Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த.

Featured Replies

புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும் என்று அமெரிக்கப் பிரதிநிதி பௌச்சரிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பௌச்சருடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போதும் பேச்சு நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் மகிந்த கூறியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கான கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பிலான அமெரிக்காவின் கவலையை மகிந்தவிடம் பௌச்சர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக எதுவித அச்சுறுத்தலும் இல்லை என்று சிறிலங்காவின் ஆசிரியர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபாலி தென்னக்கோன் சிங்கள வார இதழுக்கு அளித்திருந்த நேர்காணலின் பிரதியை பௌச்சரிடம் கொடுத்த மகிந்த, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால்தான் இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

-Puthinam-

அப்ப சிங்கள இளஞர்களின் மரணம் தவிர்க்க முடியாதது என்று அமெரிக்கருக்கு மகிந்தர் சொல்லிவிட்டார். :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் ஏ கே 47 இருந்த போதே சிங்கள அரசுகளால் வெற்றி கொள்ள முடியவில்லை. இப்போ புலிகளிடம் கடல் படை, விமானப்படை உருவாகிய பின் மகிந்த அவர்களை வெற்றி கொள்ள நினைப்பது வெறும் பகல் கனவே.

தமினத்துக்கு செய்த கொடுமைகளை இனி அறுவடை செய்யிற நாள் இப்பவந்து எம்மை காப்பாத்த வேண்டாம் என சொல்லுறார் மகிந்த என்ன செய்யிறது

நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் இந்்த நாள் எமது அன்னையர் தினம் ஆகையால் எமது தாய் நாட்டுக்கும் விடிவு கிடைக்க வாழ்த்துகின்றேன்!

பிறக்கட்டும் எமது தாய் நாடு தமிழீழமாக!!!!!!!!!!

வெளிநாடுகளால் எந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படாது

வெளிநாடுகளால் எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. வெற்றிபெறும்வரை போராடுவோம் என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது

எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் செயற்பாட்டை நிறுத்தமாட்டோம். உதவிகள் வழங்கப்படும் என்ற தோரணையில் எமது நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முயற்சிக்குமானால் அதனை முற்றாக எதிர்ப்போம்.

எமது நாட்டுக்கு வெளிநாடுகள் பொருளதார ரீதியிலான உதவிகளை வழங்கலாம். ஆனால் எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. அதற்கு ஒருபோதும் அனுமதிவழங்க மாட்டோம். எமது நாட்டுடன் எந்த நாடும் சிறப்பான உறவுகளை பேணலாம். ஆனால் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை எந்த நாட்டுக்கும் இல்லை என்பதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். எமது நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் ஒருபோதும் இந்த நாட்டின் இறைமையை காட்டிக்கொடுக்கமாட்டோம். நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

http://www.virakesari.lk/

ஆமாம் வெளிநாடுகள் எந்த அழுத்தம் குடுத்தாலும் சிங்கள பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் நிச்சயம் நிறுத்தப்பட மாட்டாது.தலைவர் பிரபாகரன் அவர்கள் எந்த அழுத்தத்துக்கும் அப்பாற்பட்டவர் அனுபவமும் வரலாறும் ஒரு தீர்கதரிசன இராஜதந்திரியாக ஒரு இராணுவ மேதையாக பட்டைதீட்டி வைத்திருகின்றது அவரை.16 வயதில் த்ன்னிச்சையாக போராட கிளம்பிய ஒரு விடுதலை வீரனுக்கு முன்னால் தகப்பனின் தயவில் அரசியலுக்கு வந்த மகிந்த ஈடாகுவாரா நினைக்கவே சிரிப்பாக இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.