Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்த கண்ணீர்

Featured Replies

tearsofblood222112004mpvm7.jpg

Edited by இனியவள்

ஆக மொத்தத்தில் கண்ணீர் என்பது மனித வாழ்வில் நிரந்தரமானது...

அழகான வரிகள்

நாளை அவள் இறந்து போக

வடிப்பார்கள் முட்டை கண்ணீர்

மிகவும் அழகானதும் கருத்துகள் அடங்கிய கவி வரிகள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் இனியவள்.

படமும் நல்லா இருக்கு.

இனியவள்,

படம் நல்லா இருக்கு. அது சரி நீங்க என்ன தான் சொல்ல வாறீங்க என்று விளங்கல. விளக்கம் கொடுங்கள் பார்ப்பம் :rolleyes: இது விளங்கி களத்தில சிலர் ஆகா ஓகோ என்று வேறு சொல்கிறார்கள்... அதுவும் விளங்கல...

இனியவள்,

படம் நல்லா இருக்கு. அது சரி நீங்க என்ன தான் சொல்ல வாறீங்க என்று விளங்கல. விளக்கம் கொடுங்கள் பார்ப்பம் :lol: இது விளங்கி களத்தில சிலர் ஆகா ஓகோ என்று வேறு சொல்கிறார்கள்... அதுவும் விளங்கல...

அண்ணா இது வாழ்கையின் யதார்தத்தை உணர்த்தும் கவிதை பெற்றோர் மணமகளை ஆசிர்வதிக்கும் போது விடும் கண்ணீர் துளி ஆனந்த கண்ணீர் அதே மகள் விதவையாக ஆகும் போது அதே பெற்றோர் உறவுகள் வடிக்கும் கண்ணீர் தான் இந்த இரத்த கண்ணீர் இந்த வரிகள் கவர்ந்து தான் பாராட்டினாங்க

:rolleyes:

யமுனா சொன்னா சரி தான்.... வேறு கருத்துக்கு இடமில்லை ....

  • தொடங்கியவர்

ஆக மொத்தத்தில் கண்ணீர் என்பது மனித வாழ்வில் நிரந்தரமானது...

மனிதனின் வாழ்க்கை என்றாலே சந்தேசமும் , கண்ணீரும் கலப்பது தான்

இல்லையா ???

விதவை ஆனால் கண்ணீர் வடிக்க வேண்டிய சமுதாயம் வழக்கம் இன்னும் தேவையா ?

  • தொடங்கியவர்

விதவை ஆனால் கண்ணீர் வடிக்க வேண்டிய சமுதாயம் வழக்கம் இன்னும் தேவையா ?

நல்ல கெல்விதான்!!!!!

இதுக்கு பதில் :blink::blink::lol::unsure:

விதவை ஆனால் கண்ணீர் வடிக்க வேண்டிய சமுதாயம் வழக்கம் இன்னும் தேவையா ?

நாம் 2 வர் மட்டும் சிந்தித்து பயன் இல்லை எங்கள் சமுதாயம் சிந்திக்க வேண்டும்

:lol:

இரத்த கண்ணீர் சிந்தும் கவிதை நன்றாக இருக்கிறது

விதவை என்று சொல்கின்ற அந்த புரையோடிய கொள்கை

இந்த யுகத்தில் மாற்றம் கண்டுள்ளது இன்னும் மாறவேண்டும்

  • தொடங்கியவர்

இரத்த கண்ணீர் சிந்தும் கவிதை நன்றாக இருக்கிறது

விதவை என்று சொல்கின்ற அந்த புரையோடிய கொள்கை

இந்த யுகத்தில் மாற்றம் கண்டுள்ளது இன்னும் மாறவேண்டும்

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

சிந்திக்க கூடிய கேள்வியை தான் கேட்டு இருக்கிறீங்க

:lol:

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

விதவைக்கு எதற்கு வாழ்வு கொடுக்க வேண்டும் ?

விதவைக்கு எதற்கு வாழ்வு கொடுக்க வேண்டும் ?

இது என்ன கேள்வி லிசான்

இன்று எங்கள் நாட்டில் எத்தனை விதவைகள்?

கட்டாயம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்

இல்லையா லிசான்

அவர்களும் மனிதர்கள்தானே.

கணவனை இழந்து விட்டால் ஒரு பெண் வாழ்விழந்தவள் என்று அர்த்தமாகுமா ?

எனது குடும்பத்திலேயே தன் கணவனை இழந்த ஒருவர் காதலித்து இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அதற்காக அந்த ஆண் வாழ்வு கொடுத்தவர் என்று அர்த்தமாகாது. இன்னொருவர், இரண்டு பிள்ளைகளுக்குத் தாய், இளம் வயதிலேயே கணவனை இழந்தவர், ஐரோப்பாவில் வாழ்கிறார். பலர் அவருக்கு இரண்டவது மணம் முடிக்க முயன்றும் மறுத்துவிட்டார். தனது பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்வதாகக் கூறுகிறார்.

இவர் வாழ்விழந்தவரா ?

ஆண் தனது பெண் துணையை இழந்து விட்டால் அவரை வாழ்விழந்தவராக யாராவது சொல்வோமா ?

அல்லது அவர் இரண்டாவது திருமணம் செய்தால், அவரின் மனைவியை, வாழ்வு கொடுத்தவர் என்று கருதாமல் இரண்டாம் தாரம் என்றல்லவா சொல்வோம்.

நாம் எம்மை மாற்ற முயற்சிப்போம்.

கணவனை இழந்து விட்டால் ஒரு பெண் வாழ்விழந்தவள் என்று அர்த்தமாகுமா ?

லிசான் இந்த கருத்தை நானும் அடிக்கடி நினைப்பது உண்டு எமக்குள் ஒரு

தப்பான சிந்தனை வளர்க்கப்பட்டு விட்டது அதற்கு என்ன காரணம்

என்று தெரியவில்லை விதவைகள் என்றால் பூட்டிய அறைக்குள்

வாழவேண்டும் என்ற சிந்தனை இப்போது அதிகமாக இல்லையென

நினைக்கின்றேன் இது ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் இதை அந்த

பெண்தான் முடிவெடுக்க வேண்டும் இதில் யாரும் தலையிடமுடியாது ஏனென்றால்

அது அவளின் சந்தோஷங்கள் இங்கே தடையாக நிற்பது மூடநம்பிக்கைகள்

என நினைக்கின்றேன் இதில் இருந்து தான் விடுதலை தேவை

Edited by கஜந்தி

இந்த உலகத்தை நாங்கள் மாற்ற முயலலாம் ,

ஆனால் நான் கேக்கின்ரேன் இலக்கியன் உங்களை

உண்மையாக ஒரு பதில் சொல்ல வேண்டும்,

நீங்கள் ஒரு விதவைக்கு வாழ்வு குடுப்பீங்கலா???

இது என்ன கேள்வி இனியவள். :rolleyes:

அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைதால் நிச்சயமாக வாழ்வு கொடுக்கலாம்

இது தீண்டத்தகாத விடயமா என்ன :o

தம்பியோ (அண்ணாவோ) தெரியல .... இலக்கியா... நீங்க சொல்லுறதுக்கு ஒன்றும் பாராட்டுச் சொல்ல நான் வரல.... எங்கட சமூகத்தைப் பொறுத்தமட்டில் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கிறது என்பதை ஏதோ செய்ய முடியாத ஒன்றைச் செய்வது போலவும் பெரிய மனசுள்ளவர்கள் தான் செய்ய முடியும் என்ற தோரணையிலும் பார்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். விதவைகளை திருமணம் செய்வதால் ஏதோ வாழ்வு கொடுப்பது போலவும் சிலரின் நினைப்பு ... வாழ்வு கொடுக்க நாம் யாரப்பா... ? வாழ்வு கிடைச்சு தானே மண்ணில் வந்திருக்கினம்... அந்த வார்த்தைப் பிரயோகம் சரியாகாப் படல... என்ன தான் அடிக்கடி விவகாரத்துச் செய்து மறுமணம் செய்கின்ற கலாச்சாரத்தை மேற்குலகத்தினர் கொண்டு இருந்தாலும் அவர்களின் மனநிலை நம்மவருக்கு வர நாளாகும்... (அடிக்கடி விவகாரத்து செய்யுங்க என்று சொல்லல நான்... கவனியுங்க...) சீதனம் கேட்கிறதில தொடங்கி ஆண்களின் கை மேலோங்கிய சமூக அமைப்பாகவே எங்க சமூகம் இன்னும் இருக்கு... என்றாலும் இப்படி சிந்தனை ரீதியில் பின்தங்கி இருக்கிற சமூக அமைப்பில இருந்து விதவைகளை மணம் செய்ய உங்களைப் போன்றவர்கள் முன்வந்தால் வாழ்த்துச் சொல்லலாம்... மற்றும் படி இதில் சிலாகிக்க எதுவும் இல்லை...

  • தொடங்கியவர்

கணவனை இழந்து விட்டால் ஒரு பெண் வாழ்விழந்தவள் என்று அர்த்தமாகுமா ?

எனது குடும்பத்திலேயே தன் கணவனை இழந்த ஒருவர் காதலித்து இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அதற்காக அந்த ஆண் வாழ்வு கொடுத்தவர் என்று அர்த்தமாகாது. இன்னொருவர், ஆண் தனது பெண் துணையை இழந்து விட்டால் அவரை வாழ்விழந்தவராக யாராவது சொல்வோமா ?

அல்லது அவர் இரண்டாவது திருமணம் செய்தால், அவரின் மனைவியை, வாழ்வு கொடுத்தவர் என்று கருதாமல் இரண்டாம் தாரம் என்றல்லவா சொல்வோம்.

நாம் எம்மை மாற்ற முயற்சிப்போம்.

நன்றாக சொன்னிங்கள் லிசான் ............

  • தொடங்கியவர்

இது என்ன கேள்வி இனியவள். :)

அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைதால் நிச்சயமாக வாழ்வு கொடுக்கலாம்

இது தீண்டத்தகாத விடயமா என்ன :o

எல்லாம் பேச்சுக்கு அழகாத்தான் இருக்கும் இல்லையா இலக்கியன்!!

எனக்கு தெரிந்த ஒரு பெண் இருந்தா அவங்களை நீங்கள் திருமணம் பன்னுவிங்களா இலக்கியன்??ß :):D:rolleyes:

என் கேள்விக்கு என்ன பதில்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.