Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் என்பது...

Featured Replies

அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது.

இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்தலின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது.

அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்ல நாகரிகம் படர்ந்தபோது அவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டார்கள். உறவுகள், குடும்பங்கள், இனக்குழுக்கள் எனப் பிரிந்து எல்லைக் கோடுகளை விரிந்தன. விரிந்த எல்லைக் கோடுகள் முதலில் காவு கேட்டது காதலைத்தான்; காதலர்களைத்தான். நாகரிகம் வளர வளர தேசம், மதம், இனம், மொழி என காதல் சுவர்கள் பல எழும்பின. இருப்பினும், காதல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டே வந்திருக்கிறது. தங்களை அழித்துக் கொண்டு காதலை வாழவைத்தவர்களின் பட்டியல் மிக நீளமானது.

சிலர் சரித்திரமாகவும் நிலைத்துவிட்டார்கள். சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தன் காதலியை அடையாமலே தூக்கிலிடப்பட்ட தினத்தைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகத்திலும் காதல் என்பது சமூகக்குற்றம் என்பது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இன்னும் இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கவில்லை.

காதல் சாமான்யனையும் சாதனையாளனாக்கிவிடும். காதல்தான் மிகப்பெரும் ஊக்கச் சக்தி. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் எல்லாம் காதலித்தவர்களாகவும், காதலிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

வாழ்க்கையின் முழுமையான வெற்றி என்பது காதலையும் உள்ளடக்கியதுதான். இந்த உலகம் எப்போதும் காதலால் நிரம்பியே இருக்கவேண்டும். காதல் இல்லாத உலகம் சூன்யமானது.

காதலர்கள் நிறைந்த பூமியே சொர்க்க பூமி. அத்தகைய சொர்க்கபூமியை உருவாக்க வேண்டும் நாம். அதற்காக, காதலிக்கலாம் வாங்க.

......................

பாரதிராஜா (திரைப்பட இயக்குநர்)

காதல்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவுகளைத்தான் என் படங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்

கே.பாக்யராஜ் (திரைப்பட இயக்குநர்)

காதலை நான் காயப்படுத்தி இருக்கிறேன். காதல் என்னைக் காயப்படுத்தி இருக்கு. ஆனா அதே காதல்தான் என் காயங்களையும் குணப்படுத்தி இருக்கு.

ஆர்.பார்த்திபன் (திரைப்பட இயக்குநர்)

கண்கள் கசியும் போதெல்லாம் அனுசரணையா அதை ஒத்தி எடுத்துவிட்டு ஆறுதலாக ஒரு பார்வை - அதன் பெயர்தான் காதல்.

ரேவதி (திரைப்பட நடிகை)

பரஸ்பரம் புரிஞ்சுக்கறதும், நம்பிக்கை வளர்க்கறதும், எல்லாம் மீறி ஏதாவது ஒரு எண்ண அலை ரெண்டு பேரும் இணையுறதுதான் காதல்.

டி.ராஜேந்தர் (திரைப்பட இயக்குனர்)

காதல் என்பது எல்லோருக்கும் உள்ள உணர்வு. பொதுவாக, நடிகை என்றால் அவர்களின் அங்கத்துக்காகத்தான் என்று கேவலமாக பார்க்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலும் காதல் உண்டு, பாசம் உண்டு, ஏக்கம் உண்டு. இவற்றையெல்லாம்விட நிறைய கண்­ரும் உண்டு. படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு, ஏன் இப்போது விஜி இவர்களுக்கு இதயம் இல்லாமல் இருந்திருந்தால் காதலுக்காக உயிரை விட்டிருக்கமாட்டார்கள். காதல் முடவனையும் சிற்பியாக்கும், சிற்பியையும் முடவனாக்கும்.

வஸந்த் (திரைப்பட இயக்குனர்)

காதலில் மிகவும் அற்புதமான விஷயம் அந்தப் பார்வை பரிமாற்றம்தான். உண்மையான காதலர்களுக்கு அது புரியும்.

டி.ராஜேந்தர் (திரைப்பட இயக்குனர்)

காதல் என்பது எல்லோருக்கும் உள்ள உணர்வு. பொதுவாக, நடிகை என்றால் அவர்களின் அங்கத்துக்காகத்தான் என்று கேவலமாக பார்க்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலும் காதல் உண்டு, பாசம் உண்டு, ஏக்கம் உண்டு. இவற்றையெல்லாம்விட நிறைய கண்­ரும் உண்டு. படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு, ஏன் இப்போது விஜி இவர்களுக்கு இதயம் இல்லாமல் இருந்திருந்தால் காதலுக்காக உயிரை விட்டிருக்கமாட்டார்கள். காதல் முடவனையும் சிற்பியாக்கும், சிற்பியையும் முடவனாக்கும்.

இது இவரது அனுபவமா? அல்லது சிம்புவின் அனுபவமா?

சிம்பு காதலைப்பற்றி இப்படிக் கூறி இருப்பாரோ?

காதல் என்பது எல்லோருக்கும் உள்ள உணர்வு. பொதுவாக, நடிகை என்றால் அவர்களின் அங்கத்துக்காகத்தான் அவர்களள காதலிக்கின்றேன் என்று என்ன மற்றவர்கள் கேவலமாக பார்க்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலும் எனக்கு காதல் உண்டு, பாசம் உண்டு, ஏக்கம் உண்டு. இவற்றையெல்லாம்விட நிறைய கண்ணீ­ரும் உண்டு. எனது காதலிக்கு - அதான் உங்களுக்கு தெரியுமே - அவள் இதயம் இருந்திருந்தால் காதலுக்காக உயிரை விட்டிருப்பாள். ஆனால் அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள். ஆகவே அவளுக்கு இதயம் இல்லை...

காதல் என்பது பட்டாம்பூச்சி போல..

இறுக்கிப் பிடித்தால் இறந்துபோய்விடும்...

லேசாகப் பிடித்தால் ஓடிப்போய்விடும்...

பாரத்துப் பிடியுங்கோ...

சுட்டது

  • தொடங்கியவர்

சிம்பு காதலைப்பற்றி இப்படிக் கூறி இருப்பாரோ?

காதல் என்பது எல்லோருக்கும் உள்ள உணர்வு. பொதுவாக, நடிகை என்றால் அவர்களின் அங்கத்துக்காகத்தான் அவர்களள காதலிக்கின்றேன் என்று என்ன மற்றவர்கள் கேவலமாக பார்க்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலும் எனக்கு காதல் உண்டு, பாசம் உண்டு, ஏக்கம் உண்டு. இவற்றையெல்லாம்விட நிறைய கண்ணீ­ரும் உண்டு. எனது காதலிக்கு - அதான் உங்களுக்கு தெரியுமே - அவள் இதயம் இருந்திருந்தால் காதலுக்காக உயிரை விட்டிருப்பாள். ஆனால் அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள். ஆகவே அவளுக்கு இதயம் இல்லை...

மாப்பி எப்படி இப்படியெல்லாம் உங்களாள முடியுது

:unsure:

காதல் என்பது பட்டாம்பூச்சி போல..

இறுக்கிப் பிடித்தால் இறந்துபோய்விடும்...

லேசாகப் பிடித்தால் ஓடிப்போய்விடும்...

பாரத்துப் பிடியுங்கோ...

சுட்டது

பட்டாம்பூச்சி குடம்பியாக இருக்கும் போது பிடித்தா

:P

மருமோன் நீர் தேற மாட்டீர் :angry:

காதலை எட்டாதவனுக்கு அது கோபுரம்.

எட்டியவனுக்கு (திருமணத்தை) அது துரும்பு.

  • தொடங்கியவர்

மருமோன் நீர் தேற மாட்டீர் :angry:

மாமா உங்க வாயால அப்படி சொல்லகூடாது

:P

காதலை எட்டாதவனுக்கு அது கோபுரம்.

எட்டியவனுக்கு (திருமணத்தை) அது துரும்பு.

இதில எது நல்லது லீசண் கோபுரமா அல்லது துரும்பா

:P

இதில எது நல்லது லீசண் கோபுரமா அல்லது துரும்பா

காதலிப்பது இனிமையானது என்று நினைக்கிறேன்.

அது திருமணத்தில் முடியாவிட்டால் அந்த உணர்வு இனிமையானதாகவே மறையாமல் மனதில் இருக்கும்.

ஆனால் எது நல்லது என்பது ஒவ்வொருவரையும் பொறுத்தது.

  • தொடங்கியவர்

காதலிப்பது இனிமையானது என்று நினைக்கிறேன்.

அது திருமணத்தில் முடியாவிட்டால் அந்த உணர்வு இனிமையானதாகவே மறையாமல் மனதில் இருக்கும்.

ஆனால் எது நல்லது என்பது ஒவ்வொருவரையும் பொறுத்தது.

நீங்க சொன்னா சரியா தான் இருகும்

ஆனால் எங்கையோ கேட்ட டயலக் காதல் என்பது சொறி மாதிரி சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்தா பிறகு காயம் தான் வரும் என்று :rolleyes:

இது நான் சொல்லவில்லை யாரோ சொன்னது பிறகு என்னோட சண்டைக்கு வாறதில்லை :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சொன்னா சரியா தான் இருகும்

ஆனால் எங்கையோ கேட்ட டயலக் காதல் என்பது சொறி மாதிரி சொறிய சொறிய நல்லா இருக்கும் சொறிந்தா பிறகு காயம் தான் வரும் என்று :rolleyes:

இது நான் சொல்லவில்லை யாரோ சொன்னது பிறகு என்னோட சண்டைக்கு வாறதில்லை :P

பாவம் எனக்கு வாற அண்ணி இப்படி ஒரு அண்ணாவுக்கு வாழ்க்கைபட வேண்டுமா :lol::lol:

  • தொடங்கியவர்

பாவம் எனக்கு வாற அண்ணி இப்படி ஒரு அண்ணாவுக்கு வாழ்க்கைபட வேண்டுமா :huh::lol:

தங்கா அண்ணாவை பார்த்து இப்படி சொல்ல கூடாது பிறகு நான் எவ்வளவு பீல் பண்ணுவன் அண்ணியை கண்ணை இமை காப்பது போல காப்பாற்றமாட்டேன்,

காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழிகள் கிடையாது

;)

காதல் தெய்வீகமானது :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கா அண்ணாவை பார்த்து இப்படி சொல்ல கூடாது பிறகு நான் எவ்வளவு பீல் பண்ணுவன் அண்ணியை கண்ணை இமை காப்பது போல காப்பாற்றமாட்டேன்,

காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழிகள் கிடையாது

;)

நீங்க சொன்னா சரி. :P

காதலிக்கிறீங்களோ??? கவிதையா வடிக்கிறீங்க :huh:

  • தொடங்கியவர்

நீங்க சொன்னா சரி. :P

காதலிக்கிறீங்களோ??? கவிதையா வடிக்கிறீங்க :huh:

இது தானே வேண்டாம் என்கிறது சும்மா கவிதை சொன்னா காதல் என்கிறீங்க

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தானே வேண்டாம் என்கிறது சும்மா கவிதை சொன்னா காதல் என்கிறீங்க

:P

எனக்கு கவிதை சுட்டு போட்டாலும் வர மாட்டுதாம் :huh:

  • தொடங்கியவர்

எனக்கு கவிதை சுட்டு போட்டாலும் வர மாட்டுதாம் :lol:

அட சும்மா என்னாவது எழுதுங்கோ நான் வந்து வாழ்த்து தெரிவிக்கிறேன் பிறகு எல்லாரு வந்து வாழ்ட்து தெரிவிப்பினம் பிறகு அது கவிதை ஆகிடும்

:huh: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சும்மா என்னாவது எழுதுங்கோ நான் வந்து வாழ்த்து தெரிவிக்கிறேன் பிறகு எல்லாரு வந்து வாழ்ட்து தெரிவிப்பினம் பிறகு அது கவிதை ஆகிடும்

:huh: :P

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

:lol: :lol: :lol:

தங்கா இது என்ன சின்ன பிள்ளைதனமா அண்ணா இருக்கும் போது நீங்க கண்கலங்கலாமா எனக்கு கவிதை எழுத வராது ஆனலும் தெரிந்ததே சும்மா எழுதினன் அதுக்கு யாழ் களத்தில எல்லாரும் உதவி செயிதிச்சினம் அதற்கு பிறகு ஒரு அளவு கவைதை எழுத தெறியும் நீங்களும் யம்மு சுட்ட பக்கத்தில் போய் கவிதை எழுதி பாருங்கோ உங்களுக்கு நல்லா வரும்

:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கா இது என்ன சின்ன பிள்ளைதனமா அண்ணா இருக்கும் போது நீங்க கண்கலங்கலாமா எனக்கு கவிதை எழுத வராது ஆனலும் தெரிந்ததே சும்மா எழுதினன் அதுக்கு யாழ் களத்தில எல்லாரும் உதவி செயிதிச்சினம் அதற்கு பிறகு ஒரு அளவு கவைதை எழுத தெறியும் நீங்களும் யம்மு சுட்ட பக்கத்தில் போய் கவிதை எழுதி பாருங்கோ உங்களுக்கு நல்லா வரும்

:huh:

வேறு ஒரு நாள் டிரை பண்ணி பார்ப்பம் :lol:

  • தொடங்கியவர்

வேறு ஒரு நாள் டிரை பண்ணி பார்ப்பம் :huh:

ஆமாம் அப்படியே செயுங்கோ முதல் கவிதையை யாரை பற்றி எழுத போறீங்க

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் அப்படியே செயுங்கோ முதல் கவிதையை யாரை பற்றி எழுத போறீங்க

:P

எழுதினா பிறகு பாருங்கோ :P

  • தொடங்கியவர்

எழுதினா பிறகு பாருங்கோ :P

எழுதினா பிறகு பார்க்க எங்களுக்கும் தெரியும் தானே

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.