Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் எதிர்காலமும்

Featured Replies

மலையக மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மாவட்டத்தில்  புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன.  சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ  இம்மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தார்.  இம்மாவட்டத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  பொது ஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தாலும்  கூடுதலான சிங்கள வாக்குகளே அவருக்கு இம்மாவட்டத்தில் கிடைத்திருந்தன. முக்கியமாக பெருந்தோட்ட பகுதி வாழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய  நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் சஜித் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 413 வாக்குகளை (66.37%) பெற்றிருந்தார். அதே வேளை கோத்தாபய ராஜபக்ச 75,499 (28.73%) வாக்குகளையே பெற்றிருந்தார்.  இலங்கை முழுதும் கோத்தாபய ராஜபக்சஷக்கு கிடைத்தது அதிக சிங்கள வாக்குகளே.அந்த அடிப்படையில் இத்தொகுதியிலும் முழுமையாக சிங்கள வாக்குகளே அவருக்குக் கிடைத்துள்ளன. மொத்த வாக்குகளில் சிறிய எண்ணிக்கையான தமிழ் வாக்குகளே இதில் பங்களிப்பு செய்திருந்தன.

தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு அன்னத்துக்கு வாக்களிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டல் அவசியம். 2015 ஆம் ஆண்டு இதே அன்னம் சின்னத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வாக்களித்த மக்கள் நல்லாட்சி மூலம் பெற்றுக்கொண்ட சில நல்ல விடயங்களுக்காக இம்முறையும் அன்னத்தை தெரிவு செய்திருந்தனர்.  நுவரெலியா மாவட்ட தமிழ் மக்கள் யானைக்கே வாக்களித்து பழகியவர்கள் என்ற பழைய பஞ்சாங்கம் இதன் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. தமக்கு யார் சேவைகளை செய்கின்றார்களோ அவர்களுக்கு நம்பிக்கையுடன் வாக்களிக்கும் பக்குவத்தை இம்மாவட்ட மக்கள் பெற்றிருக்கின்றார்கள் என்பதே யதார்த்தம்.

இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஒரு அழுத்தமான செய்தியை வழங்கியுள்ளது. ஏனென்றால் மஹிந்த ஆட்சி காலத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சையும் பிரதி அமைச்சையும் இ.தொ.கா கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் இம்மாவட்டத்தில் இ.தொ.கா முன்னெடுத்த சேவைகளை அடிப்படையாகக் கொண்டே 2015 இல் நல்லாட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். அதன் பின்பு நான்கு வருட இடைவெளியில் தமது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் வாக்களித்திருந்தனர்.  ஆகவே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவாளர்கள் மட்டுமன்றி இ.தொ.கா ஆதரவாளர்களும் கணிசமான அளவிற்கு புதிய ஜனநாயக முன்னணிக்கு தமது வாக்குகளை அளித்துள்ளனர்.  இதன் காரணமாகவே நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன தோல்வியடைய காரணமாயிற்று. இந்த முடிவுகள் அடுத்த வருடம் இடம்பெறுவதாகக் கூறப்படும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.

ஏனெனில், பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்த இ.தொ.கா , அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக இந்த மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கோத்தாபயவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை தேடிக்கொடுக்காததால் அது மக்களுக்கு சேவையாற்றக்கூடிய அமைச்சுப்பதவியையோ அல்லது வேறு எந்த சலுகைகளையோ கட்டாயப்படுத்தி கேட்க முடியாது என்பதும் யதார்த்தம். எனினும் நுவரெலியா மாவட்ட வாக்குகளை தன் பக்கம் ஈர்க்க வேண்டிய தேவை புதிய ஜனாதிபதிக்கு உள்ளதன் காரணமாகவே காபந்து அரசாங்கத்தில்  அமைச்சுப்பதவி ஒன்றை கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆனால் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள  பாராளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுத்து அதில் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்ற அதிகாரத்தை பெற்ற பிறகே சரியானதொரு அமைச்சரவை சாத்தியம்.

அந்தத் தேர்தல் இ.தொ.காவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் விஷப் பரீட்சையாகவே அமையப்போகின்றது. ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு ஒரு தொகை வாக்குகள் நிரந்தரமாக மாவட்டத்தில் உள்ளன. எனவே இ.தொ. காவுக்கு அடுத்த பாராளுமன்றத் தேர்தல் சவாலாகவே இருக்கப்போகின்றது. மேலும் தமது புதிய கட்சியை பலப்படுத்த பொது ஜன பெரமுனவானது மொட்டு சின்னத்தில் அல்லது பொதுவான ஒரு சின்னத்திலேயே சிறுபான்மை கட்சிகளை போட்டியிடக் கூறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.  ஆகவே மலையக பெருந்தோட்ட மக்களுக்கு பொதுஜன பெரமுன வழங்கிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

இதில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள  விவகாரம் முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் 50 ரூபா அதிகரிப்பு மற்றும் 5 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பண விவகாரம் இம்முறை தேர்தலில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது பெரியளவான தாக்கத்தை செலுத்தவில்லை. தற்போது அப்படியில்லை. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக ஆயிரம் ரூபா சம்பள விடயம் பற்றி பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது. எனினும் தேர்தல் பிரசார காலத்தில் எந்த இடத்திலும் ஆயிரம் ரூபா பெற்றுத்தருகிறேன் என இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறவில்லை. இதற்கு முன்பு இந்த ஆயிரம் ரூபா வாக்குறுதி தந்த  அனுபவம் காரணமாக அவர் அதைத் தவிர்த்துக்கொண்டார். இது குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குக் கூட அதை கோத்தாபய தானே கூறினார் நான் கூறவில்லையே என நழுவிக்கொண்டார்.

எனினும் இப்போது அது குறித்து அவரிடம் தோட்டத்தொழிலாளர்களும் கேட்க முடியாத சூழ்நிலையே உள்ளது.   ஏனென்றால் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் கோரிக்கையை முழுமையாக அவர்கள் நிறைவேற்றவில்லையென்ற காரணமும் முன்வைக்கப்படலாம். ஆனால் பதவி பிரமாணம் செய்து கொண்டதும் ஜனாதிபதி கோத்தாபய ஆற்றியிருந்த உரையும் அதற்குப் பின்னர் அவரால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையும் முக்கியமானது. அதைப்பார்ப்போம்,

“இப்போது தேர்தல்கள் முடிந்துவிட்டன. நான் இப்பொழுது அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி.

எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் - அவர்கள் எந்த இனத்தை அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - நான் ஜனாதிபதி. இப்போது எனக்குத் தேவையானது எல்லாம் - அனைவரும் மதிப்புடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய - சுபீட்சமானதும் அமைதியானதுமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான உங்கள் ஒவ்வொருவருடைய ஆதரவும் மட்டுமே.”

ஆகவே மலையகப் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்களின் முழுமையான ஆதரவு இல்லாவிட்டாலும் கூட அனைத்து இலங்கை வாழ் மக்கள் என்ற ரீதியில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற  வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதிக்கு உள்ளது. அதை பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு அவருக்கு ஆதரவளிக்கக் கோரிய  இ.தொ.கா உள்ளிட்ட ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் உள்ளது.  

தேசியன்

https://www.virakesari.lk/article/69660

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.