Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் மீதான இந்திய அக்கறை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

•ஈழத் தமிழர் மீதான இந்திய அக்கறை?

காணி அதிகாரம் இல்லை

பொலிஸ் அதிகாரம் இல்லை

வடக்கு கிழக்கு இணைப்புகூட இல்லை

இதுதான் கோத்தா தமிழருக்கு வழங்கப்போகும் தீர்வு

இதைத்தான் அன்று மகிந்தாவும் கூறினார்.

 அதைத்தான் இன்று கோத்தாவும் கூறுகிறார்.

ஆனால் கோத்தா இதை தைரியமாக இந்தியாவில் வைத்தே கூறியுள்ளார்.

பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் இன்னொரு நாட்டு தலைவர் அந்த நாட்டுக்கு தர்ம சங்கடம் வரும் கருத்துகளை கூறுவதில்லை. இதுதான் உலக நடைமுறை.

ஆனால் கோத்தாவோ இந்த நடைமுறைபற்றி எல்லாம்  கவலைப்படாமல் தமிழருக்கு வழங்கும் தீர்வு பற்றி கூறியிருக்கிறார்.

தமிழருக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெருன்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறுகிறார். அவருக்கு 7000 கோடி ரூபா உதவியை இந்திய அரசு வழங்குகிறது.

அப்படியென்றால் தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றுதானே அர்த்தம்.

ஆனால் எமது தமிழ் தலைவர்களோ “இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும்” என்று இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
 

 

https://www.facebook.com/100003995132782/posts/1594330690710087?d=n&sfns=mo

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறுகிறார்.

https://www.facebook.com/100003995132782/posts/1594330690710087?d=n&sfns=mo

இது திரிக்கப்பட்ட செய்தி. கோத்தா சொன்னது, பெரும்பான்மை சிங்கள மக்கள்  அதிகாரப்பரவலாக்கல் என்ற அரசியல் தீர்வை விரும்பவில்லை. ஆனால், வடபகுதியை பொருளாதார அபிவிருத்தி செய்வதையோ, தமிழருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையோ எவரும் எதிர்க்கவில்லை. நான் அவற்றையே தீர்வாக வழங்க இருக்கிறேன் என்றார்.  
http://www.jaffnamuslim.com/2019/12/blog-post.html

“70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
 
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இது திரிக்கப்பட்ட செய்தி. கோத்தா சொன்னது, பெரும்பான்மை சிங்கள மக்கள்  அதிகாரப்பரவலாக்கல் என்ற அரசியல் தீர்வை விரும்பவில்லை. ஆனால், வடபகுதியை பொருளாதார அபிவிருத்தி செய்வதையோ, தமிழருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையோ எவரும் எதிர்க்கவில்லை. நான் அவற்றையே தீர்வாக வழங்க இருக்கிறேன் என்றார்.  
http://www.jaffnamuslim.com/2019/12/blog-post.html

“70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
 
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

 

 

Jude,

கோட்டாபய கூறியதன் அடிப்படையில் உங்கள் கருத்து என்ன  ?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

“70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.

 
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

 

29 minutes ago, Maharajah said:

Jude,

கோட்டாபய கூறியதன் அடிப்படையில் உங்கள் கருத்து என்ன  ?? 

இலங்கை பிரச்சினைக்கு இரண்டு சக்திவாய்ந்த பிரிவுகள் திருப்தியடையத்தக்க தீர்வு தேவை. அந்த பிரிவுகள்:

  1. சிங்களவர்
  2. ஈழத்தமிழர்

போரில் ஏற்பட்ட தோல்வியின் பின் ஈழத்தமிழர் தம்மை சக்திவாய்ந்த பிரிவாக கருதுவது குறைவு. ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ஈழத்தமிழரை சக்திவாய்ந்த பிரிவாக கருதுவதாகவே அவரது சொல்லும் செயலும் காட்டுகிறது. மாவீரர் நாளை நினைவுகூர அனுமதித்துவிட்டு, அவரது பாதுகாப்பு செயலாளரான முன்னாள் இராணுவ தளபதியை கொண்டு, “மாவீரர் நாளை நினைவுகூர்வது சட்டவிரோதமானதல்ல” என்று சொல்ல வைத்தது, கோத்தபாய எவ்வளவு தூரம் ஈழத்தமிழருடன் சமரசம் செய்து தீர்வுக்கு வர விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.

போருக்கு தயாரில்லாமல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும், விஞ்ஞானத்திலும், உல்லாசத்திலும் மூழ்கி இருந்த  அமெரிக்காவுடன் உயர்ந்த பட்ச நட்பில் இருந்துகொண்டே பேர்ள் ஹார்பரில் குண்டுகள் போட்டு அமெரிக்க கடற்படைக்கப்பல்களில் பெரும்பாலானவற்றையும், கிறிஸ்மஸ் கொண்டாட தயாராக இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினரையும் ஜப்பான் கொன்று குவித்து அமெரிக்காவை   இரண்டாம் உலகயுத்தத்திற்குள் இழுத்தது. உடனடியாக தன்னை தயார்படுத்திக்கொண்டு, யூத விஞ்ஞானிகள் செய்து தந்த அணுக்குண்டுகளை வீசி உலகறியா அழிவை ஏற்படுத்தி ஜப்பானை அமெரிக்கா சரணடைய செய்தது. சரணடைந்த ஜப்பானை, அமெரிக்கா முற்றாக அழித்திருக்கலாம், அல்லது நிரந்தர அடிமையாக வைத்திருக்கலாம். அப்படி செய்யாமல், ஜப்பானுக்கு பணத்தையும், தொழில்நுட்பத்தையும், சந்தைவாய்ப்பையும் அள்ளி வழங்கி, ஜப்பானை தனக்கடுத்த இரண்டாவது பணக்கார நாடாக்கியது அமெரிக்கா. இந்த வரலாற்றை பெரும்பாலான அமெரிக்கர்கள் நன்கறிவர். அவர்களுள் ஒருவர் கோத்தபாய.அவர் இலங்கையரானாலும், அவரது கொள்கைகளும் செயற்பாடுகளும் அவரை ஒரு அமெரிக்கராகவே காட்டுகின்றன.  

போர் செலவுகளாலும் ஊழல்களாலும், இலங்கை தாங்கமுடியாத கடன்சுமையை கொண்ட ஏழை நாடாக இருக்கிறது. தானும், தன் நண்பர்களும், காயப்பட்டு, உயிர்களை இழந்து போரில் இருந்து மீட்டெடுத்த இந்த நாடு இப்படி ஏழ்மையால் அழிந்து போவதை கோத்தபாய விரும்பவில்லை என்று தெரிகிறது. 70 வயது இருதய நோயாளியான அவர் தன்னால் இந்த நாட்டை. வறுமையில் இருந்தும் மீட்க முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு ஈழத்தமிழரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான பணமும், தொடர்புகளும், சந்தைவாய்ப்பும், அறிவும், அனுபவமும் ஈழத்தமிழரிடமே உள்ளன - ஏழைச்சிங்களவரிடம் இல்லை. அமெரிக்காவில் ஆசிய நாட்டவர் அதிகம் வாழும் பணக்கார கலிபோர்னியாவில் 12 வருடங்கள் வாழ்ந்த கோத்தபாயவுக்கு இது நன்கு தெரியும். 

ஆகவே அவர் இரண்டு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை தேடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
 
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

இவை தொடர்பாக நீங்கள் ஒன்றும் கூறவில்லையே   ?? 

 

Edited 3 hours ago by Jude

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maharajah said:
பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
......
.......
இவை தொடர்பாக நீங்கள் ஒன்றும் கூறவில்லையே? 

 

1 hour ago, Jude said:

இலங்கை பிரச்சினைக்கு இரண்டு சக்திவாய்ந்த பிரிவுகள் திருப்தியடையத்தக்க தீர்வு தேவை. அந்த பிரிவுகள்:

  1. சிங்களவர்
  2. ஈழத்தமிழர்

ஆகவே அவர் இரண்டு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை தேடுகிறார். 

 

18 minutes ago, Maharajah said:
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

இவை தொடர்பாக நீங்கள் ஒன்றும் கூறவில்லையே? 

 

1 hour ago, Jude said:

போர் செலவுகளாலும் ஊழல்களாலும், இலங்கை தாங்கமுடியாத கடன்சுமையை கொண்ட ஏழை நாடாக இருக்கிறது. தானும், தன் நண்பர்களும், காயப்பட்டு, உயிர்களை இழந்து போரில் இருந்து மீட்டெடுத்த இந்த நாடு இப்படி ஏழ்மையால் அழிந்து போவதை கோத்தபாய விரும்பவில்லை என்று தெரிகிறது. 70 வயது இருதய நோயாளியான அவர் தன்னால் இந்த நாட்டை. வறுமையில் இருந்தும் மீட்க முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு ஈழத்தமிழரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான பணமும், தொடர்புகளும், சந்தைவாய்ப்பும், அறிவும், அனுபவமும் ஈழத்தமிழரிடமே உள்ளன - ஏழைச்சிங்களவரிடம் இல்லை. அமெரிக்காவில் ஆசிய நாட்டவர் அதிகம் வாழும் பணக்கார கலிபோர்னியாவில் 12 வருடங்கள் வாழ்ந்த கோத்தபாயவுக்கு இது நன்கு தெரியும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

 

 

 

ஒவ்வொரு ஜனாதிபதிபதியும் என்ன மனநிலையில் இருந்து பேசுகிறார்கள் என்பதுதான் உண்மையான பிரச்சனையே.

எல்லா இலங்கையருக்குமான  ஜனாதிபதியா அல்லது பவுத்த சிங்களவருக்கான ஜனாதிபதியா என்பதிலிருந்தே எல்லாம் ஆரம்பமாகிறது.  அவர் யாருக்கு ஜனாதிபதி என்பதை அவரது பேச்சிலிருந்து புரிந்துகொள்ளலாம்.  அப்படியான மனநிலையில் இருந்து அவர் இனப் பிரச்சனைக்கு தீர்வை காணமுடியும்.  தருவதை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதற்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை கொண்டுவருவதற்க்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது.  

எனது பார்வையில்,  இவருக்கு மற்றெல்லா ஜனாதிபதிக்கும் இல்லாத அருமையான சந்தர்ப்பம் (Golden opportunity ) கிடைத்துள்ளது. வரலாறில் இடம் பிடிப்பாரா இல்லையா என்பது அடுத்த ஆண்டே விடை தெரியும். 

அப்படி அவர் எல்லோருக்குமான ஜனாதிபதியாக முனைந்தால் SWRD Bandaranayake வுக்கு நடந்ததுதான் இவருக்கும்.  

 

நன்மை நடந்தால் மகிழ்ச்சியே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.