Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதத் தாயின் கால்விரல் மெட்டியான கச்சதீவை இலங்கை கைப்பற்றியபோது கண்டுகொள்ளாமல் விட்டது முதற்கோணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரதத் தாயின் கால்விரல் மெட்டியான கச்சதீவை இலங்கை கைப்பற்றியபோது கண்டுகொள்ளாமல் விட்டது முதற்கோணல்

[15 - May - 2007]

காஷ்மீர் பாரதத் தாயின் முகமென்றால், கச்சதீவு கால்விரல் மெட்டி எனலாம். கச்சதீவின் நீளம் ஒரு மைல், அகலம் அரை மைல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. கச்சதீவில் `டார்குயின்' எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே, பச்சைத் தீவு நாளடைவில் கச்சதீவு ஆயிற்று. 1882 ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சதீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகை நிலமாக கச்சதீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி.பியரிஸ், `விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சதீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்' என உறுதிப்படுத்தினார். ஆனாலும், இலங்கை அரசு 1955, 56 இல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சதீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை. இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை. அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன் என பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சதீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத கட்சி இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர், 1974 ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா.அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றபோது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சதீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சதீவை இலங்கைக்கு வழங்க முன்வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளை விதித்தது. அதில் ஐந்தாவது விதி: "இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சதீவுக்கு இது வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சதீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதியோ பெறவேண்டியதில்லை".

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து இராமேஸ்வரம் மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சதீவை வழங்கியதால் இராமேஸ்வர மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல. மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான `டின்பிகா' எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சதீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும்.

மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அத்தீவை இராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. `டின்பிகா' ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சதீவில் கையாளாதது ஏன்?

கச்சதீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சதீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால் இராமேஸ்வரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். அங்கு சித்தமருத்துவத்திற்குத் தேவையான `உமிரி' போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அத்தோடு, கச்சதீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சதீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூற்றாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சதீவு - குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகளும் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தற்காலிமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும் தகுதி வாய்ந்த இடமாகக் கச்சதீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தற்காலிமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சதீவு இருப்பதோடு ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம்.

இராணுவத்திற்குத் தேவையான தகவல் - தொடர்பு மையங்களையும், `ராடார்' போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கடற்படை அரண் அமையும்போது கச்சதீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள `பால்மஸ் மியான்ஜஸ்' எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்ட காலமாக புழங்காமல் இருந்த காரணத்தால் அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது.

ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல், கச்சதீவின் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக்கூடாது?

இராமேஸ்வரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று;கண்ணும்கூட. கச்சதீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது மானிடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான் கடமை ஆகும். -தினமணி-

தினக்குரல்

ஆக மொத்தத்தில் கச்சதீவு தமிழருக்குச் சொந்தமாயிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கும் இல்லாமல் ஈழத்திற்கும் இல்லாமல் சிங்களவனிடமல்லவா சிக்கியுள்ளது !

ஆக மொத்தத்தில் கச்சதீவு தமிழருக்குச் சொந்தமாயிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கும் இல்லாமல் ஈழத்திற்கும் இல்லாமல் சிங்களவனிடமல்லவா சிக்கியுள்ளது !

தற்போது சிங்களவனிடம் இருந்தாளும் விரைவில் தமிழீழம் அமையும் போது எமது மக்களுக்காக (தமிழர்களுக்காக) இருநாட்டு அதாவது எமது தாய் நாடாம் இந்தியாவில் வசிக்கும் எமது தமிழ் மக்களும் எமது ஈழ தமிழ் மக்களும் ஒன்றிணைத்து கூடும் இடமாகவும் மீன்பிடிக்காக பாவிக்கும் தளமாகவும் கச்சதீவு மாறும் என்பதில் எனக்கு வேற்றுக்கருத்துக்கள் இல்லை!

நன்றி்

பாரதத் தாயின் கால்விரல் மெட்டியான கச்சதீவை இலங்கை கைப்பற்றியபோது கண்டுகொள்ளாமல் விட்டது முதற்கோணல்...

யாரப்பா அது இன்னும் தூக்கத்தில் இருப்பது?

இந்தியாவில் அரசியல் வாதிகள் பாரதத்தாயின் கால்விரலையே கட் பண்ணிக்கொண்டு இருக்கிறாங்கள். இதைவிட, சிலர் பாரதத்தாயின் மானத்தையே காற்றில் பறக்க வைத்துக்கொண்டு இருக்கிறாங்கள். இவங்கள் எல்லாம் இந்த மெட்டி விசயம் பற்றி ஒன்றும் கவலைப்படப்போவதில்லை...

கச்சதீவையும் ஒரு தொகுதியாக்கி அங்கு தேர்தல் வைக்கும்வரை இந்திய அரசியல் வாதிகள் இதில் அக்கறை செலுத்தப்போவதில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.