Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவை காரணங்காட்டி சீன நாட்டின் மீது எதிர்ப்பை உருவாக்க வேண்டாம்

Featured Replies

Saturday, February 1, 2020 - 6:00am
Untitled-1sd.jpg?itok=387-PR4z

கொரோனா வைரஸை பயன்படுத்தி சீன எதிர்ப்பு அலையை எவரும் உருவாக்க வேண்டாமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிலுள்ள ஏனைய வைரஸ்கள் தொடர்பில் தற்போது எவரும் பேசுவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளை மறந்துள்ளனர். தினம் தினம் நாட்டில் பலர் டெங்கு நோய்க்கு உள்ளாகுகின்றனர். கொரோனா வைரஸ் போன்று டெங்குவை ஒழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலர் சீன நாட்டவரை கண்டால் அருகில் செல்லவும் அச்சப்படுகின்றனர். இந்நாட்டில் பல வருடங்களாக வசிக்கும் சீனர்களை கண்டாலும் அச்சமடைகின்றனர். வேலைத்தளங்களிலும் சீனர்கள் அருகில் எவரும் செல்வதில்லை. அவ்வாறு எவரையும் ஒதுக்கிவைப்பது நல்லதல்ல.

சீனா இலங்கைக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றை மறக்கக் கூடாது. இன்றளவும் பாரிய அபிவிருத்திகளையும் உதவிகளையும் முதலீடுகளையும் சீனா இலங்கைக்கு வழங்குகிறது. அவர்களுடைய நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது உலகளாவிய ரீதியில் பரவலடைகிறது.

எமது நாட்டுக்குகள் வைரஸ் பரவாமல் இருப்பதை தடுக்கவே நாம் செயற்பட வேண்டும். சர்வதேசத்துடன் சிறந்த உறவை நாம் கட்டியெழுப்பியுள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

https://www.thinakaran.lk/2020/02/01/உள்நாடு/47765/கொரோனாவை-காரணங்காட்டி-சீன-நாட்டின்-மீது-எதிர்ப்பை-உருவாக்க-வேண்டாம்

 

மக்கள் ஒன்றுகூடம் இடங்களில் நடமாடாதீர் - சீனர்களுக்கு அறிவுரை

பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் அதிகமாக நடமாட வேண்டமென இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதியால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட செயலணியுடனான கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (31) நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் சீன ஊழியர்கள் பணியாற்றும்,  நிறுவனங்களுக்கும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கும் இது தொடர்பாக அறிவிக்கபட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மககள-ஒனறகடம-இடஙகளல-நடமடதர-சனரகளகக-அறவர/175-244879

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ampanai said:

இந்நாட்டில் பல வருடங்களாக வசிக்கும் சீனர்களை கண்டாலும் அச்சமடைகின்றனர். வேலைத்தளங்களிலும் சீனர்கள் அருகில் எவரும் செல்வதில்லை. அவ்வாறு எவரையும் ஒதுக்கிவைப்பது நல்லதல்ல

என்னவொரு மனிதாபிமானம் இந்த அமைச்சருக்கு. இந்த நாட்டு குடிமக்களை மட்டும் ஓரங்கட்டுங்கள்.  எல்லாம் பணம் படுத்தும் பாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.