Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்புலிகள் தாக்குதல் எதிரொலி: சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தல்

Featured Replies

வான்புலிகள் தாக்குதல் எதிரொலி: சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கட்டளைத் தளபதிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி:

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக அதிகளவான பேனா மைகள் எழுதித் தீர்ந்து விட்டன. ஆனால் இன்று வரை அதற்கான ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் வான்படை மற்றும் அதன் ஓடுதளம் தொடர்பாக அரசு தனக்கு தெரியும் என கூறியிருந்தது.

அப்படியானால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கையை எடுத்திருந்தது? முதலாவதாக செயற்திறன் மிக்க ராடார்களை நிறுவுவது முக்கியமானது. இந்த ராடார் தொகுதியை முறையாக கையாள தெரியாது விட்டால் அல்லது வான் எதிர்ப்பு படையினர் இல்லாது விட்டால் ராடார்கள் இருந்தும் பயனற்றது. விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பை குறைவாக மதிப்பிட முடியாது.

வேகமாக வெளியிடப்படும் நம்பமுடியாத பிரச்சாரங்களின் மூலம் மக்களை நம்பவைக்க முடியாது. அது அவர்களின் தேவைக்கு அதிகமானது. எம்மை வெற்றிகொள்ள முடியாது என எண்ணியிருந்த வேளைகளில் எதுவித தடங்களும் இன்றி விடுதலைப் புலிகள் அதனை மாற்றியுள்ளனர். முகமாலைச் சமரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரை தியாகம் செய்யத போது யாரும் அதற்கு பொறுப்பேற்கவில்லை. இழப்புக்கள் தொடர்பாக பேசுவதை குறைப்பது அவர்களின் கொள்கை.

மற்றைய நாடுகளில் என்றால் கட்டளைத் தளபதிகள் மீது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் கொண்டுவரப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்கள

அப்படியானால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கையை எடுத்திருந்தது? முதலாவதாக செயற்திறன் மிக்க ராடார்களை நிறுவுவது முக்கியமானது. இந்த ராடார் தொகுதியை முறையாக கையாள தெரியாது விட்டால் அல்லது வான் எதிர்ப்பு படையினர் இல்லாது விட்டால் ராடார்கள் இருந்தும் பயனற்றது. விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பை குறைவாக மதிப்பிட முடியாது

கட்டளை தளபதிகளும் மகிந்தவின் பரிவரமும் ஒழிச்சு கொள்ளலாம் அல்லவா.அதுக்குத்தான் ராடர் இருக்கு

சிறிலங்கா வான்படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது நடத்தப்படும் தமது வான்குண்டுவீச்சு வியூகங்கள் தொடர்பாக அடிக்கடி பேசி வருகின்றனர். அப்படியானால் அந்த குண்டுவீச்சக்களில் இருந்து விடுதலைப் புலிகளின் வானூர்திகளும், ஓடுபாதையும் தப்பியது எப்படி?

எப்ப வான்படை புலிகள் மீது தக்கி இருக்கு பயத்தில மூxxx பெய்யிறமாதிரி ஒழுகவிட்டுட்டு தளம்திரும்புவைதானே வான்படையினர்

விடுதலைப் புலிகள் தமது வானூர்திகளுக்கு தேவையான எரிபொருட்களை எங்கிருந்து பெற்றுக்கொள்கின்றனர்? அது அவர்களிடம் மேலதிகமாக உள்ளதாகவே தோன்றுகின்றது. அவர்களின் சேமிப்பு முறைகள் என்ன? எமது படையினரால் அவர்களின் விநியோக வழிகளை தடுக்க முடியாதபடி விடுதலைப் புலிகள் எப்படி தமது தேவைகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அதை கண்டு பிடித்திருந்தால் சிங்கள சனம் இன்று நிம்மதியாக நித்திரை கொள்ளலாமே :P

இராணுவ தலைமையகத்திற்குள் விடுதலைப் புலிகள் எவ்வாறு ஊடுரூவினார்கள் என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை. ஆனையிறவு போன்ற மிகவும் பலமான எமது இராணுவ முகாம்கள் சாதாரணமாக வெற்றிகொள்ளபட்டுள்ன. இன்று வரை அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. பல்வேறுபட்ட சமர்களில் இளம் உயிர்கள் பல பலியாகி உள்ளன. அதற்கு யாரையும் குற்றம்சாட்டவில்லை

இன்னும் பல இளம் பலிக்கடாக்கள் கொலைகலத்தி இருகினம் அதுக்கு யார் பொருப்பு ஏற்கிறார்கள்,வரும் காலத்தில் உடல்கலை கனக்கெடுக்கும் போது தெரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.