Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தலில் சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்க TELO தீர்மானம்

 

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது.

TELO சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேன் என்றழைக்கப்படுகின்ற சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்ததாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று அறிவித்துள்ளார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ரெலோவிற்காக ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு அந்த ஆசனத்தை ஒதுக்குவதன் மூலம் நிர்வாகத் திறனும் மும்மொழித் தேர்ச்சியும் ஆளுமையும் மிக்க ஒருவரை தமது கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும் என செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் மூலம் கட்சி, யாழ். மாவட்டத்தில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.newsfirst.lk/tamil/2020/01/22/பொதுத்-தேர்தலில்-சுரேந்த/

இது  நல்லது , இந்த முறையாவது ஒரு படித்த பண்புள்ளவரை டெலோ களமிறங்குகிறது।  இருந்தாலும் அடைக்கலம் போன்ற ஆயுதக்குளுக்கள் படித்தவர்களுக்கு இடமளித்துவிட்டு வெளியேறுவது நல்லது। எதனை காலத்துக்கு இவர்கள் கதிரையை சூடக்கப்போகிறார்கள்।

சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது , ஒரு அபிவிருத்தி சமபந்தமாக வெளிநாட்டில் இருந்து யாரவது வந்தால், இனப்பிரச்சினை சமபந்தமாக யாருடனாவது பேசுவதாக இருந்தால் ஒரு ஒழுங்கான மொழியும் தெரியாது। தமிழனின் தலை எழுத்து।

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

இது  நல்லது , இந்த முறையாவது ஒரு படித்த பண்புள்ளவரை டெலோ களமிறங்குகிறது।  இருந்தாலும் அடைக்கலம் போன்ற ஆயுதக்குளுக்கள் படித்தவர்களுக்கு இடமளித்துவிட்டு வெளியேறுவது நல்லது। எதனை காலத்துக்கு இவர்கள் கதிரையை சூடக்கப்போகிறார்கள்।

சிங்களம் தெரியாது, ஆங்கிலம் தெரியாது , ஒரு அபிவிருத்தி சமபந்தமாக வெளிநாட்டில் இருந்து யாரவது வந்தால், இனப்பிரச்சினை சமபந்தமாக யாருடனாவது பேசுவதாக இருந்தால் ஒரு ஒழுங்கான மொழியும் தெரியாது। தமிழனின் தலை எழுத்து।

செல்வம் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியில் இருக்கிறார். சபாநாயகர், பிரதி சபாநாயகர் இல்லாதவிடத்து அவரே சபையை நடத்துவார். நேற்று ரஞ்சன் ராமநாயக்க பேசும் போது சபை செல்வத்தின் தலைமையில் நடந்தது. சபையை அவர் சிங்கள மொழியிலேயே நடத்தினார்.

Just now, goshan_che said:

செல்வம் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியில் இருக்கிறார். சபாநாயகர், பிரதி சபாநாயகர் இல்லாதவிடத்து அவரே சபையை நடத்துவார். நேற்று ரஞ்சன் ராமநாயக்க பேசும் போது சபை செல்வத்தின் தலைமையில் நடந்தது. சபையை அவர் சிங்கள மொழியிலேயே நடத்தினார்.

அவரது சிங்களத்தை கேட்டிருந்தால் உங்களுக்கு விளங்கி இருக்கும் அவர் சிங்களம் கதைக்கிறாரா இல்லை வேறு ஏதும் மொழி பேசுகிறாரா என்று।

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Vankalayan said:

அவரது சிங்களத்தை கேட்டிருந்தால் உங்களுக்கு விளங்கி இருக்கும் அவர் சிங்களம் கதைக்கிறாரா இல்லை வேறு ஏதும் மொழி பேசுகிறாரா என்று।

நான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை.

தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே?

எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும்.

பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள்?

குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா?

செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை.

ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

17 hours ago, goshan_che said:

நான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை.

தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே?

எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும்.

பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள்?

குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா?

செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை.

ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

செல்வம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தார்। அதட்காக மற்றவர்கள் எல்லாம் கிழித்தார்கள் எண்டு சொல்லவில்லை।  அவரது தொழில்என்ன தெரியுமா? நான் அதை எழுத விரும்பவில்லை । இதுக்குத்தானா ஆயுதம் தூக்கினார்கள்।

வன்னியில் இருந்து படித்தவர்களை போட்டியிட வாய்ப்பை கொடுக்கவில்லை। இப்போது தெரிவாகி இருப்பவர் படித்தவர் என்று நான் சொல்லவில்லை। செல்வம் சொன்னதைத்தான் நான் எழுதினேன்। படித்தவரா , முடடாளா எண்டு பிறகுதான் தெரியவரும்।

உங்களுக்கு அவருடைய சிங்களம் நன்றாக இருந்தால் அது நல்லது। நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை।

மன்னரை அபிவிருத்தி செய்த மன்னரை சேர்ந்த ஒரு முன்னாள் அரச அதிபரை TNA தனது கட்சி  சார்பாக போட்டியிட கேட்ட்து। இதை அறிந்த செல்வம் அவரிடம் ஓடிப்போய் ஐயா நீங்கள் மட்டும் கேட்க வேண்டாம் , அப்படி கேடடாள் தனக்கு இடம் இல்லாமல் பொய் விடும் எண்டு சொன்னவர்தான் இவர்।

இருந்தாலும் அந்த அதிகாரி நல்ல ஒரு உயர்ந்த பதவியில் இருப்பதால் இந்த அரசியில் சாக்கடையில் விழ சம்மதிக்கவில்லை।

Edited by Vankalayan
Need to change some wordings

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.