Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணல்மேடான நம் தாயகத்தை காப்போம் - வ.ஐ.ச,ஜெயபாலன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணல்மேடான நம் தாயகத்தை காப்போம் - வ.ஐ.ச,ஜெயபாலன்.

*

கடந்த டிசம்பர் 5ம் திகதி புதிய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கூடிய அமைசரவை அனுமதியின்றி  (cancelation of  permits  for the transportation of rocks, sand, and soil) கல் மண் மணல் ஏற்றிசெல்ல அனுமதிக்கும் ஆபத்தான முடிவை எடுத்தது.

டிசம்பர் 5ம் திகதியே உடனடியாக இந்த சூழல் விரோதச் சட்டம் அமூலுக்கு வந்த கையோடு யாழ்பாணக்குடாநாட்டையும் இலங்கையையும் இணைக்கும் சுண்டிக்குளம் மணல்திட்டை அபகரிக்கும் முயற்சி தீவிரமானது. மக்கள் எதிர்த்த இடங்களில் எல்லாம் பொலிசாரைக் கொண்டு மக்கள் அடித்து ஒடுக்கப்பபட்டார்கள்.  உண்மையிலேயே பெரும்பாலும் மணல் மேடுகளான தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் அழிவின் விழிம்புக்குத் தள்ளபட்டுள்ளன. 

வடகிழக்கில்  மணல் மாபியாக்களின் பயங்கரவாதத்துக்கு எதிரான அமைதியான மக்கள் எதிர்ப்புகள் யாவும் பொலிசாரைக் கொண்டு அடித்து ஒடுக்கப்படுகிறது. மீண்டும் யுத்தகாலத்தை நினைவுபடுத்துகிற பொலிஸ் நடவடிக்கைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

உண்மையில் ஒட்டுமொத்த  இலங்கைதீவின் உயிமைச் சூழலும் ஆபத்துகுள்ளாக்கபட்டுள்ளது. மேற்படி ஆபத்தான, அனுமதியின்றி மண் மணல் கல் அகற்ற அனுமதிக்கும் விதிகள் அரசியல் பலமும் பாதுகாப்புமற்ற  தமிழ் முஸ்லிம் மலையக தமிழர் பிரதேசங்களில் வாழ்வாதாரச் சூழலுக்கெதிரான மணல் மாபியாக்களின் யுத்தமாகவே மாறியுள்ளது. இதன் பின்னணியில் இலங்கை அரசை ஆதரிக்கும் சர்வதேச நாடுகளின் கட்டுமானக் கம்பனிகள் உள்ளனவா என்பது ஆராயப்பட வேண்டும். 

புதிய கல் மண் மணல் ஏற்றுதல் சட்டங்களும் பொதுமக்கள் மீதான பொலிஸ் தாக்குதல்களும் அரசு தமிழ் மக்களை  சூழல்பாதுகாப்பு  வன்முறைக்குத் தூண்டுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

மணல் திடலான வடகிழக்கில் அதிகரிக்கும் மணல் மாபியா க்களின் வன்முறையையும் மணல்மாபியாவுக்கு ஆதரவான பொலிஸ் அட்டூளியங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நிலமை தொடர்வது  தவிர்க்க முடியாமல் தமிழ் மக்களை சூழல்பாதுகாப்பு வன்முறைக்கு இட்டுச் செல்லும். சூழலுக்கும் மக்களுக்கும் எதிரான அரசின் நடவடிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழர்களும்  சர்வதேச சமூகமும்கூட தீவிரமாக எதிர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.  

கட்டற்ற மண் கல் மணல் ஏற்றும் போக்குவரத்துக்கு வழிவகுத்த  மனுக்குலத்துக்கும் சூழலுக்கும் விரோதமான சட்ட ஏற்பாடுகளை இலங்கை அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென புலம்பெயர்ந்த தமிழர்களும் தென்னாசிய - சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். 

இலங்கை தீவையும் வடகிழக்கு மாகாணங்களையும் மணல்மாபியாக்களிடம் இருந்து காப்பாற்ற காலம்தாழ்த்தாது இலங்கை ஜனநாயாக சக்திகளும் ஈழத் தமிழர் அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் சர்வதேச சூழல் நிறுவனங்களும்  செயல்பட்ட வேண்டும் என கோருகிறேன். கோத்தபாய ராஜபக்ச அரசு மக்கள்விரோத மண் கல் மணல் விதிகளை வாபற்பெறுவதுடன் கல் மண் மணல் மாபியாகளுக்கு பொலிஸ்பாதுகாப்பு கொடுப்பதையும் கைவிடவேண்டும்.  

(நிலமையின் அவசரமும் அவசியமும் கருதி தயவு செய்து இக்கட்டுரையை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிரசுரித்தால் மகிழ்வேன். இக்கட்டுரையை பிரசுரிக்க முன்வருமாறு ஊடகங்களையும் சமூக வலைத் தளங்களையும் கேட்டுக்கொள்கிறேன்

 

 

 

.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.