Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதில் காணமுடியாத பல கேள்விகளை கிளப்பியிருக்கும் புலிகளின் விமானத் தாக்குதல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதில் காணமுடியாத பல கேள்விகளை கிளப்பியிருக்கும் புலிகளின் விமானத் தாக்குதல்கள்

[17 - May - 2007]

-காலிங்க செனிவிரத்ன-

கொழும்பு, தலைநகருக்குள்ளேயும் சுற்றுவட்டாரங்களிலும் இராணுவ, பொருளாதார இலக்குகளில் விமானத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய பிரிவினைவாத போராளிகளான விடுதலைப்புலிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான தங்கள் போராட்டத்தில் முழுமையான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குப் போதிய ஆற்றல் தங்களிடம் இருப்பதை நடைமுறையில் காண்பித்துள்ளார்கள்.

ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தீவு நாட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அதன் தமிழீழ விமானப்படைப் பிரிவு அதற்குள் எவ்வாறு விமானங்களைக் கொள்வனவு செய்தது? அவர்கள் நிலைகொண்டுள்ள சிறு நிலப்பரப்பில் எவ்வாறு விமான ஓட்டிகளுக்குப் பயிற்சியும் அளித்தது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேற்கொள்ளப்பட்ட சகல மதிப்பீடுகளிலுமிருந்து, தமிழீழ விமானப் படை மிகச் சிறியது என்றும் செக் நாட்டில் தயாரிக்கப்பட்டதும் உந்துகலங்களினால் (Propeller-driven) இயங்குவதுமான 5 Zlin Z-J42 விமானங்களை மாத்திரமே அது கொண்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. முழுதும் உதிரிபாகங்களாக கழற்றப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அவை விமானங்களாக பொருத்தப்பட்டுள்ளன என்றும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், செப்டெம்பர் 11 அமெரிக்க தாக்குதலின் பின்னர் உலகில் நிலவும் பயங்கரவாத எதிர்ப்புச் சூழலில் தமிழீழ விமானப்படைப் பிரிவை ஆரம்பித்தமையும் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமையும் உலக புலன்விசாரணை நிபுணர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் ஒரு வீரதீர சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த சம்பவமானது, குறிப்பாக இலங்கையிலும் அயல் நாடான இந்தியாவிலும் உள்ள பாதுகாப்பு நிபுணர்களை கவலைக்கு உள்ளாக்கியிருப்பதுடன் செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட இயக்கமொன்று அரசாங்கத்திற்கெதிரான தாக்குதலுக்கு விமானங்களைப் பாவித்தமை பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விமானப்படை கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதலாவது தாக்குதலையும் கடைசியாக ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி மூன்றாவது தாக்குதலையும் நடத்தியதை அடுத்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் இரவுநேர செயற்பாடுகளை முடக்கி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. தமிழீழ விமானப்படையின் தாக்குதல்களால் சர்வதேச விமான நிலையத்துடன் ஓடுபாதையைப் பகிர்ந்து கொள்ளும் இலங்கை விமானப்படையின் தளத்திலும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டன. யாழ்ப்பாணம் பலாலி இராணுவத் தளத்தில் தமிழீழ விமானப்படையினரால் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் பொறியியல் தொகுதி ஒன்றும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டன.

சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென நாட்டின் வடக்கு - கிழக்கில் தனி நாடு ஒன்றை அமைப்பதற்காக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வரும் விடுதலைப்புலிகள் எதிர்காலத்திலும் தமிழீழ விமானப்படையின் தாக்குதல்கள் தொடரும் என்று என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

சேவையிலிருந்து இளைப்பாறிய இலங்கை விமானப்படையின் பிரிவுத் தளபதி சி.ஏ.ஓ.டிறெக்ஸ் கருத்து தெரிவிக்கையில், சிறு தொகையிலான விமானங்களை வைத்துப் பராமரிப்பதற்குக்கூட விடுதலைப்புலிகளிடம் திறமைவாய்ந்த பொறியியல் பிரிவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் பயிற்சிப் பிரிவும் உள்ளூரில் வெடிபொருட்களைத் தயாரிக்கும் வசதிகளும் இருக்க வேண்டுமெனக் கூறினார்.

இலகு விமானங்களைப் பயன்படுத்துவதால் தற்போதைய போராட்டப் பரிணாமத்தில் புதியதும் மிக்க அபாயகரமானதுமான நிலைமை ஒன்று உருவாகியுள்ளது என்றும் அவர் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வதியும் பெருமளவிலான தமிழர்களின் ஆதரவின்றி தமிழீழ விமானப்படை ஒன்றை உருவாக்கியிருக்க முடியாது என்பது பிராந்தியத்திலுள்ள பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார நிபுணர்களின் கருத்தாகும். 1980 களிலிருந்து தாய்நாட்டில் அடக்குமுறை நிலவுவதாகக் கூறித் தொடர்ச்சியாக மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் விடுதலைப்புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு தாராளமாக உதவிவருகிறார்கள்.

மார்ச் மாதம் 27 ஆம் திகதி வெளியான சர்வதேச பயங்கரவாத கண்காணிப்புச் சஞ்சிகையில் சுயாதீன பாதுகாப்புத் துறை நிபுணரும் இளைப்பாறிய இந்திய உயர் அதிகாரியுமான ஆ. ராமன் எழுதிய குறிப்பில், கொழும்பில் தமிழீழ விமானப்படை நடத்திய தாக்குதல்கள் குறித்து உலகெங்கிலும் பரந்துள்ள இலங்கைத் தமிழர்கள் பெருமை கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழீழ விமானப்படையின் சகல விமான ஓட்டிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களே என்ற உண்மை அவர்களது பெருமைக்கு ஒரு காரணமாகும். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள புலனாய்வுத் துறை நிபுணர்களை குடைந்தெடுக்கும் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு அரச விமானப்படையில் பணியாற்றும் தொழிற்புலமை வாய்ந்த விமான ஓட்டிகளுக்குக்கூட கிரமமான பயிற்சி அவசியமாகும் என்று குறிப்பிட்ட ராமன், ஒரு விமானத்தை மறைவிடம் ஒன்றில் ஒளித்து வைத்துப் பொருத்துவதோ அல்லது குண்டுத் தாக்குதலுக்கு அதனை மறைவிடம் ஒன்றிலிருந்து கிளப்பிச் செல்வதோ முடியாத செயலாகும் என்று எழுதியுள்ளார்.

தமிழீழ விமானப்படை ஓட்டிகள் எங்கே பயிற்சி எடுத்தார்கள்? இலங்கையினதும் இந்தியாவினதும் விமானப்படை புலனாய்வுத் துறையினருக்கு எவ்வாறு இந்த விமான ஓட்டப் பயிற்சிகளை கண்டுபிடிக்க முடியாமல் போனது?

ராமன் எழுதிய அதே பிரசுரத்தில் ராமனின் கேள்விகளுக்குப் பதிலளித்த தென்கிழக்காசிய பாதுகாப்புத் துறை பகுப்பாய்வாளர் பிரசுன் செங்குப்தா, விடுதலைப்புலிகள் தென்னாபிரிக்க விமானக்கிளப் ஒன்றிலிருந்து விமானங்களைக் கொள்வனவு செய்திருக்கலாம் என்றும் ஐரோப்பாவிலும் தென்னாபிரிக்காவிலும் உள்ள வங்கிக் கணக்குள் மூலம் அதற்கான கொடுப்பனவை வழங்கியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். செக். குடியரசிலிருந்து விமானக் கொள்வனவுக் கட்டளைகள் மூலம் விமானங்களை வாங்கிக் கொடுத்த தென்னாபிரிக்க விமானக் கிளப்தான் விமான ஓட்டப்பயிற்சியையும் ஓட்டிகளுக்கு தொழிற் புலமைத் தராதரத்தையும் வழங்கியதாகவும் செங்குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த வகையான விமானங்கள் தயாரிப்பாளர்களினால் உதிரிப் பாகங்களாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன என்பதையும் கார் உதிரிப்பாகங்களெனக் குறிப்பிட்டு இவற்றை இலகுவில் இடத்திற்கிடம் எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் செங்குப்தா ஏற்றுக் கொள்கிறார். வாடகைக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தினர் விமான உதிரிப் பாகங்கள் என்பதை மறைத்து கொழும்பு துறைமுக சுங்க அதிகாரிகளுக்குப் போலி சிட்டைகளையும் பொய் உறுதியுரைகளையும் கொடுத்து விமான உதிரிப் பாகங்களை அனுப்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு அரசாங்கம் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் புலிகள் எவ்வாறு விமான எரிவாயுவைப் பெற்றார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது அனுதாபமுள்ள தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு அரசாங்கம் பாக்குநீரிணையூடாக விமான எரிவாயுவைப் புலிகளுக்கு வழங்கியிருக்கலாமென இங்குள்ள ஆய்வாளர்கள் சிலர் அச்சம் தெரிவிக்கின்ற அதேவேளை, இலங்கையில் மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கக்கூடிய டீசல் எண்ணெயில் இயங்கக்கூடியதாக இந்த விமானங்களின் எஞ்ஜின்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure::lol:அதர்மம் ஆறடி பாய்ந்தால்

தர்மம் பதிநாறடி பாயும் :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் பல கேள்விகள் இருக்கு. ஆனால் நாங்கள் அதனைக் கேட்க மாட்டோம். பதில் செயலில் காணலாம்.

இதெல்லாம் இவர்களின் ஊகமே தவிர வேறு ஒன்றும் இல்லை.ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும்.சுத்துமாத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அமாவாசை வந்திட்டுது வெகு விரைவில இன்னுமொரு வான் தாக்குதலுக்கு இடமிருக்கு.

காரணம் இதுவரை நடந்த தாக்குதல்களை ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறைக்காலத்தில்தான் நடத்தப்பட்டிருக்கு (நிலவு வெளிச்சம் அந்தநாட்களில் குறைவானபடியால் வெற்றுப்பார்வைகள் விமானத்தை இலகுவில் அடையாளம் கண்டுபிடிக்காது என்பது இதற்கான காரணமாக இருக்கலாம்). என்னமோ கொழும்பில இன்னுமொரு வாணவேடிக்கைக்கு இடமிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.