Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Myanmars-Suu-Kyi-denies-genocidal-intent-in-Rohingya.jpg

இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை நோக்கம் இருக்கவில்லை – சர்வதேச நீதிமன்றில் ஆங் சாங் சூகி வாதம்

மியான்மாரில் சிறுபான்மையின மக்களை இனப் படுகொலை செய்யும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

மியன்மார் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜராகி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே மியான்மார் இராணுவம் ஈடுபட்டது. இந்நிலையில் ரக்கினே மாநிலத்தில் உள்ள நிலைவரம் தொடர்பாக முழுமையற்றதும் தவறானதுமான சில தகவல்களை இந்த நீதிமன்றத்தில் காம்பியா அரசு சமர்ப்பித்துள்ளமை வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில் சில பகுதிகளில் இராணுவ வீரர்கள் அதிகப்படியான பலப்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை போதுமான முறையில் தெளிவாக கண்டுபிடிக்க அவர்கள் தவறி இருக்கலாம்.

இதுதொடர்பாக மியான்மர் அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இந்த சூழலில் இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை என்ற நோக்கம் இருந்ததாக கருதிவிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மியான்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இராணுவம் ஈடுபட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவத்தினரின் உச்சக் கட்டத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உயிருக்குப் பயந்து சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில், ரோஹிங்கியா மக்களைக் குறிவைத்து நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதனால், அரசின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தன்னுடைய அறிவுறுத்தலின்பேரில் தான் இயங்கி வருகின்றன என்னும் நிலையில் மியான்மார் அரசாங்கத்தின் சார்பில் ஆங் சாங் சூகி சர்வதேச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடினார்.

முன்னதாக, நேற்று காம்பியா நாட்டின் சட்டத்துறை அமைச்சர் அபுபக்கர் டம்படோவ் தங்கள் நாட்டின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஜராகி மியான்மார் அரசாங்கத்தின் மீதும் ஆட்சியின் தலைவராக விளங்கும் ஆங் சாங் சூகி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இராணுவ-நடவடிக்கையில்-இனப/

இலங்கையில் உள்ளது போன்ற தேரவார புத்தம் எவ்வாறு அடிபணிந்தது ? 

https://en.wikipedia.org/wiki/Buddhism_in_Myanmar

Reforms In Myanmar Show Positive Signs : News Photo

இராணுவம் பொதுமக்களை சுற்றிவளைத்து படுகொலை செய்வது இனப்படுகொலையில்லையா? ஆங் சான் சூகி கருத்து குறித்து ரொகிங்யா மக்கள் சீற்றம்

மியன்மார் படையினர் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என ஆங் சான் சூகி  தெரிவித்துள்ளமை குறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ரொகிங்யா இனத்தவர்கள் அவர் தெரிவித்தது உண்மையா என்பதை உலக  உரிய ஆதாரங்களுடன் மதிப்பிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

இனப்படுகொலை இடம்பெறவில்லை என அவர்  தெரிவித்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் உலகம் மதிப்பிடும் என சமாதானம் மனிதஉரிமைகளிற்கான ரொகிங்யா அமைப்பின் தலைவர் முகமட் மொகிபுல்லா தெரிவித்துள்ளார்.

திருடன் ஒருவன் தான் திருடன் என்பதை ஒருபோதும்ஏற்றுக்கொள்வதில்லை, ஆனால்  ஆதாரங்கள் மூலம் நீதியை வழங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் எங்களிடமிருந்து இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங் சான் சூகி  பொய்சொன்னாலும் அவர் தப்ப முடியாது அவர் நிச்சயம் நீதியை எதிர்கொள்வார் உலகம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பங்களாதேசின்  குட்டுபலங் அகதிமுகாமில் உள்ள மற்றொருஅகதியான நுர் கமால்   என்பவரும்; ஆங் சான் சூகியின்   வாக்குமூலத்தை நிராகரித்துள்ளார்.

இராணுவம் மக்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்த பின்னர்அவர்களின்உடலிற்கு தீ மூட்டுவது  இனப்படுகொலை இல்லையா என அவர் கேள்விஎழுப்பியுள்ளார்.

ஆங் சான் சூகி  அவ்வாறு சொன்னால்அது சரியாகிவிடுமா எனவும் கேள்விஎழுப்பியுள்ள அவர் உலகம் இதனை ஏற்றுக்கொள்ளாது,எங்கள் மீதான சித்திரவதைகளை முழு உலகமும் பார்த்துள்ளது, எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

மியன்மாரிற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறாக வழிநடத்தும் நோக்கத்தை கொண்டது முழுமையற்றது என ஆங் சான் சூகி  தெரிவித்துள்ளார்.

ஹேக் சர்வதேச நீதிமன்றில் மியன்மாரிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரொகிங்யா மக்களிற்கு எதிராக அளவுக்கதிகமான படைபலம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் எனினும் மியன்மாரின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் இடம்பெறும் மோதல் குழப்பமானது இலகுவில் புரிந்துகொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/70921

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு விழுகிற அடியை  பார்த்து எங்கடை இனவாத கூட்டமும்  வடகிழக்கு எங்கும் தமிழ் மொழி முக்கியம் என்று முணுமுணுக்கின்றனர் .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.