Jump to content

ஏனோ ராதா, இந்தப் பொறாமை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ ராதா, இந்தப் பொறாமை?

twomen.jpg?fit=600%2C313&ssl=1

 

தலைப்பு ஒரு பழைய திரைப்பாடலை நினைவூட்டுமென்று நம்புகிறேன். அதில் பழைய தமிழ்ப் பட மரபுப்படி பெண்களே பொறாமை பிடித்தவர்கள் என்பது போலப் பாடல் அமைகிறது. இதே மரபு அன்றைய நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் எல்லாம் தொடர்ந்தது என்பது 1930களிலிருந்து தமிழ் பொது ஜன ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்குத் தெரியும். இன்றுமே தமிழ் தொலைக்காட்சிகளின் அவல நாடகத் தொடர்களில் இந்த மரபின் வேறோர் உரு தொடர்வதையும் கவனித்திருப்பீர்கள். 

இதற்கு மாறாக பொது ஊடகங்களிலேயே தொடர்ந்து வரும் அசல் வாழ்க்கைச் செய்திகளில் பார்த்தால், ஆண்கள் தம் காதல் மறுக்கப்பட்டதால், அல்லது தம்மை மணக்க மறுத்ததால் என்று ஏதோ ஓர் அற்பக் காரணத்தை முன்வைத்து இளம் பெண்களைக் கொல்வதும், எரிப்பதும், முகத்தில் அமிலம் வீசுவதும் என்று பயங்கரர்களாக மாறி வருவதைப் படிப்போம், பார்ப்போம், கவனிப்போம். ஆனால், தொலைக்காட்சிகளில் இந்தப் பயங்கரங்கள், செய்திக் காட்சிகளில் பரபரப்புச் செய்திகளாக ஒளிபரப்பப்படுகின்றனவே தவிர, அதே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் அவலநாடகங்களுக்கும் மட்டும் போய்ச் சேரவே இல்லை. அவை தொடர்ந்து பெண்களை மட்டுமே பொறாமையின் உருக்களாகச் சித்திரித்து மகிழ்கின்றன. 

ஆனால், ஆண்களும் பொறாமை பீடித்தவர்களாக இருப்பதில் எந்த அதிசயமும் இல்லை. பாலுறவுகளில் குறிப்பாக பொறாமை என்பது உலகளாவிய ஓர் விஷயமே. உலகில் பன்னாடுகளிலும் பெண்களின் மீது செலுத்தப்படும் வன்முறைகளுக்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களிடம் எழும் பொறாமையும் ஒரு காரணி. 

ஆனால், இதைப் பற்றிய ஓர் அறிவியல் ஆய்வுத் தொகுப்பு என்ன சொல்கிறது என்பதைக் கொடுக்கும் கட்டுரை இங்கே தொடர்கிறது.

ஸ்டீவ் ஸ்டூவர்ட் – விலியம்ஸ் என்பார் எழுதிய ஒரு நூலிலிருந்து சில பகுதிகளை இங்கே கொடுக்கிறேன். ***

உங்கள் நெருங்கிய தோழி நிறுத்த முடியாத அழுகையோடு உங்களிடம் வருகிறார். ’ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?’ என்று கேட்பீர்கள் அல்லவா? ’நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை;இப்போதுதான் தெரிந்தது; அலெக்ஸ் எனக்குத் துரோகம் செய்கிறார், ’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் உங்கள் தோழி. 

நீங்கள் என்ன செய்வீர்கள்? பொதுவாக, நீங்கள் உங்கள் பதிலை இப்படிச் சொல்லாமல் இருக்கலாம்,  ’இது வருத்தமளிக்கிறது.  ஏன் இப்படி. . . ?’ ஆம்,  பொறாமை. . நாம் அதை அனுபவபூர்வமாக உணர்வதற்கு முன்பே,  உள்ளுணர்வாலேயே அறிவோம் – கணவன்,  மனைவி,  காதலன்,  காதலி இவர்களிடையே நடக்கும் துரோகம் அதிக உள உளைச்சலைத் தரும் என்பதுதான் அது. 

மனித இயல்புகளைப் பற்றி அதிகம் தெரிந்திராத வேற்றுக் கிரக விஞ்ஞானிக்குப் பொறாமை என்பது புதிராக இருக்கலாம்.  நம் நண்பர்களுக்கு  வேறு நண்பர்கள் இருந்தால் நாம் பொறாமைப் படுவதில்லை. ஆனால்,  நம் இணைக்கு வேறு இணைகள் இருந்தால் நாம் கவலைப்படுகிறோம்.  நம் இணை ஒரு நல்ல சாப்பாட்டை நாம் இல்லாமலேயே உண்டார் என்றால் நாம் பொறாமைப்பட மாட்டோம்; ஆனால்,  அவர் மற்றவருடன் உறவு கொண்டார் என்பதில் நமக்குச் சீற்றம் வருகிறது.  நாம் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்றால் அனைத்தும் எளிதாகிவிடும். ஆனால், நம்மால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லையே?

நம்முடைய இந்தச் சிந்தை குழம்பிய செயல்பாடுகள் அந்த வேற்றுக்கிரக விஞ்ஞானிக்கு, இந்தப் பொறாமை எங்கிருந்து வருகிறது என்ற வினாவை ஏற்படுத்துகிறது. பசியும்,  பயமும் போல இது மனிதரிடத்தில் உள்ளார்ந்து இருக்கிறதா? அல்லது ஏழு நாள்கள் கொண்ட வாரம் போல,  பணம் என்பதைப் போல பண்பாட்டின் கண்டுபிடிப்பா?

நம் அறிவியலாளர்களும் இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள்-அதில் தற்சமயம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

பொறாமை என்பது ஒரு சமூகக் கட்டமைப்பா? 

விவாதிப்பவர்களில் ஒரு சாரார் அதைப் பண்பாட்டின் கண்டுபிடிப்பு என்றே வாதிடுகின்றனர். இப்படிப் பேசுபவர்கள் ‘ஒரு வேற்றுக் கிரக விஞ்ஞானிக்கு பொறாமை என்பது எப்படிப் பொருள்படுமோ அப்படித்தான்  பல்வேறு கலாசாரங்களில் இது பொருள்படும். எடுத்துக்காட்டாக, இனூயிட் குழுக்களில் மலைப் பழங்குடியினர் தன் மனைவியரில் ஒருவரை முக்கிய விருந்தினருக்கு ஒர் இரவு வழங்கும் வழக்கம் இருந்துள்ளது. பொறாமை என்பது மேற்கத்திய நரம்புக் கோளாறின் சிந்தனை,’ என்கிறார்கள். 

பார்க்கப்போனால்,  மேற்கிலும் இதை ஏற்றுக்கொள்ளும் வகையினர் உண்டு.  நடிகை ஷெர்லி மக்லெய்ன், ‘எனக்கு இணை சார்ந்த பொறாமை கிடையாது’ என்று சொன்னார்.

ஆனாலும், பொறாமை அணுக்களில் உள்ளது என்று சொல்லும் மற்ற சாராருக்கு இதை ஒப்புக்கொள்வது சுலபமில்லை. அப்படி உணர்வது நம் இயற்கையான செயல் என்பது இவர்களின் வாதம். 

இவர்கள் சொல்வது: கல்வியாலும்,  கலாசாரத்தினாலும் பொறாமையின் ஒரு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,  பண்பாடு,  ஒன்றுமில்லாததிலிருந்தா பொறாமையைக் கொண்டு வந்திருக்கும்?நம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமா?அப்படிப்பட்ட பண்பாடுகள் இருக்கின்றனவா? உலகெங்கும் எல்லாப் பண்பாடுகளிலும் இணை வேறொருவரோடு கலவி செய்வது குறைந்தபட்சம் மனத் துன்பத்தைக் கொணராது இல்லை என்பது, இது பண்பாடுகளைத் தாண்டிய இயற்கை நியதி என்று காட்டவில்லையா? 

பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசும் உளவியலாளர்கள் மேற்குறிப்பிட்ட அத்தனை கேள்விகளுக்கும் இல்லையெனப் பதிலளிக்கிறார்கள். பொறாமை என்பது நம் இயற்கைக் குணம்,  உலக மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. இதை ஒத்துக்கொள்ள மறுப்பவர்களின் கூற்றினை அருகி ஆராய்ந்தால் அதன் போதாமை புரிந்துவிடும் என்று சொல்கிறார்கள் இவர்கள். 

இனூயிட்டின் மனைவியைப் பகிர்தலையே எடுத்துக்கொள்ளுங்கள்- மனிதர்கள் இணையை உடமையெனப் பார்க்கும் கூற்றிற்கு மாறுபட்ட உதாரணமாக இதைக் குறிப்பிடுவதை  முதல் பார்வை சொன்னாலும்,  மனைவியைப் பகிர்தலை ஒரு பெரிய விஷயமாக இனூயிட் கருதவில்லை என்பதை நாம் அனுமானித்துக் கொள்கிறோம். இந்த அனுமானம் அவர்களின் வழக்கத்திற்கு நியாயம் செய்யவில்லை;அது ஒரு மிகப் பெரிய தாராளச் சிந்தனையின் அடையாளமே! இனூயிட்களும்,  மற்ற மனிதர்களைப் போலவே தங்கள் காதலிகளையும்,  மனைவியரையும் தங்கள் உடமையெனக் கருதியவர்கள்தான். இது நமக்கு எப்படித் தெரியும்? மனைவியரை உடமை என்று கருதாத பட்சத்தில் அவர்களை எப்படி அறிமுகமில்லாத ஒருவரோடு கலவிக்குப் போ என்று சொல்ல முடியும்? மனைவியருக்குச் சம உரிமை இருக்கிற சமூகத்தில் அவர்களை எந்த ஆணும் பிறரிடம் கலவிக்கு ‘அனுப்ப’ முடியாது. அவர்களே தம் விருப்பப்படி சென்றால் அது பண்பாட்டில் மாறுபாடு உள்ள நிலை என்றாகும். 

உலகில் பெரும்பாலான சமூகங்களில், ஆண்கள் தங்கள் இணையின் மீது செலுத்திய கலவி சம்பந்தப்பட்ட வன்முறைகள்அவர்களிடம் நிலவிய பொறாமையால் விளைந்ததே. பொறாமையற்ற மற்ற சமூகங்களிலும் நிகழ்ந்தது அதுவே. 

இவைகளில் மாற்றுகள் உண்டு. ஆனால்,  அவை எண்ணிக்கையில் குறைந்தவை,  சிதறி இருப்பவை. அதனால்தான் ஷெர்லியின் கூற்றான ‘எனக்கு இணைப் பொறாமை இல்லை’ என்பது  உலக அளவில் சலனத்தை ஏற்படுத்தியது. பல மனிதர்கள் பொறாமைப்படுகிறார்கள். நம்பினாலும்,  மறுத்தாலும்,  அன்புடன் தொடர்புடையது பொறாமை. அழைக்கப்படாத விருந்தினராக அன்புடன் தோழமை பூண்டு அது நிரந்தரமாக இருக்கையில் நாம் அதை எவ்வளவு முயன்றாலும் விலக்கவோ,  விரட்டவோ முடிவதில்லை.  

இப்படித்தான் பிறந்திருக்கிறோம்

இது உண்மையா என்ன?நம்மை அலைக்கழிக்கும் இந்த உணர்வை இயற்கை நமக்கு கொடுத்ததேன்?மன உளவியலாளர்கள் சொல்வது என்ன? ’பொறாமை என்பது தன் இணயைப் பாதுகாப்பதற்கு  என்று ஏற்பட்டுள்ளது. அது துரோகத்திற்கு ஒரு தீர்வாகும்.’

துரோகம் என்பது நம் இனத்திற்கு மட்டுமேயான பொதுவான ஒன்றில்லை- அது அபூர்வமும் இல்லை. மனிதர்களுக்கான குணாதியசங்கள்,  பல விலங்குகளுக்கும் பொதுவானவைதான். ’ஹார்ட் பர்ன்’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி-மெரில் ஸ்டீரிப் ஏற்று நடித்த கதாபாத்திரம் தன் தந்தையிடம் தன் புதுக் கணவன் தனக்கு துரோகம் செய்வதாகச் சொல்வார்;இரக்கமே இல்லாமல் அவர் தந்தை சொல்வார் ’நீ ஒரு தார மண உறவை வேண்டினால் அன்னத்தைக் கல்யாணம் செய்திருக்க வேண்டும்’. அதே நேரம்-விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதையும் பார்ப்போம்- அன்னமோ- இணைபிரியா பிற உயிரினங்களோ,  மனிதர்களில் சிலரைப் போல,  தன் இணையைத்தவிர மற்றவற்றோடு எப்போதாவது உறவு கொள்வதை அறிந்தார்கள்; இணையை விடுத்து மற்றொன்றுடன் உறவில் ஈடுபடுவது இணையின்  வெற்றி வளர்ச்சிக்கு மிகப் பெரிய பயமுறுத்தலைக் கொணர்கிறது என்றும் கண்டறிந்தார்கள். 

இதற்கான காரணங்கள் ஆணுக்கும்,  பெண்ணுக்கும் வேறானவை. ஆணுக்கு அவன் தந்தைமை மிக முக்கியமாக இருக்கிறது. உட்கரு உயிரினங்களில் பெண்ணிற்கு தன் கரு தன்னுடையது என்ற உறுதி உண்டு;ஆணைவிட அதைப்பேணும் கருத்தும் அவளுடையதே. தன் உடலிலிருந்து வெளிவரும் குழந்தை தன்னுடையதுதான் என்பதற்கு வேறென்ன உறுதிப்பாடு வேண்டும்? நான் அறிந்த வரை உலக சரித்திரத்தில் பிள்ளை பெற்ற பெண் ’ஒரு நிமிஷம்;இது என்னுடைய பிள்ளையா?என் உடலிலிருந்து வந்ததா? மற்றொருத்தியின் குழந்தை இல்லையே?’ என்று சிந்திப்பதோ கேட்பதோ நடக்கவில்லை. மாறாக,  ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆண் உறவு கொண்ட பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளை அவருடையது எனச் சொல்வது அத்தனை நம்பத்தகுந்த சான்றில்லை. தன் இணை பெறும் குழந்தையைப் பராமரிக்கும் ஆண் அது தன் வம்சம் என எண்ணித்தான் அதைச் செய்கிறான்;ஆனாலும், அது அவனுடையதாக இல்லாமலிருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. 

அதனால் இப்படி நடந்திருக்கக்கூடும்;பரிணாம வளர்ச்சியில் தன் வாரிசில் தனிக் கவனத்தைச் செலுத்தும் குணம் மனிதர்களுக்கு மேம்பட்டு வந்திருக்கும்; தன் பக்கத்து வீட்டுக்காரனின் வாரிசை விட அவனுக்கு தன் வாரிசு நெருக்கமானது. அந்தக் குணம் பொறாமை தான்.  அது தன் இணையின் மேல் ஒரு கண் வைத்திருக்கச் செய்யும்;சவாலான அடுத்த வீட்டுக்காரன் மீதும். தன் இணை, பக்கத்து வீட்டுக்காரன் ஆகிய இருவரையும் முடிந்தவரை இணையாகாமல் தடுப்பதற்கு இக்குணம் மனிதனிடம் வந்துள்ளது. 

தந்தைமையைப் பற்றிய தன் கவலைகளுக்காக ஆண்  நிஜமாக பொறாமையைப் பற்றி எண்ண வேண்டியதில்லை. பொறாமைப் படுகிறேன் என உணர்தலே போதுமானது.  ‘நான் ஞானமுள்ளவன்; என் இணை மற்ற ஆணுடன் உறவில் இருந்தால் பொருட்படுத்தாதவன்,’ என்ற சிந்தனையைக் கொண்ட ஆணை விட, தன் இணையைக் காவலில் வைக்கும் ஆணின் வாரிசுகளே அதிகம் என்பதால், அந்த ஆண்களின் பொறாமைக் குணமே சமூகத்தில் அதிக செல்வாக்கைப் பெறத் தேவையான எண்ணிக்கையைப் பெற்று விடுகிறது. 

ஆணிற்கு மட்டுந்தான் பொறாமை ஏற்படுகிறதா?பெண்ணிற்கு இல்லையா?அதற்கான தர்க்க விளக்கங்கள் வேறுவகை. பரிணாம வளர்ச்சியியல் பெற்றோரின் அரவணைப்பைப் பற்றிப் பேசுகிறது. நம் உறவில் குழந்தைகள் பிறக்கிறார்கள்-அவர்களை வளர்ப்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு. ஒரு இனிய வலுவான உறவில் இருக்கும் பெண் பெறும் பிள்ளைகள் நன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் அத்தகைய உறவு கிட்டாத பெண்ணிற்கு இல்லையல்லவா?எனவே மற்றொரு பெண்ணிடம் உறவில்லாத ஆணைத் தெரிவு செய்வது ஒரு பெண்ணுக்குத் தேவையாகிறது; கர்ப்பகாலத்திலும், குழந்தை வளர்ப்பு நிகழும் துவக்க வருடங்களிலும் பெண்ணுக்குத் தன்னோடு எப்போதும் நம்பக் கூடிய வகையில் துணையாக, போஷிப்பவனாக இருக்கும் ஆண் தேவையாகிறது. இதற்கும் பொறாமைதான் உதவுகிறது!

பரிணாமத்தில் இது ஒரு கதை என நினைத்தால் பொறாமையுள்ள தன் இணை பிரியா மற்ற உயிரினங்களைப் பாருங்கள். ’கிப்பன்’களில் தன் ஆண் எதிரியை ஆணும், பெண் எதிரியைப்பெண்ணும் விரட்டியடிப்பதைப் பார்ப்பீர்கள். உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலும் நம் இனத்தில் பொறாமை இருப்பதை  அறிகிறோம்;அதே நேரம் பரிணாம வளர்ச்சி பொறாமை பற்றிச் சொல்லும் கோட்பாடும் சிந்திக்கத்தக்கதே.

10 சதவிகித மாயை

ஒரு தர்மசங்கடமான கேள்வியை இந்த விவாதம் எழுப்புகிறது. துரோகம் நம் இனத்தில் பொதுவாக எப்படி இருக்கிறது?தந்தைமையற்ற தரவுகளைப் பார்ப்பது ஒரு வழி; பிறப்புச் சான்றிதழ்களில் காணப்படும் ஆண் அந்தக் குழந்தையின் ‘பயாலாஜிகல்’ தந்தையா என்பதைக் காட்டும் தரவுகள் இதில் எடுத்துக்கொள்ளப்படலாம். 

அதிகமாக அறியப்பட்ட அனுமானங்கள் இதை 10% என்கின்றன;அதிகபட்சமாக 30% வரை சொல்கிறார்கள். அதிக நபர்கள் இந்தப் புள்ளி விவரத்தில் ஆச்சர்யம் அடைகிறார்கள்-அது வியப்பிற்குரியஒன்றுதான். அனேகமாக,  இந்த அனுமானங்களை உச்ச அனுமானங்கள் எனச் சொல்லலாம். இந்த விவரங்கள் தந்தைமையற்ற நிலை பற்றிய ஆய்வுகளிலிருந்து- பொது மக்கள் தொகையைவிட கணிசமான மாதிரித் தரவுகள்- பெறப்படுகின்றன. தொழில் முறையில் தந்தைமைத் தகவுகளைப்  பரிசோனைகள் மூலம்  நடத்தும் நிறுவனங்களிடமிருந்து இவை பெறப்படுகின்றன. இதில் சிக்கல் என்னவென்றால் தங்கள் மகவெனக் கொள்ளப்படும் குழந்தைகள் உண்மையில் தன்னுடையவைதானா என்ற சந்தேகத்தில் வரும் ஆண்கள் இத்தகைய ஆய்வகங்களை நாடுவதால் இந்த நம்பிக்கைத் துரோக எண்ணிக்கையின் நம்பகத் தன்மை சற்று கேள்விக்குள்ளாகிறது. 

இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தந்தைமையற்ற விகிதாசாரம் எதிர்பார்ப்பதைவிடக் குறைவு என வாதாடலாம். தங்கள் வாரிசு தங்களுடையதில்லை என வலுவாக நம்பும் ஆண்களில் மூன்றில் ஒரு பங்கினரே அதிக பட்ச எண்ணிக்கையில் ஏற்க முடிந்தவர். 

சரியான தரவுகளின் அடிப்படையில் தந்தைமையற்றவர் எனக் கருதப்படுவோர் 1% -அது 10% முதல் 30% வரை இல்லை.  எப்படி அன்னங்களைப் போல் நாம் தேவதைகள் இல்லையோ அப்படியேதான் நம்பிக்கைத் துரோகிகளுமில்லை. 

துரோகம் அரிதென்றால் நம்மிடம் பொறாமை ஏன்?தேவையைவிட அதிகமாக நாம் சந்தேகப்படுவதும், பொறாமை கொள்வதுமா?ஆம் என்பதே பதில். இதில் உறுத்தல் என்னவென்றால் அளவிற்கு மீறிய பொறாமை நம்மை நம் இணையைக் காபந்து செய்யத் தூண்டுகிறது;இணை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்கிறது. பொறாமை இந்த விதத்தில் உதவுகிறது!

தன் இணை துரோகம் செய்யக்கூடாதென்ற இந்த சிறு கிறுக்குத்தனம் ஒரு வகையில் பின் முன்னாகச் செயல்பட்டு இனத்தைக் காக்கிறது. நம் இனத்தில் துரோகம் என்பது அரிதானது என்பதற்காக பொறாமை தேவையற்றது எனச் சொல்ல இயலாது. பொறாமை என்னும் அரக்க குணம் செய்யும் அலைக்கழிப்புக்கள் மனிதரிடம் இயற்கையாக உள்ளதால் துரோகம் அரிதாக இருக்கிறது. 

Parts of this article were excerpted,  with changes,  from the book The Ape That Understood the Universe: How the Mind and Culture Evolve by Steve Stewart-Williams (Cambridge University Press)06-12-2019

https://www. sciencefocus. com/the-human-body/where-does-jealousy-come-from/?utm_content=buffer88128&utm_medium=social&utm_source=twitter. com&utm_campaign=buffer

SCIENCE FOCUS BBC

https://solvanam.com/2019/12/29/ஏனோ-ராதா-இந்தப்-பொறாமை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.