Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

BA8874-FF-EF7-D-4-C83-8421-17-B518-F38-D

„நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்இப்படி தனது அயல் வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற  Maurice (29), சொன்னபடியே இன்று ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறான்.

19.02.2020 அன்று இளவயதிலான ஒன்பது குர்தீஸ் இனத்தவர்களதும் இரண்டு யேர்மனியர்களது ம் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு இடையில் இன்னும் ஒரு அனர்த்தம் யேர்மனியில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் Hessen மாநிலத்திலேயே நடந்திருக்கிறது என்பது  இன்னும் ஒரு  அதிர்ச்சியான செய்தி.

ஒரு வாரம் பாடசாலை விடுமுறை. இந்த விடுமுறையில்தான் Rosenmontag என்ற யேர்மனியரின் கார்னிவேல்(Carnivel) நடைபெறுகிறது. விதவிதமான உடைகள், அரிதாரங்களுடன்  தங்களை அலங்கரித்து யேர்மனியர்கள் வீதிகளில் ஊர்வலம் வருவார்கள். இந்த விழாவில் பெரியவர்களும் சிறியவர்களுமாக மாறி மாறி   ஆடிப்பாடிக் கொண்டாடி குதூகலிப்பார்கள். அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கும் விதமாக கேலியான பொம்மைகளை வடிவமைத்து  வாகனங்களில் வைத்து ஊர்வலம் வருவார்கள். பார ஊர்தியில் தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை வைத்துக் கொண்டு யேர்மனிய நிறுவனங்களின் முதலாளிகளும் தொழிலாளர்களும் கையசைத்து வருவார்கள். அப்படி அவர்கள் வரும் போது  வீதியில் நிற்பவர்களுக்கு  வாகனங்களில் இருந்து இனிப்பு மழை பொழிவார்கள். இந்த இனிப்பு வகைகளைச் சேகரிப்பதற்ககாகவே சிறுவர்கள்  Rosenmontagஇல் நடைபெறும் ஊர்வலங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.

நேற்று Hessen மாநிலத்தில் இருக்கும்  Volkmarsen என்ற சிறிய நகரில் Rosenmontag வீதி விழாவில் வாகனங்களில் இருந்து அள்ளி வீசப்படும் இனிப்புவகைகளைச் சிறார்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் போது  அந்தச் சிறார் கூட்டத்தின் மீது வேகமாக வந்து மோதியது Maurice இன் கார்.

இந்தத் தாக்குதலில், முதற் கட்டமாக30 பேர் வரையில் காயப்பட்டதாக அறிவித்த Frankfurt காவற்துறை இன்று காயப்பட்டவர்களது எண்ணிக்கை 50 பேருக்கு மேல் என்றும் அதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

வேகமாக கார் ஓட்டி வந்த Maurice நிறைந்த போதையில் இருந்ததாகவும், மோதலின் போது அவனது தலையில் ஏற்பட்ட காயத்தால் அவனிடம் முழுமையான விசாரணையை இன்னமும் நடத்த முடியவில்லை எனவும் கிடைக்கப் பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விபத்து வேண்டும் என்றே நடத்தப் பட்டிருக்கின்றது என்பது தெரிகிறது  எனவும் காவற்துறையின் அறிக்கை சொல்கிறது.

Hanau நகரில் குர்தீஸ் இளைஞர்களின் மீதான தாக்குதலுக்கு வலதுசாரி இனவாதிகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹம்பேர்க் மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும் பின்னடைவு அடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப் பட்டும் தீவிர இனவாதக் கட்சியான AFD, அந்தத் தேர்தலில் சென்ற முறையைவிட 0,88வீத வாக்குகளை குறைவாகப்பெற்றதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

Rosenmontag அன்று நடந்த தாக்குதலுக்கு தாக்குதல்தாரி ஒரு மனநோயாளி என்றுதான் அறிக்கை வெளிவரப் போகிறது. இனவாதிகள், மனநோயாளிகள் நடுவேதான் இப்பொழுது வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. அதற்கிடையில்,கொரோனா வைரஸ் இத்தாலியில் தாக்கி இருக்கிறது. அது யேர்மனிக்கு வர அதிக  காலம் பிடிக்காது. தயாராக இருங்கள்" என யேர்மனிய சுகாதார அமைச்சர் Jens Spahn நேற்று தொலைக்காட்சியில் வந்து பயத்தை இன்னும் அதிகரித்துவிட்டுப் போயிருக்கிறார்.

சிகரெட் : இன்று உன்னால் நான் சாம்பலாகின்றேன்;  நாளை என்னால் நீ சாம்பலாவாய்

பயங்கரவாதம் : நேற்று அரசுகளால் நான் உருவாக்கப்பட்டேன். இன்று மதங்களால் நான் வலுவாக்கப்பட்டேன். நாளை என்னால் மனித குலமே அழிக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான கொலைகாரர்களின் நிழற்படங்களை ஒளிப்படங்களை.. பத்திரிகைகள் பிரசுரிப்பதை முற்றாக கைவிடுவதோடு.. கிறுக்கல் சித்திரமாக மட்டும் வெளியிடலாம்.. மக்கள் இவர்களை அடையாளம் காணக்கூடிய அடையாளங்களை முன்னிறுத்தி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.