Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவரை இலங்கை கடற்படை சுடுவதாக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி குற்றச்சாட்டு

Featured Replies

இந்திய மீனவரை இலங்கை கடற்படை சுடுவதாக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி குற்றச்சாட்டு

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினரே சுட்டுக் கொல்வதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி ராமன் பிரேம்சுதன், அண்மையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லையென்றும் கூறினார்.

இந்திய கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள ராமன் பிரேம்சுதன் திங்கட்கிழமை அடையாறிலுள்ள கடற்படைத்தளத்தில் வைத்து வழங்கிய பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவேயுள்ள பாக்கு நீரிணைப் பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதலைப் புலிகளின் ஊடுருவல், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்க முடியும்.

போர் மற்றும் பாதுகாப்பு தான் கப்பல் படையின் முக்கிய பணி. இந்திய பெருங்கடல் பகுதியில் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வளங்களை எதிரிகள் யாரும் நெருங்காத வகையில் நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டுக் கப்பல் படையுடன் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

குறிப்பாக, கடல் வழி, வான் வழியாகவும் அத்து மீறுபவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும், ஆளில்லா விமானங்கள் ஊடுருவலையும் கண்காணிக்கிறோம். மீன்பிடிப் படகில் தமிழக கடலுக்குள் நுழைபவர்களை `ராடார்' மற்றும் `இன்பிராரெட்' மூலம் கண்காணிப்பு தீவிரமாக இருக்கிறது. இத்தகைய தொடர் ரோந்தினால் ஆயுதக் கடத்தல் போன்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

இலங்கையுடன் கூட்டு ரோந்து இல்லை. விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக பாக்கு நீரிணைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். இந்தியா முழுக்க கடல் பாதுகாப்புக்காக 50 ரோந்துப் படகுகள் உள்ளன. இதில் தமிழக கடல் பகுதிக்கு ஏழு படகுகள் உள்ளன. இவற்றில் நான்கு படகுகள் பாக்கு நீரிணைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முன் இரண்டு படகுகள் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தன.

இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் அதிகமாக கிடைப்பதால் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களை இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர். சமீபத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டுள்ள மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

இந்திய கப்பல் படைக்கு இராமநாதபுரத்தில் பெரிய விமானத்தளம் அமைக்க தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம். அதுபோல தூத்துக்குடி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்களில் கப்பற்படைக்குத் தேவையான இடவசதி செய்து தர மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்களுடன் புலிகள் அமைப்பினரும் எளிதாக நுழைந்து விடுகின்றனர். அவ்வாறு நுழைபவர்களை கண்டறிந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். மேலும், மியான்மர் நாட்டில் உள்ள ஒரு தீவில் சீனக் கப்பல் படையினர் முகாம் அமைத்துள்ளனர். நமது இந்தியக் கப்பல் படை அதிகாரிகள் அம்முகாமிற்கு சென்று பார்வையிட்டனர். அந்த முகாமால் நமக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் பயமும் இல்லை. இந்தியா- சீனாவுடனான நல்லுறவு நன்றாக உள்ளது

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.