Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுங்கள்! மாவை சேனாதிராஜா எம்.பி. ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Featured Replies

கடத்தப்பட்ட மாணவர்களை

விடுவிக்க துரித நடவடிக்கை எடுங்கள்!

மாவை சேனாதிராஜா எம்.பி. ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கொழும்பு, மே 12

யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட் டிருக்கும் பாடசாலை மாணவர்கள் பாதுகாப் பாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருக்கிறார்.

இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அவர் அனுப்பியிருக்கிறார்.

நான்கு மாணவர்களினதும் பெயர் விவ ரங்களைக் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்திருப்பவையாவது:

யாழ்ப்பாணத்தில் "கிறீன் காம்ப்' எனப் படும் முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினராலேயே பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கின்றனர்.

கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத் தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சீரழிந்து வருவது சொல்லித்தெரியவேண்டியது அல்ல. இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல தடவைகள் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர். ஆசிரியர்களும்கூட மாணவரது வரவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்.

பொலிஸார் உட்பட ஆயுதப்படையினருக் குத் தெரியாமல் இக்கடத்தல்கள் இடம்பெற்றிருக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

எனவே, தங்களது துரித நடவடிக்கையினால் மாணவர்கள் நால்வரும் உடனே பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று மாவை எம்.பி. கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். (சி)

உதயன்

யாழ். பாடசாலை அதிபர்களுக்கு சிறிலங்கா இராணுவம் கொலை அச்சுறுத்தல்

[சனிக்கிழமை, 12 மே 2007, 18:18 ஈழம்] [செ.விசுவநாதன்]

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான பாடசாலைகளின் அதிபர்களுக்கு சிறிலங்கா இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

யாழ். நகரத்தில் உள்ள பிரதான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சில மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறி இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளோர், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அதனைக் கைவிடாத நிலையில் அவர்கள் கொல்லப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது.

இலங்கையைப் பாதுகாக்கும் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரினால் சிறிலங்கா இராணுவத்தினரால் இந்தத் துண்டுப் பிரசுரம் நேற்று வெள்ளிக்கிழமை விநியோகப்பட்டது.

யாழ். இந்துக் கல்லூரி அதிபரின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய துண்டுப் பிரசுரத்தால் யாழ். கல்வி சமூகத்தினரிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஓன்பது மாதங்களின் பின் யாழ். பல்கலைக்கழக மாணவன் பகீரதன் விடுதலை

சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் சிவராஜ் பகீரன் ஒன்பது மாத கால தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தனவினால் நேற்று வெள்ளிக்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவசரகாலச் சட்ட விதிகளின் படி பகீரதனை கைது செய்வதற்கு அல்லது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் மூலம் அவரை தடுத்து வைப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பகீரதன் விடுதலை செய்யப்பட்டார்.

பகீரதனை கொழும்பு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரதம நீதியரசர், பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட்டதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் நேற்று முன்னிறுத்தப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் அலுவலகத்தில் பகீரதன் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யும் போது மக்கள் விடுதலை இராணுவம் என்னும் அமைப்பின் துண்டுப்பிரசுரங்களை அவர் வைத்திருந்ததாக இராணுவம் அவர் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பகீரதன் பின்னர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவரது விடுதலை தொடர்பாக சட்டத்தரணிகளான அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் தனபாலசிங்கம் ஜனகன் ஆகியோர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

http://www.eelampage.com/

கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுங்கள்!

கடத்தச் சொல்லி சொன்னவனிடமே கடத்தப்பட்டவர்களை விடுமாறு கேட்கபடுகின்றதா?

சேய் எலியைக் காணவில்ல என்று தாய் எலி பூனையிடம் போய் முறையிடுவது போல் உள்ளது. கடைசியில் தாய் எலிக்கு பூனையினால் ஆபத்து வராமல் இருந்தால் சரி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.