Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகள் தமது தீர்வுகளை இலங்கை மீது திணிக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ.

Featured Replies

வெளிநாடுகள் தமது தீர்வுகளை இலங்கை மீது திணிக்கமுடியாது அவை அவசியமற்றவை என்கிறார் ஜனாதிபதி.

இலங்கைப் பிரச்சினைக்கு வெளிநாடுகள் எந்தத் தீர்வையும் திணிக்க முடியாது. சர்வதேசத்தினால் திணிக்கப்படும் தீர்வுகள் எமக்கு அவசியமற்றவை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

ஜனாதிபதி தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை மக்கள் இரத்தம் சிந்தியது போதும் அவர்கள் பலவகைகளாலும் பாதிக்கப்பட்டதும் போதும். இந்தப் பிரச் சினையை முடிவுக்குக்கொண்டுவந்தாக வேண்டும். அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே தீர்வு கண்டறியப்பட வேண்டும். வெளி நாடுகள் திணிக்கும் தீர்வு அவசியமற்றது.

அரசியல் நோக்கத்துக்கு அமைய படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடவில்லை. படையினரின் நம்பிக்கையை வலு வூட்டுவதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. ஆகையால் பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிவிடாமல் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு உரிய முறையில் தாம் பதில் அளிக்கின்றனர் என மக்கள் மத்தியில் இப்போது நம்பிக்கை உருவாகி உள்ளது. தேவேளை எமது கட்சி அரசியல் தீர்வுயோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளது. இந்த வகையில் அனைத்து நடவடிக்கை கள் மூலமும் பயங்கரவாதத்தை தோற் கடிக்க சிறந்த அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம்.

நாட்டில் பிரச்சினை குறித்து விமர்சன ரீதியாக நாட்டுக்குள்ளேயே ஆராயப்பட வேண்டும். அவ்வாறின்றி இனத்தை காட்டிக் கொடுக்கும் வகையில் எவரும் விமர்சிக்கவேண்டாம். பயங்கரவாதிகளுக்கு எதிராக முறையான திட்டத்தின் கீழ் போராடும் இத்தருணத்தில், அரசியல் இலாபம் கருதி நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கவேண்டாம் என்று நான் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பயங்கரவாதம் காரணமாக நாட்டில் உள்ள பெற்றோர்களும் பிள்ளைகளும் நிம்மதியை இழந்துள்ளனர். இரவு வேளையானதும் எல்லோரும் ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்த வண்ணம் உள்ளனர். வீட்டில் உள்ள காற்றாடி வீசும் சத்தத்தைக் கேட்டாலும் அதனையும் விமானம் வருவதாகக் கருதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையைப் போக்குவது அவசியம் என்றார் ஜனாதிபதி.

-Uthayan

Edited by யாழ்வினோ

வெளிநாடுகள் தீர்வு என்னும் போது தேவையில்லை புலி அடிக்குது எண்டவுடன் காலில விழுந்து ஆயுதம் வாங்க தேவை

சிங்களத்தின் நிஜங்களை வான்புலிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சத்து கொண்டு வந்துவிட்டார் தலைவர்

...

பயங்கரவாதம் காரணமாக நாட்டில் உள்ள பெற்றோர்களும் பிள்ளைகளும் நிம்மதியை இழந்துள்ளனர். இரவு வேளையானதும் எல்லோரும் ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்த வண்ணம் உள்ளனர். வீட்டில் உள்ள காற்றாடி வீசும் சத்தத்தைக் கேட்டாலும் அதனையும் விமானம் வருவதாகக் கருதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையைப் போக்குவது அவசியம் என்றார் ஜனாதிபதி.

...

இது 20 வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழர் அனுபவித்துவரும் துன்பம். மேற்குறிப்பிட்ட மகிந்தாவின் கருத்துப்படி சிங்களவர் மட்டும்தான் அச்சத்துடன் வாழ்வதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களை மனிதர்களாக அவர் நினைக்கவில்லையா ? அல்லது தமிழர்களை தனது நாட்டு மக்களாகக் கருதவில்லையா ?

பணத்திற்கு மட்டும் வெளிநாடுகள் தேவை...பாவம்..

மகிந்த மீண்டும் தானொரு மங்குளி ஜனாதிபதி என்பதனை நிரூபிக்கிறார்... :lol:

இபடிதான் அப்பு ராசபக்ச கண்டியளோ....... பல வீட்டில் பிச்சை எடுத்தால் இப்படிதான் பலரும் பல கதை கதைப்பினம் என்ன பண்ண காலம் செய்த கோலம் :P :P எல்லத்தையும் அனுசரிச்சு தான் போகவேண்டும்.

அப்படி சொல்லுற நீங்கள் எதற்க்காக உங்கள் அயல் நாடான தமிழீழத்தை கைப்பற்ற முயற்ச்சிக்கிறீர்கள் மந்தி மகிந்தா..........?

Edited by வானவில்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஸ்ரீலங்கா அரசாங்கம் சொல்வது அல்லது செய்வது என்னவென்று தெரியாது திணறுகின்றது.

ஆனால் தமிழ்த்தேசியம் சொல்வதிலும், செயலிலும் மிகவும் தெளிவாக இருக்கிறதைப் பார்க்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.