Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகளுக்காக கஞ்சா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13512201630.jpg

கைதிகளுக்காக கஞ்சா கடத்தினாரா கன்னியாஸ்திரி?

அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு? அதுபோல கன்னியாஸ்திரிக்கும், கஞ்சாவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இப்படி நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ இந்த நினைப்பை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். மதுரை மத்திய சிறையில் கஞ்சாவும் கையுமாகப் பிடிபட்டிருக்கிறார் ஒரு கன்னியாஸ்திரி. நம்மைப் போலவே மதுரை சிறையதிகாரிகளும் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அந்தக் கன்னியாஸ்திரியின் பெயர் அனெஸ்தியா. (வயது 50). மதுரையை அடுத்த பெருங்குடியிலுள்ள ஒரு கிறிஸ்தவ கான்வெண்ட்டில் இவருக்குப் பணி. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வரத்தவறினாலும் ‘இவர் மதுரை மத்திய சிறைக்கு வருகை தரத் தவறுவதில்லை. ஜெயில் கைதிகளுக்கு அன்பு, அஹிம்சை, நல்லொழுக்கம் பற்றி வகுப்பெடுப்பார் இவர். கடந்த ஓராண்டுகாலமாகவே இந்த நன்னெறி வகுப்புகள் மத்திய சிறையில் ஜாம் ஜாமென்று நடந்து வந்தன. இந்தக் கன்னியாஸ்திரியின் மீது ஜெயில் அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் மட்டற்ற மரியாதை. ‘சிஸ்டர்’, ‘சிஸ்டர்’ என அன்பொழுக அழைப்பார்கள்.

அண்மைக்காலமாக சிஸ்டர் அனெஸ்தியா பற்றிச் சில நெகட்டிவான தகவல்ககள் ஜெயில் அதிகாரிகளின் காதுகளில் விழுந்தன. ஆரம்பத்தில் அதிகாரிகள் அதை நம்பவில்லை. அப்படியெல்லாம் இருக்காது’’ என்றே அலட்சியப்படுத்தி வந்தார்கள். கடைசியாக ஒரு கட்டத்தில் கன்னியாஸ்திரியை சோதனை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

13_ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. வழக்கம்போல பாடம் சொல்லித்தர வந்தார் கன்னியாஸ்திரி. அதுநாள் வரை அவரை சல்யூட் அடித்து உள்ளே அனுப்பி வைத்த அதிகாரிகள் அன்றைக்குத் தயங்கித் தயங்கி, ‘‘சிஸ்டர், ஒரு சின்ன செக்கப்’’ என்றார்கள். அதைக் கேட்டதும் அனெஸ்தியாவுக்கு குப்பென்று வியர்த்தது. அவரிடம் ரொம்ப மரியாதையாகவே சிறையதிகாரிகள் சோதனை போட்டனர்.

அவர் அணிந்திருந்த அங்கியை அவரையே உதறச் சொன்னார்கள் அப்படி உதறியபோது வந்து விழுந்த பொருளை சிறையதிகாரிகளின் கண்களே நம்பவில்லை ..... அங்கியில் இருந்து பொலபொலவென்று கொட்டியது கஞ்சா. கூடவே மொபைல் போனுக்கான இரண்டு சிம்கார்டுகள். அவரது பையைத் துழாவிய போது, உள்ளே ஜெபமாலை இருக்கும் என்று பார்த்தால்... அதில் கண்ணன் என்ற கைதி எழுதிய கடிதம். அதைத் தொடர்ந்து ஜெயில் கண்காணிப்பாளர் கோவிந்தராஜிடம் ஒப்படைக்கப்பட்டார் அனெஸ்தியா. ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.

‘‘தன் மீது எந்தத் தவறும் இல்லை’’ என்று பதற்றமின்றிச் சாதித்தார் அனெஸ்தியா.. ‘‘ஜெயிலுக்கு வெளியே ஒரு மூதாட்டி, ‘இது எயிட்ஸை குணமாக்கும் சிறந்த மூலிகை மருந்து’ என்றார். எயிட்ஸால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு உதவுமே என்று இதை வாங்கி வந்தேன். இது கஞ்சா என்று எனக்குத் தெரியாது’’ என்று கூலாக பதிலளித்தார். அந்த வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி விட்டார்கள் அதிகாரிகள்.

கன்னியாஸ்திரியிடம் இருந்த கண்ணனின் கடிதத்தைப் படித்த அதிகாரிகள், நொந்து தலையில் அடித்துக் கொள்ளாத குறை. அதில் ‘கன்னியாஸ்திரி அனெஸ்தியாவின் சேவையைப் பாராட்டி, அவரை வாரம் முழுவதும் (?) சிறைக்குள் அனுமதித்து கைதிகளுக்கு நல்ல விஷயங்களை, கற்றுத் தர வேண்டும்’ என்று கண்ணன் குறிப்பிட்டிருந்தார்.

சிறையதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கன்னியாஸ்திரியிடம் இருந்து கஞ்சா, சிம்கார்டு கைப்பற்றப்பட்டுள்ளது பற்றி கான்வெண்ட் நிர்வாகத்துக்கு எழுதியிருக்கிறோம். அவர் உண்மையில் இவற்றைக் கொண்டு வந்தாரா? என்பது விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும்’’ என்றார்கள் பட்டும்படாமலும்.

இதுபற்றி சிறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அதிர்ச்சியான சில தகவல்களைச் சொன்னார்கள்.

‘‘இந்தக் கன்னியாஸ்திரிக்கு காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை எப்போது வேண்டுமானாலும் ஜெயிலுக்குள் வந்து போக ஸ்பெஷல் அனுமதி உண்டு. அது போல எந்த எஸ்கார்டும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் சிறைக்குள் அவர் பார்க்க முடியும். இந்த அபரிமிதமான சலுகையை அவருக்கு அளித்தவர் ஜெயிலில் உயர்பதவியில் உள்ள ஓர் அதிகாரி.

சம்பவத்தன்று பகலில் ஜெயிலுக்குள் வந்து விட்டு நான்கு மணியளவில் அவர் வெளியே போனார். அதே வேகத்தில் மீண்டும் அரைமணி நேரத்தில் திரும்ப உள்ளே வந்தார். அப்போதுதான் அவரிடமிருந்து சுமார் அரை கிலோ கஞ்சா, இரண்டு சிம்கார்டு, ஒரு செல்போன், ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு கடிதங்கள் பிடிபட்டன. கண்ணன், சத்யா என்ற இரண்டு கைதிகளுக்காக இவற்றை அவர் கொண்டு வந்திருக்கிறார்.

ஜெயிலுக்குள் மேலும் சில மதபோதகர்களும் வருகிறார்கள். உயரதிகாரியின் ஆதரவு இருப்பதால் கொஞ்சம் அதிகார தோரணையிலேயே அவர்கள் நடந்து கொள்வார்கள். சோதனை போட வேண்டும் என்று கேட்கீப்பர் சொன்னால் முறைப்பார்கள்.

சிஸ்டர் அனெஸ்தியா கைதிகளிடம் அன்பாகப் பேசுவார். முகத்தைக் கூட வருடிக் கொடுத்து ஆறுதல் கூறுவார். அவர் பிடிபட்ட தகவல் குஜராத்தில் தங்கியுள்ள டி.ஐ.ஜிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வாக்குமூலம் வாங்கிவிட்டு அனெஸ்தியாவை விட்டுவிடச் சொல்லிவிட்டார்!’’ என்றார்கள் அவர்கள்.

‘பிரச்னையைப் பெரிதாக்க வேண்டாம்’ என்று போலீஸ§க்கு எங்கிருந்தோ இன்ஸ்ட்ரக்ஷன் வந்ததாம். அதனால்தான் அனெஸ்தியாவை கைது செய்யாமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். இந்தத் தகவல் தெரிந்து ஏகக் கொதிப்பில் இருக்கின்றன இந்து அமைப்புகள்.

இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சின்மயா சோமசுந்தரத்திடம் பேசினோம்.

‘‘மதுரை சரக ஜெயில் டி.ஐ.ஜி.யாக எஸ்ரா வந்ததில் இருந்து மதுரை ஜெயில் மதமாற்றக் கூடமாகி விட்டது. ஜெயிலில் ஐம்பது பேருக்கு மேல் மதம் மாற்றப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. ஜெயில் காவலர்களுக்கு தினகர் கான்வெண்ட்டில் மனிதநேய பயிற்சி தரப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு அல்லவா இதுபோல் பயிற்சி தர வேண்டும்?

சபரிமலைக்கு மாலை போட்டவன் யாராவது இப்படி சிறைக்குள் கஞ்சா கொண்டு போயிருந்தால், ‘போலிச் சாமியார் கஞ்சா கொண்டு போனார்’ என்று பத்திரிகைகளில் எழுதியிருப்பார்கள் ஆனால் அனெஸ்தியா விஷயத்தில் அப்படி எழுத மாட்டார்கள்.

அனெஸ்தியா கிறிஸ்தவ மதப்போர்வையில் சிறைக்குள் சென்றிருக்கிறார். நாங்கள் கன்னியாஸ்திரிகள் மீது மிகுந்த மதிப்பு உடையவர்கள். அனெஸ்தியா உண்மையான கன்னியாஸ்திரியாக இருக்க முடியாது என்பதே எங்கள் கணிப்பு.

இதுவரை எத்தனை கிலோ கஞ்சா, எவ்வளவு சிம்கார்டுகள் சிறைக்குள் கடத்தப்பட்டன? அது தீவிரவாதிகளுக்குச் சென்றதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். வாடிப்பட்டியைச் சேர்ந்த கைதி கண்ணனும் மதமாற்றம் செய்ப்பட்டவர் என்று சொல்கிறார்கள்.

கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி செரீனா உடனடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் கஞ்சாவுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட அனெஸ்தியாவிடம் வாக்குமூலம் மட்டும் வாங்கி பிறகு அவரை விட்டுவிட்டார்கள். செரீனாவுக்கு ஒரு நியாயம், அனெஸ்தியாவுக்கு ஒரு நியாயமா? வழக்கமாக கஞ்சா வழக்கு விசாரிக்கும் போலீஸாரே இந்த வழக்கை விசாரித்து, அனெஸ்தியாவை சாதாரண கஞ்சா கைதி போலவே நடத்த வேண்டும். ஜெயிலில் மத மாற்றம் நடப்பது பற்றி முதல்வர் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும்’’ என்றார் அவர்.

இது தொடர்பாக மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியனிடம் பேசினோம்.

‘‘இது பற்றி 14_ம் தேதி புகார் தருவதாக சிறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். புகார் கிடைத்தபிறகு சட்டப்படியான நடவடிக்கை தொடங்கும்!’’ என்றார் அவர்.

இதற்கிடையே 14_ம் தேதி கரிமேடு காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டார் அனெஸ்தியா. அவரிடம் அங்கு விறுவிறு விசாரணை நடத்தப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

‘‘அனெஸ்தியாவை படமெடுக்கச் சென்ற போட்டோகிராபர்களை இன்ஸ்பெக்டர் காட்வின் ஜெகதீஷ்குமார் ஏறக்குறைய விரட்டினார். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் ஸ்டேஷன் பின்வாசல் வழியாக காரிலேற்றி அனுப்பப்பட்டார் கன்னியாஸ்திரி. அப்போது, கூடியிருந்த பத்திரிகையாளர்களை இன்ஸ்பெக்டர் விரட்ட உத்தரவிட்டார்.

இது பற்றி கமிஷனரிடம் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவிக்க, அவர் அதுபற்றி விசாரிக்க உதவி கமிஷனர் சுந்தரேசனை அனப்பினார். ‘கஞ்சா வைத்திருந்தவரை எப்படிப் போகவிட்டீர்கள்?’’ என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘‘அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம்’’ என்றார் சுந்தரேசன்.

சொன்னபடி அன்று மாலை 4.30 மணியளவில் மதுரை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார் அனெஸ்தியா. அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு பக்கம் அருட் சகோதரி ஒருவர் இப்படி நடந்திருக்கமாட்டார் என்று நமக்குத் தோன்றியது. மறுபக்கம் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’’ என்று ஓங்கிய குரலில் நமக்குப் பாடவும் தோன்றியது.

தகவல்-குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய புலனாய்வு துறையினர் (றோ) மட்டும் கஞ்சா அடிக்கலாம், கைதிகள் அடித்தால் தப்பா? என்ன நியாயம் இது? :angry:

சிறுவர், சிறுமியரை பலாத்தகாரம் செய்தபின் பின் அதை இரையாக உண்ணும் நாட்டில், முதலைமைச்சரே கோடி கோடியாக சொத்து குவிக்கும் நாட்டில், அமைச்சர்கள்,மந்திரிகளே பெண்களை இம்சை செய்யும் நாட்டில், யஸ்ட் கஞ்சா அடிச்சா குற்றமா? நீதி செத்துவிட்டதா?? :unsure::)

Edited by Danklas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மத்திய புலனாய்வு துறையினர் (றோ) மட்டும் கஞ்சா அடிக்கலாம், கைதிகள் அடித்தால் தப்பா? என்ன நியாயம் இது? :angry:

சிறுவர், சிறுமியரை பலாத்தகாரம் செய்தபின் பின் அதை இரையாக உண்ணும் நாட்டில், முதலைமைச்சரே கோடி கோடியாக சொத்து குவிக்கும் நாட்டில், அமைச்சர்கள்,மந்திரிகளே பெண்களை இம்சை செய்யும் நாட்டில், யஸ்ட் கஞ்சா அடிச்சா குற்றமா? நீதி செத்துவிட்டதா?? :lol::unsure:

அதுதானே டங்கு ?உந்த விசயத்தை உப்பிடியே விடாதையும்.அங்கை டெல்லி வரைக்கும் போய் கேளுங்கோ? :angry: இல்லாட்டி ஆகக்குறைஞ்சது உங்கை சோமாலியா அரசாங்கத்திட்டையாவது டெல்லிக்கு எதிராய் ஒரு மகஜர் எழுதிக்குடுக்கோணும் டங்கு! :blink: அதுவுமில்லாட்டி எங்கடை காத்திகேசு சகோதரங்களை கூட்டிக்கோண்டு ஒரு குட்டி ஊர்வலமாவது நடத்தோணும். B)

அதுசரி கஞ்சா ரொட்டி எப்பவாவது சாப்பிட்டுப்பார்த்தனீரே?பார்சல்லை ஒண்டு அனுப்பட்டோ ????? :blink:

கன்(ஞ்/னி)யாஸ்திரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.