Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம்?: எதிர்க்கட்சி நா.உ. கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம்?: எதிர்க்கட்சி நா.உ. கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கட்சி சார்பாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு கொள்வனவு செய்த வானூர்திகளைப் பயன்படுத்தியே இன்று விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்தினர். அந்த வானூர்திகளை வலை வீசிப் பிடிக்கப் போவதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அப்படி வலை வீசிப்பிடிக்க முடியுமா?

விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்துவதற்கும் அதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்தமைக்கும் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும். விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களை நடத்துவார்கள் என்று தெரிந்து கொண்டிருந்தும் அரசாங்கம், அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்யாது மிகின் ஏயார் வானூர்தியை கொள்வனவு செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் வசம் வானூர்தி இருப்பதற்கு இந்த அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்.

நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தாக்கியழிப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் வான் தாக்குதல்களை நடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். கொலன்னாவை, முத்துராஜவெல, வெலிசற போன்ற இடங்களுக்கு வீசப்பட்ட வானூர்திக் குண்டுகள் இலக்கு தவறாமல் இருந்திருந்தால், எத்தனை உயிர்களை இழந்திருப்போம்.

நீர்த்தேக்கங்கள் மீது வான் குண்டுத்தாக்குதல்கள் நடத்தினால் நாம் இருட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும், மக்கள் சேற்று நீரை பருக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? ஆயுதங்களை கொள்வனவு செய்யப் போகின்றதா? அதற்கான நிதிவசதி எப்படி பெறப்போகின்றது. மீண்டும் பணத்தை அச்சடிக்க போகின்றதா? என்பதற்கெல்லாம் பதில் கூற வேண்டியுள்ளது.

நாட்டு மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலையை இந்த அரசாங்கமே ஏற்படுத்தியது. கடந்த அரச தலைவர் தேர்தலின் போது புலிகளுக்கு வழங்கிய நிதியை கொண்டே புலிகள் வானூர்திகளையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்வனவு செய்தனர். இதனை முன்னாள் அமைச்சர்களே கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளினால் நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அச்சத்துடன் வாழப்போகின்றோம். புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பதனை அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.

இரவு வேளைகளில் மின் விளக்குகளை அணைத்து வானத்தை பார்த்துக்கொண்டிருப்பதா? கௌரவமான சமாதானம்?

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயசிறி ஜயசேகர, இரவு வேளைகளில் மின் விளக்குகளை அணைத்து வானத்தை பார்த்துக்கொண்டிருப்பதா? கௌரவமான சமாதானம்? என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசாங்கம் கொண்டு வருவதாக கூறிய கௌரவமான சமாதானம் எங்கே என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. சமாதானம் என்பதற்கு பதிலாக நாட்டில் அமைதியின்மையே தோன்றியுள்ளது.

இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. வானூர்திகளினால் இரவில் மின் விளக்குகளை அணைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன

சிறீ லங்கா அரசு தமிழ் மக்கள் மீதான தனது விமானக்குண்டுத் தாக்குதல்களை நிறுத்தும்வரை சிங்கிளவர்களும் இனி நிம்மதியாக வாழ முடியாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்கள் தமிழீழம் அமையும் வரை அச்சத்துடன் வாழ வேண்டியதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.