Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்லை தரும் தொலைபேசி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தொல்லை தரும் தொலைபேசி!


விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் அதிக மனிதர்களுக்கு பயன்தரும் ஒரு விடயம் தொலைபேசியாகும். அதுவும் செல்லிடப் பேசிகள் வந்தபின் மனிதர்களிடையேயான தொடர்பாடல் மிகவும் இலகுவாகி விட்டது. அதுவே மனிதருக்கு சில நேரங்களில் தொல்லைபேசியாகியும் விடுகிறது. 

சிலர் ஒருவருக்கு அழைப்பெடுத்தால் இணைப்பு கிடைக்கும்வரை இடைவெளியின்றி ஒன்றில் அவருடைய போனிலோ அல்லது தன்னுடைய  போனிலோ battery charge இறங்கும்வரை நிறுத்த மாட்டார்கள். தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஒரு ரகம்.

சிலரோ உங்களை மொபைலில் உங்களைப் பிடிக்க முடியவில்லை என்றால் உடனே வீட்டு போனுக்கு எடுப்பார்கள். அதிலும் வெற்றி இல்லையென்றால் உங்கள் துணையின் போனுக்கு (இலக்கம் தெரிந்து இருந்தால்) எடுப்பார்கள். உங்கள் பிள்ளைகளின் போனுக்கு எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இன்னொரு ரகம்.

இன்னும் சிலர் நீங்கள் வேலையிடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டே உங்கள் தனிப்பட்ட மொபைல் போனுக்கு அழைப்பெடுப்பார்கள். நீங்கள் எடுக்காவிட்டாலும் உடன் குறுஞ்செய்தி அனுப்பிவிட வேண்டும். இல்லையென்றால் கோபிப்பவர்களும் இருக்கிறார்கள். எல்லா அலுவலகங்களிலும் தனிப்பட்ட செல்லிட பேசியை பயன்படுத்த அனுமதியில்லை என்பதை கவனத்தில் கொள்வதில்லை.இவர்கள் மூன்றாவது ரகம்.

இன்னும் சிலர் தொலைபேசி அழைப்பெடுக்க நேரகாலம் பார்ப்பதில்லை. இரவு பதினோரு மணிக்கும் அழைப்பெடுப்பவர்கள் இருக்கிறார்கள். அதிகாலை அழைப்பெடுப்பவர்களும் பிறந்தநாளன்று நள்ளிரவில் அழைப்பெடுத்து வாழ்த்துபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இன்னொரு ரகம்.
அலுவலகங்களில் கூட 48 hours policy, 24 hours policy என்று வைத்திருக்கிறார்கள். அதாவது உங்கள் வேலையிடதொலைபேசி இணைப்புக்கு ஒரு அழைப்பு வந்து நீங்கள் பதிலளிக்கவில்லையென்றால் 24 மணிநேரத்துக்குள் அந்த எண்ணுக்கு திருப்பி அழைப்பெடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் சில நட்புகளும் உறவுகளும் இரண்டு மணிநேர அவகாசம் கூடத் தருவதில்லை.

ஒருவர் தொலைபேசியைப் பயன்படுத்துவது அவரின் வசதிக்காவே அன்றி மற்றவர்களின் வசதிக்காக இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அலுவலக கூட்டத்தில் இருக்கும் ஒருவர் பெரும்பாலும் போனை மௌனித்து வைத்து இருப்பார் எனபதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் குறும்செய்தி அனுப்ப முடியாத சூழல் இருக்கும் என்பதயும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டியவை.


1. யாராவது உங்களுக்கு அழைப்பெடுத்தால், உடனடியாக பதிலளிக்க முடியாதவிடத்து, அந்த நாள் முடிவடைவதற்குள் திரும்ப அழைத்து பேசிவிடுங்கள். 
2. இரவில் தவறவிட்ட அழைப்பென்றால் மறுநாள் என்ன விடயம் என்று கேட்டு குறும்செய்தி அனுப்பலாம்.
3. காதைப் பிளக்கும், கர்ணகடூர Ringtone களைப் பயன்படுத்துவதை தவிருங்கள்.
4. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது (பொதுக் கூட்டம், மரணச் சடங்கு போன்றன) தொலைபேசியை Silent அல்லது Vibrate mode இல் வைத்துக் கொள்ளுங்கள்.
5. (உங்கள் பாதுகாப்புக்கு) இரவில் உங்கள் தொலைபேசியை Silent mode இல் வைத்துக் கொள்ளுங்கள்.
6. தொலைபேசியில் கத்திப் பேசுவதைக் தவிருங்கள்.
7. நீங்கள் இருக்கும் இடத்தில் வேறு யாரும் இருந்தால் Speaker Phone இல் போட்டு கதைத்து மற்றவரை தொந்தரவு செய்யாதீர்கள்.
8. மறுபக்கத்தில் உள்ளவருக்கு தெரியாமல் Speaker Phone இல் போட்டு உங்களுடன் இருக்கும் இன்னொருவர் நீங்கள் இருவரும் பேசுவதை கேட்கும்படி செய்யாதீர்கள்.  
9. Whatsapp notifications, Facebook notifications, SMS, MMS போன்றவை இரவில் ஒலியெழுப்பி உங்களை தொல்லை செய்யாது பார்த்துக் கொள்ளுங்கள். 
மொத்தத்தில் தொலைபேசி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை பேசியாகாமல் பார்த்து கொள்வோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2019 at 8:43 AM, கிருபன் said:

தொலைபேசியில் கத்திப் பேசுவதைக் தவிருங்கள்.

அதெப்படி முடியும்? கத்திப் பேசுவதுதானே எங்களது வழக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

அதெப்படி முடியும்? கத்திப் பேசுவதுதானே எங்களது வழக்கம்

எனது முதலாவது தொலைபேசி உரையாடலில் கொழும்பில் இருந்து சுவிஸில் இருக்கும் ஒன்றுவிட்ட அண்ணனுடன் நடந்தது. அவரின் செவிப்பறை வெடிக்குமளவிற்கு கத்தித்தான் பேசியிருந்தேன்!

 

  • கருத்துக்கள உறவுகள்

90 களில் மிக சிறிய அளவினறே மொபைல் பாவித்தார்கள்.  வசதியானவர்கள் மட்டுமே வாங்கி பாவிக்க கூடியதாக இருந்தது. என்னுடய மேலதிகாரி ஒரு மொபைல் வைத்திருந்தார். அது ஒரு செங்கல்லின் அளவு/பாரம் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொபைல் என்றால் கதைப்பது கத்துவது  எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் மூன்று மாதத்துக்கு  போன் நம்பரை மாத்தும் அறிவாளிகளை எப்படி சமாளிப்பது என்று விளங்க முடியலை . என்னைப்பொறுத்தவரை போன் நம்பரை குறைந்தது பத்து வருடத்துக்கு மாத்தாமல் வைத்திருப்பவர்கள் ஓரளவுக்கு  நம்பிக்கையுள்ள புண்ணியவான்கள் போல இருக்கு ஆரம்பத்தில் ஒன்  டு வன்  எனும் பெயரில் வந்த போனை வாங்கியதில் இருந்து ஏழரை  தலையில் ஏறியது இந்த நிமிடம் வரை கழட்டி விட முடியலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.