Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா!

Featured Replies

கவிதை பிறந்த கதை :

மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்)

மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த

மங்கை மலந்திருக்கின்றாள்

மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என்

மனங்கவர் இளமை

உற்றவள் பால் தூது ஏகாயோ?

மல்லிகை சூடி மனதில் என்னை

நிறுத்தக் கூறாயோ?

சந்தனத்தின் சாயல் எடுத்து

வெண்மதியில் முகமெடுத்து

ஆனந்தத்தின் சுளையெடுத்து

அழகூற இலங்கும் மங்கையவள் என்

அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும்

காதல் கொண்ட ஏழை நெஞ்சம்

பாவையவள் படுத்துறங்கும்

மஞ்சமாக வேண்டும்

காதல் கொண்டு அர்ச்சிக்க

கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும்

காளை எந்தன் நெஞ்சம்

களிப்பில் ஊர்ந்து

இன்பம் காணவேண்டும்

மணிப்புறாவே என் எண்ணப்புறா

அப்பெண்புறா பால் செல்லத் துடிக்கிறது

வழி ஒன்று கண்டு கூறமாட்டாயா?

Edited by kavi_ruban

மச்சாளை நினைத்து எழுதிய கவிதை நல்லா இருக்கு

10-12 வயது சிறுமியை நினைத்து இப்படியா கவிதை எழுதுவது.

Edited by லிசான்

  • தொடங்கியவர்

10-12 வயது சிறுமியை நினைத்து இப்படியா கவிதை எழுதுவது.

கவிதை எழுதியது 16 வயதுப் பையன் அல்லவா... :huh:

கவிதை எழுதியது 16 வயதுப் பையன் அல்லவா... :huh:

அப்ப பிஞ்சிலே முத்திவிட்டார் போலும் :lol:

Edited by லிசான்

  • தொடங்கியவர்

செய்கை ரீதியாக பிஞ்சிலே முத்தாமல், கருத்து ரீதியில் முத்துவது ஒன்றும் தப்பில்லை லிசான். நீங்கள் எழுதிய விமர்சனம் என் கவிதைக்கல்ல என்று புரிகிறது.

நீங்கள் ,

மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்)

மேற்சொன்ன செய்திக்கு தான் உங்கள் விமர்சனம் வந்திருக்கிறது. கவிதையின் களம் தெரிந்தால் ரசனைக்கு நல்லா இருக்குமென்பதாலே மேற்சொன்ன செய்தியை இடவேண்டி வந்தது. யாரையும் இங்க ஒப்பிட வேண்டிய அவசியம் கூட இல்லை... களத்தில் அவர்கள் அடிக்கடி வந்து கருத்துச் சொல்வதால் பழுத்துவிட்டார்கள் என்று சொல்வது பொருந்தாது... கருத்து ரீதியில் செறிவான அறிவும் வார்த்தையாடலும் இருப்பது விரும்பத் தக்கது தானே லிசான்...

செய்கை ரீதியாக பிஞ்சிலே முத்தாமல், கருத்து ரீதியில் முத்துவது ஒன்றும் தப்பில்லை லிசான். நீங்கள் எழுதிய விமர்சனம் என் கவிதைக்கல்ல என்று புரிகிறது.

நீங்கள் ,

மேற்சொன்ன செய்திக்கு தான் உங்கள் விமர்சனம் வந்திருக்கிறது. கவிதையின் களம் தெரிந்தால் ரசனைக்கு நல்லா இருக்குமென்பதாலே மேற்சொன்ன செய்தியை இடவேண்டி வந்தது. யாரையும் இங்க ஒப்பிட வேண்டிய அவசியம் கூட இல்லை... களத்தில் அவர்கள் அடிக்கடி வந்து கருத்துச் சொல்வதால் பழுத்துவிட்டார்கள் என்று சொல்வது பொருந்தாது... கருத்து ரீதியில் செறிவான அறிவும் வார்த்தையாடலும் இருப்பது விரும்பத் தக்கது தானே லிசான்...

உங்கள் கருத்திற்கு மதிப்பளித்து எனது முன்னைய பதிவை மாற்றிவிட்டேன். நான் குறை கூறியது உங்களையல்ல.

  • தொடங்கியவர்

உங்கள் புரிதலுக்கு நன்றி லிசான்... தொடர்ந்து வாருங்கள்...

நன்றிகள்

கவி _ ரூபன்..

உண்மையான கவி யார் என்றால்..எல்லா விதமான விடயங்களையும் பற்றி கவி புரிபவராம்!

அது நிஜமோ..கற்பனையோ..சம்பவமோ..எதுவ

  • தொடங்கியவர்

பிரியசகி,

முதலில் நன்றிகள்...

நீங்க சொல்வதை உண்மை என்று ஏற்றுக் கொள்ளலாம் என்று யோசித்தாலும் முடியவில்லை. (வேற ஒண்ணுமில்லைங்க... அவையடக்கமாம்.... அட பாவி.... இல்லைங்க அப்பாவி... :huh: )

Edited by kavi_ruban

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.