Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர்: பேராசிரியர் எஸ்.ரீ. ஹெரிகே

Featured Replies

மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர்: பேராசிரியர் எஸ்.ரீ. ஹெரிகே

சிறிலங்காவின் மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ரீ.ஹெரிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தின் காரணமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட போது நானும் அங்கு இருந்தேன். சில ஆயிரம் பயணிகள், பணியாளர்கள் அறை ஒன்றினுள் கூடுமாறு பணிக்கப்பட்டனர். நான் ஒரு வெளிநாட்டு பயணியின் பின்னால் நின்றிருந்தேன். அவர் அச்சமடைந்திருந்தது வெளிப்படையாக தெரிந்தது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளில் ஈடுபட்ட அதிகாரி என்ற முறையில் அவர் பல ஆபிரிக்க நாடுகளில் அதிக அனுபவங்களை பெற்றிருந்தார்.

வானூர்தி நிலையத்தின் உட் கட்டடத்தொகுதியினுள் நாம் மாட்டிக் கொண்டுள்ளோம் என அவரிடம் நான் தெரிவித்தேன். அதற்கு அவர் நாம் இங்கு தற்காலிகமாக மாட்டிக் கொண்டுள்ளோம் இது சில மணிநேரங்கள் தான், ஆனால் சிறிலங்காவில் உள்ள மக்கள் தமது எஞ்சிய வாழ் நாட்கள் முழுவதும் இந்த பொறிக்குள் அகப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

சிறிலங்கா தொடர்பாக அவரால் கூறப்பட்ட கருத்தைப் போலவே சிறிலங்காவில் உள்ள மக்கள் மிகவும் கொடுமையான அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ளனர். நாடு இப்படியான சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு வாழும் மக்கள் அதில் இருந்து மீள்வதற்கான சாத்தியங்கள் குறித்த கருத்தாடல்களில் வெளிப்படையாக ஈடுபடலாம். இது நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான கருத்துக்கள், தகவல்கள், யோசனைகள் என்பன அதிக அளவில் சுதந்திரமாக வெளிவருவதற்கு உதவும்.

ஆனால் பெரும்பாலான எமது தலைவர்கள் மக்கள் தமது நெருக்கடிகள் குறித்து வெளிப்படையான கருத்தாடல்களில் ஈடுபடுவதை ஏன் விரும்புவதில்லை? மக்கள் தமது சொந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடுவதனை ஏன் அவர்கள் விரும்புவதில்லை?

இதற்கான விடை இலகுவானது. தலைவர்கள் மட்டுமல்லாது பெருமளவான மக்களும் தமது பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பதற்கு நேர்மையுடன் செயற்படுவதில் இருந்து அதிக தூரம் விலகியே நிற்கின்றனர். பொதுமக்களின் விவகாரங்களை நாடு தற்போது கையாளும் முறையால் மக்கள் இயற்கையாகவே நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

மக்கள் ஊடகங்களில் தமது வெளிப்படையான விவாதங்கள், கருத்தாடல்கள் மேற்கொண்டால், அரசியல் தலைவர்கள் நீண்டா காலத்திற்கு தமது அதிக்கங்களை செலுத்தவோ அல்லது மக்களை இருட்டில் வைத்திருக்கவோ முடியாது போய்விடும். உதாரணமாக பொது மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி எங்கு செல்கின்றது என மக்கள் வெளிப்படையான விவாதங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டால் அவர்கள் மக்களுடன் இணைந்தே திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஜனநாயக ஊடக முறையானது, ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளை வெளிப்படையாக விசாரணைகள் செய்து பொதுமக்களின் நலனுக்கு எதிரான அவர்களின் தவறான அணுகுமுறைகள், தனிப்பட்ட நலன்கள் என்பவற்றை வெளிக்கொண்டு வர முடியும். எனவே தற்புகழ்ச்சி, மதக் கோட்பாடு போன்றன மூலம் மக்களிடம் தமது விம்பங்களை ஏற்படுத்தியுள்ள அரசியல்வாதிகளின் உண்மையை அது வெளிப்படுத்தி விடும். மக்களின் இந்த விழிப்புணர்வு நேர்மையற்ற, ஊழல் நிறைந்த, தரமற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு நேரடி அச்சுறுத்தலாகும்.

நாட்டுக்கு அரசியல் உறுதித்தன்மை அவசியமானது. எனவே அதில் உள்ள எல்லாக் கட்சிகள் தொடர்பான முக்கியமான விவாதங்கள் அவசியம். ஆனால் விவாதங்களை விடுத்து அரசியல் உறுதித்தன்மையை பேணுவதற்கு கட்சித் தாவல்களை முதன்மைப்படுத்தி உள்ளனர். கட்சி தாவிய உறுப்பினர்கள் அரசைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தியே உள்ளனர்.

பல பகுதிகளில் உள்ள ஆழமான பிரச்சினைகளே தற்போதைய அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. நாட்டின் கல்வித் திட்டம் இளைஞர்களிடம் நாட்டுக்குரிய அடையாளத்தை ஏற்படுத்துவதனை விடுத்து அவர்களிடம் இன, மத, பிரதேச ரீதியான பாகுபாட்டை தோற்றுவித்துள்ளது. அரசியல்வாதிகளின் அதிகரித்த பரிந்துரைகள், மற்றும் தலையீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளது.

நாட்டை இந்த நிலையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் தயாராக இல்லை. எனவே சமூகத்தில் நம்பிக்கையீனம், அதிருப்திகள் என்பன தோன்றியுள்ளன. பல வருடங்களாக மக்கள் ஒரு அழுத்தத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த அழுத்தங்கள் மக்களிடம் மன அழுத்தங்கள், இதய நோய்கள், நீரழிவு நோய்கள் என்பவற்றை அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம், பொது மக்களின் பணம் போன்ற பொதுமக்களின் விவாகரங்களை அரசியல்வாதிகள் தவறாக கையாளுவதால் சமூகத்தின் நிலைமைகள் மேலும் மோசமான நிலையை அடைந்துள்ளது. எனவே அவர்கள் தமது வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பை சமாளிப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்பைத் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. மிக அதிகளவான புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

மேற்கூறப்பட்டவைகளே தற்போது நாடு எதிர்கொள்ளும் சமூக- அரசியல் நெருக்கடிகளுக்கான காரணமாகும். நாம் இது தொடர்பான தெளிவான விவாதங்களில் ஈடுபடாது விட்டால், நாம் இந்த நிலைமைகளிலேயே தொடர்ந்து பல வருடங்கள் இருக்க வேண்டிய நிலமை ஏற்படும். இது நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும்.

இந்த நிலைமை வன்முறைகளை மற்றுமொரு காலத்திற்கு பரவலடையச் செய்யும். எனவே வன்முறைகளும், சொல்ல முடியாத மனித அவலங்களும் முடிவடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.