Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் பழமையான கோவில்கள் இனி மத்திய தொல்லியல் வசம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் பழமையான கோவில்கள் இனி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்.. மத்திய அரசு புது திட்டம்.! 

archaeology3-1-1583151144.jpg

சென்னை: தமிழகத்தில் பழமையான கோவில்கள் சிலவற்றை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் இருக்கும் பழைய கட்டிடங்கள், புராதான சின்னங்கள் ஆகியவற்றை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது வழக்கம்.

அந்த பகுதிகளை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் இப்படி பல பகுதிகள் உள்ளது .தமிழகத்தில் மொத்தம் தொல்லியல் துறை வசம் 100+ இடங்கள் உள்ளது. நிறைய புராதன கட்டிடங்கள், பழங்கால ஆங்கிலேயர் கால இடங்கள் ஆகியன.

நினைவுச் சின்னங்கள் 

இந்த நிலையில் நாடு முழுக்க பல்வேறு புராதான சின்னங்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மத்திய அரசு சார்பாக 3,691 புராதனச் சின்னங்கள் தொல்லியல் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தாஜ்மஹால், குதுப்மினார் போன்ற வரலாறு சிறப்பு மிக்க கட்டிடங்கள் இந்த பட்டியலில் உள்ளது. சென்னை மாமல்லபுரமும் இதன் கீழ்தான் வருகிறது.

உத்தர பிரதேசம்

எப்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 745 இடங்கள் இந்திய தொல்லியல் அமைப்பின் கீழ் உள்ளன. இந்தியாவில் சில கோவில்கள் தொல்லியல் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோவில்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக புதிய திட்டம் மூலம் இந்த கோவில்களை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவுதான் கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்துக்கள்

இதனால் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்கள் பல மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளது. பழமையான கோவில்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். நாடு முழுக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதான் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலர் இந்த முடிவை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.

பட்டேல்

கலாசாரத்துறை அமைச்சர்  பிரகலாத் சிங் பட்டேல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இந்த திட்டம் எப்போது செயலுக்கு வரும் என்று விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் எந்த கோவில்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் என்று வரையறை இன்னும் விதிக்கப்படவில்லை. அதே சமயம் இன்னொரு பக்கம் மத்திய தொல்லியல் துறை சில முக்கியமான இடங்களை மாநில தொல்லியல் துறைக்கு கொடுக்க வாய்ப்புள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/some-old-temples-in-tamilnadu-may-get-into-center-s-archeological-department-control-378580.html

டிஸ்கி :

thiruvannamalai-tour-854.jpeg

இன்னொரு உரிமை.. ( ? ).. எலு கொண்டல வாடா வெங்கட்ரமனா.. கோவிந்தா.. கோவிந்தா..!

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தான்... சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி, அரசியல்வாதிகள் பணம் பார்க்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.