Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தலுக்குத் தமிழ்த் தரப்புத் தயாரா?

Featured Replies

 

பொதுத்-தேர்தலுக்குத்-தமிழ்த்-தரப்பு.jpg

அடுத்த பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதமளவில் நடக்கக்கூடும். ராஜபக்ஷ அணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி உழைக்கத் தொடங்கி விட்டது.

அப்பொழுதுதான் தமக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று அந்த அணி நம்புகிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுத் தேர்தலை நோக்கி உழைக்கத் தொடங்கி விட்டனவா? ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே பேரவை சுயாதீனக் குழுவைத் தொடக்கி வைத்தது.

அப்படித்தான் இம்முறையும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் அறிவித்த பின்னர்தான் தமிழ்த் தேசியக் கட்சிகள் திடுக்கிட்டு விழித்தெழுமா?

தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது இரண்டு தெரிவுகள் தான் உண்டு. முதலாவது வெகுசனக் கிளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் ஒரு மக்கள் இயக்கம். இரண்டாவது தேர்தல் மைய அரசியல்.

இதில் வெகுசன கிளர்ச்சிகளை முன்னெடுக்க வல்ல மக்கள் அமைப்பு எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. அதை உடனடியாகக் கட்டியெழுப்பவும் முடியாது. எனவே இருப்பதெல்லாம் தேர்தல் மையக் கட்சிகள் தான்.

இப்படிப் பார்த்தால் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உயர்வாக வைத்துக் கொள்வது என்றால் ஆகக்கூடிய பட்ச பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு ஆகக்கூடிய பட்ச பிரதிநிதிகளை தெரிவு செய்வது என்றால் அதற்கு ஆகப்பெரிய ஒரு கூட்டு வேணும். மக்கள் நம்பிக்கையோடு பார்க்கும் ஒரு ஐக்கிய முன்னணி வேண்டும். மக்களை சுண்டி இழுக்கும் வெகுசன கவர்ச்சி மிக்க தலைமைகள் வேண்டும்.

அவ்வாறு ஓர் ஐக்கிய முன்னணியும் ஜனவசியம் மிக்க தலைமைகளும் இருந்தால் ஒரு வாக்களிப்பு அலையை எழுப்பலாம். தமிழ் தேர்தல் பாரம்பரியத்தை பொறுத்தவரை வாக்களிப்பு அலை எனப்படுவது ஒருவிதத்தில் இன அலைதான். அப்படியோர் இன அலையை உற்பத்தி செய்வதற்கு ஆகப் பெரிய ஜனக் கவர்ச்சி மிக்க கூட்டு ஒன்று தேவை.

அப்படி ஒர் இன அலை தோற்றுவிக்கப்பட்டால் வாக்களிப்பு விகிதம் எண்பதைத் தாண்டும். அப்படி 80 வீதத்திற்கு மேலான வாக்களிப்பு அலையொன்று தோற்றுவிக்கப்பட்டால் தமிழ் பிரதிநிதித்துவத்தின் தொகை அதிகரிக்கும். போனஸ் ஆசனங்களும் தமிழ் தரப்புக்கு கிடைக்கும். அப்போது தமிழ் பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படக் கூடிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை இருபதைத் தாண்டும்.

அவ்வாறு தமிழ் மக்கள் கொத்தாகத் திரண்டு வாக்களித்தால் தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் வெல்வது கடினம் ஆகிவிடும். இதற்குப் ஆகபிந்திய ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம்.

நடந்த நடந்து முடிந்த அரசுத் தலைவருக்கான தேர்தலில் போது மிக உயர்வான விகிதத்தில் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் தான் வாக்களிப்பு விகிதம் குறைவு. அதற்கு பிரதான காரணம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் வாக்களிப்பை புறக்கணித்தமைதான்.

வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அரச அலுவலர்கள் தரும் நம்பிக்கையான தகவல்களின்படி நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் கிட்டத்தட்ட 90 வீதத்திற்கும் குறையாத வாக்குச் சீட்டுகளில் தகாத வார்த்தைகளாலும் தூஷணத்தாலும் வேட்பாளர்களைத் திட்டி நிராகரிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தனவாம்.

அதாவது வாக்குச் சீட்டுகளை செல்லுபடியற்றதாக்கிய வாக்காளர்கள் எந்த ஒரு வேட்பாளரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவில் இருப்பதைப் போல ஒரு நோட்டா தெரிவை கேட்கிறார்கள் என்று அர்த்தம்.

எனவே இம்முறை தன்னியல்பாக எழுந்த வாக்களிப்பு அலை எனப்படுவது முழுமையானது அல்ல. அதில் பகிஸ்கரிப்பு சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும் அந்த வாக்களிப்பு அலையானது கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு வாக்கு திரட்சியைக் காட்டுகிறது.

இந்த இயல்பான வாக்களிப்பு அலைக்குள் தமிழ் பகுதிகளில் தங்களுக்கென்று தனிப்பட்ட வாக்கு வங்கியை கொண்டிருந்த தென்னிலங்கைக் கட்சிகளின் ஆதரவாளர்களான அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கி மேற்படி வாக்களிப்பு அலைக்குள் கரைந்து போய்விட்டது.

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் வவுனியாவில் மஸ்தான் கிழக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் போன்ற அரசியல் வாதிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கிகள் இந்த வாக்களிப்பு அலைக்குள் அடிபட்டு போய் விட்டன.

இது ஓர் ஆகப் பிந்திய எடுத்துக் காட்டு. அதாவது தேர்தல்களில் ஒருவித இன அலையை தோற்றுவித்தால் தென்னிலங்கைக் கட்சிகளின் வாக்குத் தளம் அதில் அமிழ்ந்து போய் விடும்.

எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இருந்து தமிழ்க் கட்சிகள் கற்றுக்கொள்ளுமாக இருந்தால் பின்வரும் முடிவுக்கு வரலாம். அதிகளவு பேரத்தை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு அதிகரித்த பிரதிநிதித்துவம் தேவை.

அதிகரித்த பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு ஆகப் பெரிய ஐக்கிய முன்னணியும் ஜனவசியம் மிக்க தலைமைகளும் தேவை. ஆனால் இப்பொழுது தமிழ் அரங்கில் நிலைமை எவ்வாறு உள்ளது?

இப்பொழுது தமிழ் அரசியல் பரப்பில் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவையாவன கூட்டமைப்பு, விக்னேஸ்வரனின் அணி, கஜேந்திரகுமாரின் அணி.

இம்மூன்றையும் ஒன்றாக திரட்ட முடியாது. விக்னேஷ்வரன் கஜேந்திரகுமார் சுரேஸ் ஐங்கரநேசன் அனந்தி சிவாஜிலிங்கம் சிறீகாந்தா ஆகியோர் ஒரு கூட்டுக்குள் இணைவார்களாக இருந்தால் அது ஒரு பெரிய கூட்டாக வரும்.

கவர்ச்சியான கூட்டாகவும் மேலெழும். அதற்கு கூட்டமைப்பு பயப்படும். அப்படி ஒரு கூட்டு எழுச்சி பெறுமாக இருந்தால் அது கூட்டமைப்பை உடைக்க கூடியது.

அப்படி ஒரு கூட்டு இலகுவாக ஏற்படாது என்று சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கு தெரியும். கஜேந்திரகுமாரை விக்னேஸ்வரனை நோக்கி கொண்டு வருவதில் அதிகம் சவால்கள் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு ஐக்கியப்படுத்தும் முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் வெற்றி பெறவில்லை. இனிமேலும் அப்படியோர் ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்ற கற்பனையோடு காத்திருப்பதை விடவும் யதார்த்தமான ஐக்கியத்தைப் பற்றிச் சிந்திப்பதே இப்போதைக்கு பயன் பொருத்தமானதாக இருக்கக் கூடும்.

அதில் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் சுரேஷ் ஐங்கரநேசன் சிவாஜி சிறீகாந்தா அனந்தி போன்றோரை இணைத்து ஒரு கூட்டை உருவாக்க வேண்டியிருக்கலாம்.

ஒரு மாற்று அணிக்கு தாம் அஞ்சவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். ஆனால் எதிரணி பலமடையாக் கூடாது என்ற பதட்டம் அவர்களிடம் உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகால கூட்டமைப்பின் அரசியலானது அதன் வாக்கு வங்கியைத் தேயச் செய்திருக்கிறது என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் தமது வாக்கு வங்கியின் 35 விகிதத்தை இழந்தார்கள்.

எனவே தமது வாக்கு வங்கியை ஒன்று திரட்ட வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு உண்டு. அதற்கு ஓர் பொய்யான கூட்டு அவர்களுக்கு தேவை. இது விடயத்தில் அவர்களுக்கிருக்கும் ஒரே ஆறுதலான விஷயம் கஜேந்திரகுமார் விக்னேஸ்வரனை நோக்கி வரமாட்டார் என்ற நம்பிக்கைதான்.

ஜனாதிபதித் தேர்தல் முடித்தபின் சம்பந்தர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை சந்தித்த போது தூதுவர் அவரிடம் பின்வரும் தொனிப்படக் கேட்டிருக்கிறார். சஜித்தை ஆதரிப்பதாக நீங்கள் அறிவிக்காமல் விட்டிருந்தால் அவர் தோற்கும் வாய்ப்புகள் குறைந்திருக்குமா? என்று. அதற்கு சம்பந்தர் கூறினாராம்.

பொதுத் தமிழ் வேட்ப்பாளர், பகிஷ்கரிப்பு ஆகிய இரண்டு தரப்புகளையும் தோற்கடிப்பதற்காகவே அப்படிக் கூறவேண்டியிருந்தது என்ற தொனிப்பட. அதாவது தாம் அப்படிக் கூறாவிடால் பகிஷ்கரிப்புக் கோரிக்கையும் தமிழ் வேட்ப்பாளரும் அதிகரித்த ஆதரவைப் பெற்றுவிடக்கூடும் என்ற பதட்டம் கூட்டமைப்பிடம் இருந்திருக்கிறது.

இப்பொழுது அடுத்த தேர்தலைக் குறித்தும் அவர்களிடம் பதட்டம் உண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு கூட்டமைப்பு உரிமை கோர முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. அதனால் தான் சுமந்திரன் ஐக்கியத்தைப் பற்றி கதைக்கிறார்.

இப்படிச் சிந்தித்தால் வர இருக்கும் தேர்தல்களில் மூன்று அணிகள் அரங்கில் நிற்கும். இம்மூன்று அணிகளும் வாக்குகளைப் பங்கிடும். இது இறுதியிலும் இறுதியாக தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கே வாய்ப்பாக அமையும்.

குறிப்பாக தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் இவ்வாறு வாக்குகள் சிதறுமாக இருந்தால் அது முழுக்க முழுக்க தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும்.

கிழக்கிலும் அது முஸ்லிம் கட்சிகள் அதிக பேரத்தை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். ஆக மொத்தத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் சிதறும் தமிழ்ப் பேரம் குறையும்.

http://athavannews.com/பொதுத்-தேர்தலுக்குத்-தமி/

அவை இரவுபகலா உழைக்கிறது தேர்தல்ல வாக்குகளை கப்ளீகாரம் செய்யத் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.