனைவரும் அறிவர், அங்கிருக்கும் அரைவாசிக்கும் அதிகமான விளைநிலங்கள் குமாரதுரைக்குத்தான் சொந்தமானது. பாட்டன் பூட்டன் சொத்துக்கள் அல்ல அவை. ஊர் மக்களில் இரண்டு சதவீதம் கூட படித்தவர்கள் இல்லாத வறிய கிராமம் அது.

அண்ணன் பாக்கிய நாதன் டொக்டர், மற்ற அண்ணன் தங்கத்துரை சட்டத்தரணி இந்த இரண்டு அண்ணன்மார்களின் தகுதியை வைத்து கிளிவெட்டியை வளைத்துப் போட்டார் குமாரதுரை. அதிகாரம், மிரட்டல், அடாவடி இவைதான் கிளிவெட்டியில் அவரது மூலதனம்.

அறிவிலும் வசதியிலும் குறைந்த அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இவரது கூலிப்பட்டாளமாக மாறினர். எம்.ஜி.ஆர். சினிமா படங்களில் வரும் வில்லன் பண்ணையாளர்களை ஒருதடவை நினைத்துப்பார்த்தால் அவரேதான் இவர்! என்று தீர்மானித்துக்கொள்ளலாம்.

1984ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகரிலிருந்து குடும்பத்துடன் டென்மார்க் வந்தடைந்தவர். டென்மார்க் அரசின் புண்ணியத்தில் காலங்கள் உருண்டோட பிள்ளைகள் வளர்ந்து கணணிபடித்து வாழ்வை முன்னேற்ற ஆரம்பித்தனர்.

2004ஆம் ஆண்டு கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறியதும் மெதுவாக அரசியலில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஐரோப்பாவில் துரோகிகளின் வானொலி ரி.பி.சியில் வலிந்து சென்று நல்வாழ்த்துக்கூறி அமைதிப்படை சினிமா படத்தில் சத்தியராஜ் எம்.எல்.ஏ. ஆனது போன்று ஒரு கட்டத்தில் துரோக வானொலி ரி.பி.சி. யின் தலையில் ஏறி அமர்ந்து கொண்டார் துரை. இவரை அங்கே இருந்து கீழே இறக்குவதற்குப் பெரும்பாடாகிவிட்டது துரோக ரி.பி.சி. அமைப்பாளர்களுக்கு.

துரோக ரி.பி.சி. க்குள் நுழைந்ததும் இலவசமாக இவருக்கு விளம்பரம் கிடைத்ததும் வானொலி வாயிலாக மக்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டுவிட்டார். கிளிவெட்டியைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவில் குறைவாகத்தான் இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களும் அரசியலே வேண்டாம் என்று வெறுத்தவர்கள்தான் அனைவரும். துரையின் வரலாறு யாருக்கும் தெரியாததால் இவர் கிழக்கின் தந்தை என்ற அந்தஸ்தை அடைய அதன் முதுகுவரை ஏறிவிட்டார். இந்த நேரத்தில்தான் துரோக ரி.பி.சி. இவரைக் கழட்டி விட்டது.

வருந்திப் போன குமாரதுரை ஒன்றுக்கு நான்கு இணைய தளங்களை ஆரம்பித்து கருணாவை கிழக்கின் சூரியனாக்கி அப்பகுதி மக்களுக்கு வெளிச்சம்காட்டப் புறப்பட்டார். ஏதோ இவர்களது சொந்தப்பணத்தில் இவற்றினைச் செய்கிறார் என்று பார்த்தால் கருணாவால் கொழும்பு வர்த்தகர்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் பறிக்கப்பட்ட பணத்தில் கிழக்கு மக்களுக்கு கருணா புகழ் பாட புறப்பட்டுள்ளார் குமாரதுரை என்பது தெரியவரும். ஆம், கருணாவுக்கு அரசியல் விளம்பரம் தேவைப்பட்டது ஐரோப்பாவில். கிழக்குவாதத்தை முன்னிலைப்படுத்தி கொள்கை பரப்ப கருணாவுக்குக் கிடைத்த சரியான நபர் குமாரதுரையைத் தவிர வேறு ஆளிருக்கமுடியாது. கிருஸ்ணன் வழியாக பெரும்தொகை கைமாறியது குமாரதுரைக்கு. ஊட்டச்சத்து ஏறியதும் கண்மண் தெரியாமல் கதை சொல்லப்புறப்பட்டார் குமாரதுரை.

அவர் பரப்பிய பொருளாதாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்கது எதுவென்றால், “யாழ்ப்பாணத்தானின் மாணம்காக்கும் கோமணமா கிழக்கு மாகாணத்தான்” என்பதுதான் அந்த விளக்கவுரை. இந்த விளக்கவுரையைக் கேட்ட கருணா சபாஸ், சரியான போடு போட்டீர்கள் என்று உற்சாகப்படுத்த, மேற்கொண்டும் சில கொள்கை விளக்கங்களை எழுதி ஐரோப்பாவில் ஓர் அரசியல் மேதையாகிவிட்டார் குமாரதுரை.

கிழக்கின் உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறாராம் குமாரதுரை. யாருக்கு எதிராக? ஈழத்தின் தமிழர்களுக்கு எதிராக: யாழ்பாணத்தானுக்கு கட்டிய கோவணத்தை உருவிக் கொண்டு சிங்களவருக்கு கட்டப்புறப்பட்ட குமாரதுரை, அங்கே கிழிந்து போனதை வெளியில் சொல்லாமல் அரசம் இலை கொண்டு மறைக்க முயற்சிக்கிறார்.

கிளிவெட்டிச் சந்தியில் உள்ள நன்கு வளர்ந்துவிட்ட அம்மன்கோவில் அரசமரம் ஒன்று இருந்தது. கடைத் தெருவுக்கு வரும் ஏழைகளுக்கு அதுதான் நிழல்தரும் விருட்சம். பௌத்தர்களின் உணர்வுகளை அரச மரத்துடன் கட்டிப்போட்டுள்ளனர் சிங்கள புத்தப்பிக்குகள். அந்த மரத்தை வெட்டினால் அவர்களையும் அவர்கள் உணர்வுகளையும் வெட்டி வீழ்த்துவதற்கு சமமானது அச்செயல்.

குமாரதுரை கிளிவெட்டியில் செய்துவிட்ட தமிழுணர்வு கொண்ட வீரச்செயல் என்றால் அது அந்த அரச மரத்தை வெட்டி வீழ்த்தியதுதான். அரசமரத்தை வெட்டி தமிழுணர்வு வளர்த்த இவரை காவல்துறை வந்து அமுக்கிக்கொண்டுபோய் கொட்டடியில் தள்ள கிளிவெட்டியின் வீரனானார் குமாரதுரை.

இப்போ இவர் என்ன போதிக்கிறார் என்று பார்த்தால், ஜனநாயகம் என்கிறார், அமைதி என்கிறார், மனச் சுத்தியுடன் சிங்களவருடன் வாழ வேண்டும் என்கிறார், கருணா ஜனநாயகத்தின் தூண் என்கிறார்: தமிழர்களைப் பிரிக்க ஆப்புச் சொரிகிய குமாரதுரை வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டதும் சபாஸ் என்று விளக்க உரைகள் எழுதிவந்தார். குமாரதுரை தமிழர்களுக்குள் ஆப்புச் சொருக, கிருஸ்ணன் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் சொருகிவிட்டார் அதே ஆப்பை - இது எப்படி இருக்கு?

தொடரும்---

நன்றி ஆதாரா: நெருப்பு.ஓர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.